ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 12, 2015

புதையல் ஆசை கொண்டு அலைபவர்களின் நிலை

அரசூர் என்ற ஊர் சத்தியமங்கலத்திற்கு அருகில் இருக்கின்றது. திப்பு சூல்தான் காலங்களில் படையெடுத்து வரும்பொழுது பணத்தை நிறைய பேர் புதைத்து வைத்திருக்கின்றார்கள்.

முஸ்லீம்களின் படையெடுப்பு வந்துவிட்டது என்று சொத்துக்களைப் புதைத்து வைத்திருப்பார்கள்.

அந்த மாதிரி பதுக்கி வைத்திருந்த இடத்தில் ஒரு குப்பைமேடு இருந்தது. அந்த இடத்தில் புதிதாக வீடு கட்டி இருந்தார்கள். வீடு கட்டியவுடன் வீட்டில் குடியிருக்க முடியவில்லை.

அந்தப் பக்கத்தில் தண்ணீர் வர வாய்ப்பில்லை. ஆனால் குபு குபுவென்று தண்ணீர் வந்து வீடு முழுவதும் நிறைந்துவிடும். வீட்டில் யாரும் படுக்க முடியாது.

படுக்கையை எடுத்துக்கொண்டு வெளியில் வந்துவிடுவார்கள். அவருடைய சம்சாரத்திற்கு புதையல் இருப்பதைக் காட்டும். அந்த உருவம் தெரியும். திடீரென்று மறைந்துவிடும்.

அந்த வீட்டிற்குப் போனதிலிருந்து பையனுக்குக் காய்ச்சல், மலமும் போகவில்லை. நான் சுற்றுப்பயணத்தில் குமாரபாளையம் சென்றிருந்தேன். அங்கு பண்டரி கோவிலில் தங்கியிருந்தேன். அந்தப் பெண்ணின் சித்தப்பாதான் என்னை அங்கு தங்க வைத்திருந்தார்.

அவருடைய மகளுக்கு பழனியில் மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காது என்று கூட்டிக்கொண்டு போகச்சொல்லிவிட்டார்கள்.  சித்தான புதிதில் நான் இருந்த அறைக்குக் கொண்டு வந்தவுடன் எழுந்து கொண்டது. அதிலிருந்து அவருக்கு ஒரு நம்பிக்கை.

நான் திருப்பதிக்குப் போய்விட்டுத் திரும்பி வரும்பொழுது இவரைச் சந்தித்து குமாரபாளையம் வந்தது. குருநாதர் பல அனுபவங்களைப் பெறுவதற்காக எம்மை இங்கு அனுப்பினார்.

குமாரபாளையத்தில் நாற்பது பேர் மந்திரவாதிகள் இருக்கின்றார்கள். அவர்கள் ஊரில் உள்ளவர்களுக்கு பல வேலைகளைச் செய்து விடுவார்கள். அவர்கள் எல்லாம் இங்கு வருவார்கள்.

அங்கு அந்தக் காய்ச்சலான குழந்தையைக் கூட்டிக்கொண்டு வந்திருந்தார்கள். பையன் எட்டு நாட்களாக மலம் கழிக்கவில்லை என்று சொன்னார்கள்.

அவர்கள் வீட்டில் ஆடு கோழி எது விருந்தாலும் இறந்துபோய்விடும்.

இங்கு வந்து சிறிது நேரம் தியானம் செய்தவுடன் மலம் வெளியேறியது. அது அடுப்புக்கரி போன்று கருப்பாக இருந்தது. அதற்குபின் காய்ச்சல் விட்டு நன்றாகி விட்டது.

அப்பொழுது இவர்கள் இருக்கும் நிலையை தியானத்தில் குருநாதர் காட்டினார். விபூதி கொடுத்து 48 நாட்கள் தியானமிருங்கள் என்று சொல்லி அனுப்பினேன்.

தினமும் அவர்களுக்கு விபூதி வரும். குங்குமம் வரும். ஏதேதோ பிரசாதங்கள் வந்து விழும். ரூபாய் வரும். நான் இங்கு இருக்கின்றேன், இவைகளைச் செய்யுங்கள் என்று சொல்லும்.

அந்த 48 நாட்களும் தினம் வரும் பிரசாதத்தை குமாரபாளையத்திற்கு அனுப்பிக்கொண்டிருந்தார்கள். 48 நாட்கள் ஆனவுடன் நான் அங்கு வருகின்றேன் என்று சொல்லியிருந்தேன்.

அந்த 48 நாட்களில் அங்கு நடந்த நிகழ்ச்சிகள் என்ன என்றால், குடுகுடுப்பைக்காரர்கள் மற்றவர்கள் இங்கு புதையல் இருக்கிறது. நாங்கள் எடுத்துக்கொடுக்கிறோம். சரிபங்கு கொடுத்துவிடுங்கள் என்று கேட்டிருக்கின்றார்கள்.

முதலில் புதையல் எடுக்க வந்த ஒருவர் ஏதோ விரித்து வைத்து செய்திருக்கின்றார். எல்லாம் தீப்பிடித்து எரிந்துவிட்டது. அந்த பயத்தில் அவர் இறந்து போய்விட்டார்.

48 நாட்கள் ஆனவுடன் அங்கு சென்றேன். அங்கு நடந்த நிகழ்ச்சிகளை எல்லாம் காட்டியது.

அந்த வீட்டுக்காரரின் சிறிய மாமனார்தான் என்னை ங்கே கூட்டிச் சென்றது. இரவு நான் பூஜை அறையில் படுத்துக் கொண்டேன். அவர் வெளியில் கட்டிலில் படுத்துக் கொண்டார்.

அந்த வீட்டுக்காரருக்கும் அவரது மனைவிக்கும் அங்கு நடக்கும் நிகழ்ச்சிகளைக் காட்சியாகக் காட்டினேன்.

வெளியில் படுத்திருந்த அந்த வீட்டுக்காரரது சிறிய மாமனாரின் உடலில் பூனை மாதிரி வந்து விழுந்திருக்கின்றது. எழுந்து பார்த்த பொழுது பாம்பாக மாறி இருக்கின்றது. பாம்பாக மாறி கீழே விழுந்தவுடனே குழந்தை மாதிரி கத்தியிருக்கின்றது.

அங்கிருந்து எழுந்து ஓடி வந்துவிட்டார். அங்கிருந்தவர்களுக்கு எல்லாம் இந்த பூதம் என்ன செய்யுமோ? என்ற எண்ணம் வந்துவிட்டது. பின்பு அங்கு உள்ள நிலைகளையெல்லாம் எடுத்துச் சொன்னேன்.

எங்களுக்குப் புதையல் வேண்டுமென்று கேட்காதீர்கள், எங்களுக்கு நல்ல ஆசிகளைக் கொடுங்கள் என்று கேட்கும்படி உபதேசித்தேன்.

எல்லோருக்கும் ஆசிர்வாதம் கொடுத்துவிட்டு அங்கிருந்து போய்விட்டேன். அதிலிருந்து தினமும் இவர்களுக்கு வேண்டியதெல்லாம் கிடைக்கும்.

அங்கு இருக்கும் புதையலைக் காட்டி, அங்கு காசுகள் சில இருப்பதைக் காட்சி கொடுத்தது. அந்த இடத்தில் பார்த்திருக்கின்றார்கள். அதை எடுத்து இதை என்ன செய்வது என்று என்னிடம் காட்டினார்கள்.

இது உங்கள் மூதாதையர் வைத்திருந்ததுதான் இதை நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னேன். இன்னும் எங்கெங்கோ இருக்கின்றது என்று சொல்கின்றார்கள் என்றார்கள்.

நீங்கள் ஆசைப்படாதீர்கள், உங்கள் காசு உங்களுக்கு வந்துவிட்டது. அங்கு இருப்பதை எடுக்க வேண்டும் என்ற எண்ணம் வேண்டாம். ஆசி மட்டும் இருந்தால் போதும் என்று சொல்லுங்கள் என்று சொன்னேன்.

ஆனாலும் இவர்கள் தினமும் ஏதாவது கேட்கிறது. சோற்றுக்கு இல்லாமல் கஷ்டப்படுகின்றேன் என்று கேட்கின்றது. அரிசி, பருப்பு, ஜீனி, காபித்தூள் எவ்வளவு வேண்டுமோ அந்த அளவிற்கு வந்துவிடும்.

இது மட்டும் போதாது என்று கேட்டால் ஒரு மாதத்திற்கு வேண்டிய சரக்கு எல்லாம் கொடுத்துவிட்டு சம்சாரம் கழுத்தில் இருக்கும் செயினை எடுத்துக்கொள்ளும்.

அது மட்டுமில்லாமல் அவர் பாக்கெட்டில் 100 ரூபாய் நோட்டு வைத்திருந்தால் அன்று என்ன சரக்கு வந்திருக்கின்றதோ அதற்கு வேண்டிய சில்லறை போக மீதமிருக்கும்.

முழு நோட்டு வைத்திருந்தால் அரிசி பருப்பு காசு போக மீதம் பாக்கெட்டில் இருக்கும். இப்படி நடந்தவுடன் இவர் பயந்துவிட்டார். அரிசி பருப்பு வருகின்றது. ஆனால் அதற்குரிய காசை வாங்கிக் கொள்கின்றார் என்று என்னிடம் சொன்னார்கள்.

இனிமேலாவது கேட்காதீர்கள் என்று சொன்னேன்.

ஒரு நாள் தபோவனத்தில் என்னைச் சந்தித்து ஏதாவது கேட்டால் உடனே கிடைக்கின்றது. ஆனால் வைத்திருக்கின்ற காசு காணாமல் போய்விடுகின்றது நான் என்ன செய்வது என்று கேட்டார்.

அப்படியெல்லாம் இருக்காது என்று சொன்னேன்.

நீங்கள் பாருங்கள் என்று ரூபாயை மடியில் வைத்துக்கொண்டு உட்கார்ந்தார். அன்று பிரசாதமாக பாசுமதி அரிசி வந்து விழுந்தது. அந்த அரிசியைப் போட்டுவிட்டு இங்கு ரூபாய் எடுத்துக் கொண்டது.

இதையெல்லாம் பார்த்துவிட்டு அவர் தம்பி எனக்கு இந்த வீடுதான் வேண்டும் என்று சொல்லிவிட்டார். இந்த வீட்டிற்கு வந்தபின், அவருக்கும் அந்தப் புதையல் கண்ணுக்குத் தெரிகின்றது.

ஐயப்ப பக்தர்களைக் கூட்டி பஜனைகள் பாட ஆரம்பித்தார். கடைசியில் அவர் நிலையும் என்ன ஆனது?

அவரிடம் இருந்த பணம் எல்லாம் எப்படிப் போனது என்றே தெரியவில்லை. எல்லாம் போய்விட்டது.
நான் ஐயப்பனை வணங்கி வந்தேன்.
ஆனால், இப்படிச் செய்துவிட்டார் என்று புலம்ப ஆரம்பித்துவிட்டார்.

பின்பு, பெந்தேகொஸ்தே அவர்களைக் கூட்டி இயேசு தான் எனக்குக் கடவுள் என்று அந்த பஜனைகளைப் பாட ஆரம்பித்தார். பின்பு அந்த வீட்டையும் காலி செய்துவிட்டார்.

இதையெல்லாம் குரு காட்டிய நிலைகளில் நான் அனுபவபூர்வமாகத் தெரிந்துகொண்டேன்.

அதாவது, எந்த ஆசை கொண்டு ஒருவர் இருந்தாலும்
அவர் உடலில் விளைந்த உணர்வுகளை
சூரியனின் காந்தசக்தி செடி கொடிகளில் விளைந்ததை
எடுத்து வைத்த மாதிரி எடுத்து வைத்துக்கொள்ளும்.

அந்த உடலைவிட்டுப் பிரிந்த ஆன்மா இன்னொரு உடலுக்குள் புகுந்தாலும் அது பிறவியின் நிலைகள் கொண்டு ஆடு மாடாகப் பிறந்தாலும், அவர் உடலி விளைந்ததை சூரியன் கவர்ந்து அலைகளாக வைத்துக் கொள்ளும்.

இது மனித இனத்தில் பட்டவுடன் அது இயக்கும்.

மந்திரம் செய்வது எல்லாம் இது மாதிரி தான். ஆக, துர்மரணம் அடைந்த மனிதர் எந்தெந்த எண்ணத்தில் இருந்தனரோ அதே உணர்வுள்ள ஆன்மா ஒரு உடலுக்குள் வந்தால் அதன்படியே ஆட்டிப்படைக்கும்.