ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 28, 2015

விஷ்ணு தனுசை எடுத்துத்தான் தீமைகளை அடக்க வேண்டும்

விஞ்ஞான அறிவிலே பெண்ணை ஆணாக மாற்றுகின்றனர். ஆணைப் பெண்ணாக மாற்றுகின்றனர்.

அதே மாதிரி, பெண்களிடம் அதிகமாக மோகம் கொண்டவர்கள் இருந்தால் இந்த உணர்வுகள் மாற்றப்பட்டு அந்த உணர்வுகள் ஜெயித்தாலும் இந்த உடலுக்குப் பின் எந்த ரூபம் பெற்றாலும் பெண்ணாகத் தான் மாற்றும்.

விஞ்ஞானிகள் இயற்கையில் மனித உடலில் உருவாக்கப்பட்ட தன்மையை எடுத்து அதை அமிலமாக மாற்றி இன்னொரு உடலுக்குள்ளே பாய்ச்சப்படும் பொழுது அந்த அமிலங்களைப் பெருக்கும் தன்மை வருகிறது.

அப்பொழுது பெண் ஆணாகவே மாறுகிறது. அதற்குத்தக்க உறுப்புகளை உருப்பெறச் செய்கிறார்கள். நரம்பு மண்டலங்களை இணைக்கின்றனர்.

விஞ்ஞானிகள் செய்கிறார்கள் இல்லையா?

நமது நுகரும் உணர்வுகள் உறுப்புகளையே மாற்றக்கூடிய சக்தி வரும்போது, ஒருவனின் தீய உணர்வுகளை நுகரப்படும் பொழுது அணுக்களை மாற்றிய உடனேயே உடல்களிலே உறுப்புகள் மாறுகின்றது.

உறுப்புகள் மாறியவுடன் அதற்கேற்ப எண்ணங்கள் மாறும் செயல் மாறுகின்றது. வெறுப்பென்ற நிலைகள் வருகின்றது. இவ்வளவும் நடக்கின்றது.

ன்றாக திடகாத்திரமாக இருக்கின்றவர்கள், பலருடன் பழகப்படும்பொழுது, சில உணர்வுகளை எடுத்தபின், இந்த அணுக்கள் மாற்றமடைந்தபின் உறுப்புகளே சுருங்கிப் போகின்றது.

ஆகையால் நம் உடலுக்குள் தீமையான உணர்வுகள் போகாமல் தடுக்க வேண்டும் இல்லையா? அதற்கு “ஆத்மசுத்தி” என்ற ஆயுதத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்

குறைந்தபட்சம் உங்கள் குடும்பத்தில் இத்தகைய நிலைகள் எதுவானாலும், அடுத்த நிமிடம், அது நம்மை இயக்காமல் தடைப்படுத்திப் பழகவேண்டும்.

இல்லையெனில், நமது உடலில் உள்ள கெட்ட அணுக்கள் சாப்பாடு அதிகம் எடுத்துவிடும்.

சக்திவாய்ந்த துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் சுவாசித்து நமக்குள் சேர்த்து அதைத் தடைபடுத்த வேண்டும்.

ஆறாவது அறிவின் தன்மை கொண்டு விஞ்ஞான அறிவின் ரூபத்தில் நிரூபித்துக் காட்டுகின்றனர்.

ஆனால், மெய்ஞானிகள் நுகர்ந்த உணர்வுகள் நம் உடலின் உணர்வின் மாற்றமும் அடுத்த பிறவியும், ரூபங்கள் எப்படி மாறுகின்றது என்பதைத் தெளிவாகக் கூறுகின்றார்கள்.

நாம் குருநாதருடன் ஆயுள் மெம்பராக இருக்கின்றேன். அவர் ஒளியானார். அவர் வழியைப் பின்பற்றுகின்றேன், நான் ஒளியாகின்றேன். அதே உணர்வை உங்களிடம் சேர்த்து அவருடன் சேர்த்து ஆயுள் மெம்பராக வருகின்றீர்கள்.

ஆயுள்காலம் என்றால் இந்த உயிரின் கடைசி நிலை.

இதைத்தான் இராமாயணத்தில், எண்ணங்களைப் பற்றிச் சொல்வார்கள். நாம் வேதனை என்ற உணர்வை உடலில் பெற்றபின் சிவ தனுசு.

உடலாகி இந்த உணர்வுகள் வலுப் பெற்றுவிட்டால் நல்லதை எடுக்க விடுகின்றதோ? எடுக்க விடவில்லை.

நமது உயிர் விஷ்ணு, துருவ நட்சத்திரம் இந்த உயிருடன் ஒன்றி, உணர்வை ஒளியாக மாற்றியது. பல தீமைகளை வெல்லக்கூடிய சக்தி பெற்றது.

அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும் ஈஸ்வரா என்று இங்கே புருவ மத்தியில் அனுப்பும் பொழுது, இந்த உணர்வுகளை எடுத்து ஒளியாகின்றது. இதற்குப் பெயர் விஷ்ணு தனுசு.

இந்த உணர்ச்சிகள் உடலுக்குள் இரத்தத்தில் கலந்த உடனே, தீமையான உணர்வின் அணுக்களைச் செயலற்றதாக ஆக்குகின்றது.

ஆகையால், வேதனைப்படும் உணர்வை நாம் நுகர்ந்து விட்டால், ஈஸ்வரா என்று புருவ மத்தியில் எண்ணி அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும் என்று இணைத்துவிட வேண்டும்.

அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவாத்மா பெறவேண்டும் என்று சொல்கிற பொழுது, இது விஷ்ணு தனுசு.

பையன் வேதனைப்படுவதைப் பார்க்கும்போது நம்மையும் வேதனைப்படும்படி செய்வதைப் போன்று குடும்பத்தில் இப்படி நிலை வருகிறதென்றால், இது சிவ தனுசு.

எடுத்துக்கொண்ட உணர்வின் தன்மைதான் சொல்லாக வருகின்றது. நாம் கேட்டவுடனே என்ன செய்கிறது? இதே உடலைத்தான் இயக்குகிறது.

ஆனால், நாம் அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் சேர்த்து, உடலுக்குள் படரவேண்டும் என்கிற பொழுது, அந்த விஷ்ணு தனுசு என்ன செய்கின்றது? சிவ தனுசை அடக்குகின்றது.

இவ்வாறு உயிரின் இயக்கத்தால் ஒளியின் சரீரமாக, துருவ நட்சத்திரமாக ஆனான் என்று தெரிந்தபின், தெரிந்தும் அதை விட்டுவிட்டால் என்ன ஆகும்?

எனவே, அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும், எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும். எங்கள் ஜீவான்மா, ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்று தூய்மை செய்யப்படும்பொழுது,
அந்த வலுவைக் கூட்டிய பின்,
அவன் அறியாமை நீங்க வேண்டும்
அவன் பொருளறிந்து செயல்படும் சக்தி பெறவேண்டும்,
சிந்திக்கும் ஆற்றல் பெறவேண்டும்,
தெளிவான மனம் பெறவேண்டும் என்று அவனை எண்ணி
இதை எடுத்தோமென்றால் இதைப் பெருக்கிக் கொள்கின்றோம்.

பெருக்கியபின், நாமும் அந்த துருவ நட்சத்திரத்தைப் போன்று ஒளியின் சுடராக அழியா ஒளியின் சரீரம் பெறமுடியும்.