ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 15, 2016

தியான வழியைக் கடைப்பிடிப்பவர்கள் குரு காட்டிய வழியில் எப்படி நடக்க வேண்டும்?

இன்று தியான வழியில் வந்த அன்பர்களும் உலகை ஒத்து வரப்படும் பொழுது பிறர் செயலைக் கண்டு வேதனைப்படுகின்றனர். ஆனால், தவறு செய்பவர்கள் திருந்த வேண்டும் என்ற எண்ணங்களை எண்ணுவதில்லை.

உண்மைகளை அறிந்தும் ஞானகுரு சொல்லியும் இவர்கள் பிழைகள் செய்கிறார்கள் என்ற வேதனையைத் தான் வளர்க்க முடிகின்றது.

அவர்கள் மூலத்தை அறிய வேண்டும் மூலக்கூறுகளை அறிய வேண்டும், மூலத்தை அறிந்து அவர்கள் செயல்படவேண்டும் என்று தன் எண்ணத்தை ஓங்கி வளர்க்கின்றனரா? என்றால் இல்லை.

காரணம், நாம் சாங்கிய உணர்வுகளை வளர்த்துக் கொண்ட வலுவின் துணை கொண்டே
பிறர் செய்யும் செயல்களைக் குறையாக எண்ணி
அந்தக் குறை என்ற நிலைகள் பலவீனப்படுத்தும்
வேதனை என்ற உணர்வையே நமக்குள் வளர்க்க முடிகின்றது.

ஆனால், நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் உபதேசித்து  உணர்வின் தன்மையைத் தெளிவாகக் காட்டி வருகின்றோம்.

அதனை வலுக் கொண்டு அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறவேண்டும் என்றும், பிறர் செய்யும் தவறின் உணர்வுகள் நமக்குள் வேதனை என்ற நிலைகள் கொண்டு உட்புகுந்து தீமைகள் நமக்குள் விளைவிக்கா நிலைகள் பாதுகாக்கும் உணர்வினை உங்களுக்கு ஆத்ம சுத்தி என்ற ஆயுதமாகக் கொடுத்துள்ளோம்.

அந்த ஆத்ம சுத்தியை முறைப்படுத்தி உபதேச வாயிலாகப் பதிந்த உணர்வின் தன்மை கொண்டு நினைவு கொள்ளும் பொழுது உங்களுக்குள் அறியாது வந்த தீமைகளை அகற்ற முடியும் என்ற தன்னம்பிக்கை கொண்டு வளர்க்கச் செய்து வருகின்றோம்.

ஆனாலும், அவரவர்கள் தமக்குள் வளர்த்துக் கொண்ட உணர்வின் வினையே அது வலு பெற்ற நிலைகள் கொண்டு அதைச் சீர்படுத்தும் நிலையே மாறி தியான வழியிலுள்ளோரும் இன்று இந்த நிலையில் சிக்குண்டு மீளும் வழி இல்லாது தவிக்கும் பலர் உண்டு.

ஒரு சிலரே இதனின் நிலையை உணர்ந்து அறிந்து
தீமைகளை அகற்றிடும் உணர்வின் வலிமை பெற்று
தன்னுள் தீமை நாடா நிலையும்
தன்னைச் சார்ந்தோருக்கும் தீமைகள் நாடாத நிலையாக
சொல்வாக்காக அவர்கள் பதியச் செய்து வருகிறார்கள்.

இப்படி வளர்ந்து கொண்டுள்ள தியான வழி அன்பர்களும் உண்டு.

ஆகவே, இதை நாம் முதலிலே தெரிந்து கொண்டோம். இனி நாம் தெரிய வேண்டியது என்ன? என்பதைத் தெளிந்து வாழ்க்கையைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கே இதைச் சொல்கிறேன்.

இருள் சூழும் நிலைகளில் இருளைப் பிளந்து
பொருள் காணும் உணர்வை நமக்குள் வளர்த்து
என்றென்றும் மெய்ப் பொருள் கண்டுணரும் நிலையும்
இருளைப் பிளந்திடும் உணர்வின் தன்மை
பேரருள் பேரொளியாக நமக்குள் வளர்க்க முடியும்.