ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 25, 2015

உங்களை உற்சாகப்படுத்துவதற்கு யாம் கொடுக்கும் அருள் பிரசாதம்

“சாமியிடம் (ஞானகுரு) சென்றால் தலைவலி நீங்கிவிடும்” – யாரோ சொன்னார்கள் என்று. இங்கே தபோவனத்திற்கு என்னைத் தேடி வருகிறார்கள்.

நீங்கள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைச் சுவாசியுங்கள். தியானத்தில் அதை  எடுத்தீர்களென்றால் எல்லாம் நன்றாகிவிடும் என்று இங்கே யாம் சொல்கிறோம்.

ஆனால் அவர்களோ, “இல்லைங்க., சாமியிடம் சென்றால் அவரைப் பார்த்தால் தலைவலி நீங்கிவிடும்” என்று சொன்னார்கள். அதனால் வந்தேன்; சொன்னார்கள்.., அதனால் வந்தேன் என்கிறார்கள்.

இங்கே இருந்து தீமையை நீக்கக்கூடிய சக்தியாக துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை தியானித்தில் எடுக்கப் பழகிக் கொண்டு நாளைக்குச் செல்லுங்கள் என்று யாம் சொல்கிறோம்.

"நேரமாகின்றது உடனே போக வேண்டும்" என்கின்றார்கள்.

ஆனால், உடல் சரியில்லை என்று இங்கிருந்து டாக்டரிடம் சென்றால் இருந்து நாளைக்கு பார்த்துவிட்டுப் போங்கள் என்று சொன்னால் என்ன செய்வார்கள்?

நாளைக்கு APPOINTMENT கொடுக்க மாட்டார்கள் என்றால் கிளம்பிச் செல்வார்களா? போகமாட்டார்கள். இருந்து பார்த்துவிட்டுத்தான் போவார்கள்.

ஆனால், இங்கே யாம் உபதேசிக்கும் மெய்ஞானிகளின் உணர்வுகள் தீமையை நீக்கக்கூடிய சக்தி எளிதாகக் கிடைப்பதால் லேசாகச் சொல்லிவிட்டுச் சென்று விடுகின்றார்கள்.

அதாவது, எனக்கு என்னமோ அவர்களால் ஏதோ இலாபம் வருகின்ற மாதிரியும், நான் இருக்கச் சொன்னவுடன் “என்னால் இருக்க முடியாது” என்று சொல்லிவிட்டுப் போய்விடுகின்றார்கள்.

இப்பொழுது யாம் என்ன செய்கின்றோம்? உங்களுக்கு உற்சாகம் ஊட்டுவதற்குச் சில வேலைகளைச் செய்கிறோம்.

யாரோ நான்கு பேர் நல்ல மனதுடன் தபோவன வளர்ச்சிக்காகப் பணம் கொடுக்கின்றார்கள். இங்கே தேடி வந்து அந்த நல்ல மனதுடன் பணத்தை அவர்கள் கொடுக்கின்றார்கள்.

தபோவனத்திற்கு வரும் அனைவரும் உயர்ந்த நிலை பெறவேண்டும்.
அனைவரும் எல்லா நலமும் வளமும் பெறவேண்டும்.
அருள்ஞானம் அனைவருக்குள்ளும் ஓங்கி வளரவேண்டும்
என்ற இந்த ஆசையுடன் அந்தக் காசை எம்மிடம் கொடுக்கின்றார்கள்.

அந்தக் காசைத்தான் யாம் உங்கள் கையில் கொடுக்கிறோம்.

ஏனென்றால், அந்த எண்ணம் அந்த மாக்னட் (MAGNET) அதன் வழி உங்களுக்குக் கிடைக்க வேண்டும். பணம் உங்களுக்குக் கிடைக்கவேண்டும்.  அந்த உற்சாகம் வர வேண்டும் என்று செய்கிறோம்.

இதை நாம் குருநாதர் சொன்ன வழியில் "உங்களை மனிதனுடைய மனோநிலைக்குத் தக்கவாறு நாம் எப்படி இந்த காலத்திற்குத் தக்கவாறு மாற்ற வேண்டும்" என்று உங்களுக்குச் சொல்லிக் கொடுக்கின்றோம்.

வாழ்க்கையில் வரும் தீமைகளை நீக்குவதற்கு அந்த மகரிஷிகளின் அருள்சக்தி ஒவ்வொருவரும் பெறவேண்டும். தியானத்தின் மூலம் அதை எடுக்கப் பழகவேண்டும் என்ற அந்த ஆசையில்தான் இதைச் செய்கிறோம். அலட்சியப்படுத்திவிடாதீர்கள்.

உங்களை நீங்கள் நம்புங்கள்.