ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 12, 2015

பிருகு மகரிஷி

(பக்கம் 5-10)
இப்பொழுது, உபதேசத்தின் வாயிலாக, எல்லா மகரிஷிகளின் அருள் சக்தியை நீங்கள் எல்லோரும் பெறவேண்டுமென்று, நமது குருநாதர் காட்டிய அருள் வழியில், சொல்வடிவமாக உங்கள் செவிகளில் கேட்கச் செய்து, இந்த உணர்வின் அலைகளை, உங்கள் உடலில் பதிவு செய்கின்றோம்.

அப்படிப் பதிவு செய்ததை, நீங்கள் துருவ நட்சத்திரத்தின் பேரருளை எண்ணி, அந்த அருள் சக்தியைப் பெறவேண்டுமென்று ஏங்கி இருந்தால், யாம் உபதேசித்து அருளிய மெய்ஞானிகளினுடைய அருள் சக்திகள், உங்களுக்குள் ஆற்றல் பெறுகின்றது.

இப்பொழுது நாம் சாதாரண மனிதர்களிடத்தில் தொடர்பு கொண்டு பேசுகின்றோம், சண்டை போட்டுக் கொள்கின்றோம், அல்லது சந்தோசமாக இருக்கின்றோம்.
ஏதாவது ஒன்றை நினைவுபடுத்தியவுடன்
அந்த எண்ணங்கள் நமக்குள் தோன்றி,
அவர் பேசிய எண்ணங்கள் ஆத்திரமோ, கோபமோ, பயமோ,
இதைப் போன்ற நிலைகளில்
நாம் தொடர்ந்து அதைப் பேச ஆரம்பித்துவிடுகின்றோம்.

இவைகள் எல்லாம், ஒரு மனிதனுக்குள் பதிவு செய்து கொண்ட இந்த நினைவை, நாம் சண்டை போடும் பொழுதும், பேசும் பொழுதும், இந்த உணர்வுகள் ஒவ்வொருவருக்குள்ளும் பதிவாகி விடுகின்றது.

அப்படிப் பதிவான உணர்வுகளை மீண்டும் நினைவுபடுத்தும் பொழுது, உதாரணமாக நாம் பாசமுடன் இருந்து நினைவுபடுத்தினால், பாசமான உணர்வை நாம் சுவாசித்து, பாசத்திற்குத் தக்கவாறு அன்றைய செயல் பேச்சு இருக்கும்.

அதே சமயத்தில், ஒருவருடன் கோப நிலைகளில் பேசி இருந்தால், அந்தக் கோபத்தில் அவருடை பேரைச் சொல்லி, (அவர் நமக்கு இடைஞ்சல் செய்திருப்பார்)
அவரை நினைவுபடுத்தியவுடன்,
சண்டை போட்ட உணர்ச்சியின் உணவுகள் தூண்டப்பட்டு,
அவரின் உணர்வைச் சுவாசித்து,
ஆத்திரத்துடன் நாம் பதில் சொல்ல ஆரம்பிப்போம்.

அதே சமயம், அதே உணர்வுகளை நாம் வியாபாரத்தில் உட்கார்ந்து நினைவுபடுத்தினால், சரியான பதில் கொடுக்க மாட்டோம். ஏனென்றால், நமக்குள் வெறுப்பான எண்ணங்களைத் தோற்றுவித்தவருடைய உணர்வுகளைச் சுவாசிக்கும்போது இந்த உணர்வின் எண்ணம் நமக்கு முன்னால் நிற்கின்றது.

அதாவது நாம் எதை எண்ணுகிறோமோ, அந்த உணர்வின் அலைகள்
நம் உடலைச்சுற்றி கவசமாக இருக்கும். 
ஆக அதுதான் முன்னாடி இருந்து,
நம்மை சுவாசிக்கச் செய்து
எந்த குணத்தில் இருந்தோமோ, அந்த குணத்தைப் பாதுகாக்க
அதன்வழி ஞானத்தைக் கொடுக்கும்.

இப்பொழுது கோபமான நிலைகளில் நாம் பேசினால், அந்தக் கோபத்திற்குத் தகுந்தவாறு தப்பு செய்திருப்போம். இப்படிச் செய்ததனால்தான் நாம் இப்படிச் செய்தோம் என்ற,  அந்த உணர்வு, தன்னைப் பாதுகாத்துக் கொள்ளக்கூடிய உணர்வின் ஞானத்தைப் பேசும்.

இதைபோன்றுதான், நம் உடலில் எந்தெந்த குணங்களில் தன்மை இருந்தாலும், அதை நாம் நினைவுபடுத்தும்போது, இந்த உணர்வுகள், ஆற்றல் பெற்று, உடனே சுவாசித்து, அது செயல்படுத்துகின்றது.

பல நிலைகள், நாம் தவறு செய்யாமலே உருவாகின்றன. நாம் தவறு செய்யவில்லை. நாம் வயிறு நிறைய சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது, பிறர் நம்முடன் சண்டை போட்டதன் நினைவுகளை  நாம் கொண்டுவந்தவுடன், அன்று நமக்கு அஜீரணமாகின்றது; அல்லது, சாப்பிட்ட ஆகாரத்தை சரியாகச் செயல்படுத்துவதில்லை.

ஏனென்றால்,   நம் உடலில் அனைத்து குணங்களின் செல்கள் பதிவாகியிருக்கின்றது. நாம் எந்த குணத்தைச் செயல்படுத்துகின்றோமோ, அந்த உணர்வான செல்கள் அனைத்துமே, ஒருங்கிணைந்து இயக்கப்படும்போது,
அதற்குத்தக்கவாறுதான் நம் நரம்பு இயங்குவதும்
நம் சுவாசம் இயங்குவதும்,
குடல் இயங்குவதும் நம் எண்ணங்கள் பேசுவதும் எல்லாமே.

இப்பொழுது கோபமாகப் பேசுபவரைப் பார்த்தால்
உச்சிமுடி நட்டமாக எழுந்து நிற்கும்.

பயம் கலந்த ஒரு கோபத்தை உண்டாக்கப்படும்போதும்,
சில்லென்ற நிலை ஏற்படும்படி,
எதிர்பாராத ஒரு பயத்தை உண்டாக்கினாலும்,
நம் தலைமுடி கிர்ரென்று மேலே எழுந்துவிடும்.
இவையெல்லாம் இந்த  உணர்வின் செல்கள் இயங்குவதனால்தான். நாமல்ல!  நாம் இதைத் தடுத்து நிறுத்த முடியாது.

இப்படித்தான் இயற்கையிலேயே, நம்மை அறியாமலேயே, பல நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இதை நாம் அறிந்துணர்ந்து, நம் உடலில் வரக்கூடிய பிணிகளைப் போக்க வேண்டும்.

அதற்கு என்ன செய்வது? அதற்குத்தான், இப்பொழுது தியானத்தின் நிலைகளை யாம் உங்களுக்கு உணர்த்துகின்றோம்.

மெய்ஞானிகள் அவர்கள் விண்ணுலக சக்தியைப் பெற்று, அவர்கள்  உடலிலே வளர்த்து, அவர்கள் உயிருடன் வாழ்ந்த காலங்களில், அவர்கள் உடலில் ஆற்றல்மிக்க சக்திகளைப் பெற்று, தன்னையறியாமல் ஆட்டிப்படைக்கும் சில உணர்வுகளை அவர்கள் அடக்கினர்.
நமக்கு கோபம் வருகிறதென்றால் நம்மையறியாமல் துடிப்போம். ஆனால், ஞானிகள் மத்தியில் அந்த உணர்வுகள் சென்றதென்றால்,
அது அவர்களுக்குள் அடங்கி,
அதற்குண்டான ஞானத்தை ஊட்டி,
எந்த செயல் வேண்டுமோ,
அந்தச் செயலுக்குண்டான வலுவை ஊட்டும்.

ஆகவே, அந்த மெய்ஞானிகளின் ஆற்றல்மிக்க சக்திகளை நாமும் தியானத்தின் மூலமாகப் பெற்று, நமக்குள் வரும் துன்பங்களிலிருந்து மீள்வோம், மற்றவர்களையும் மீட்டிடுவோம். எமது அருளாசிகள்.
(பக்கம் 10-13)
கோபம் வரும் நிலைகளில், அந்தக் காரமான உணர்வுகள்  நமக்குள்  அதைத் தூண்டச் செய்து,  அந்த காரமான நிலைகளில் நாம் பேசி,  பிறிதொன்றைத் தாக்கச் செய்யும். ஏனென்றால்,   அதை ஜீரணிக்கக்கூடிய சக்தி நம்மிடத்திலே இல்லை.

ஆக,  மெய்ஞானிகள் விண்ணின் அந்த ஆற்றல் மிக்க சக்தியைத் தனக்குள் எடுத்துக்கொண்டதனால், அவர்களுடைய புலனறிவுகளில் எது சிக்கினாலும்,   அவர்களுடைய உணர்ச்சிகளைத் தூண்டுவதில்லை. 

ஆனால், எத்தகைய குணங்கள் கொண்டு பிறர் செய்தாலும், அந்த உணர்ச்சிகள் தூண்டாவண்ணம் அவர்களுக்குள் வந்தவுடன் அடங்கி, அவர்களது ஆற்றல் மிக்க சக்திகள் இவருடைய பார்வையில் பட்டவுடன், அவர்களுக்குள் இருக்கக்கூடிய கெட்ட குணங்கள் அப்படியே அடங்கிவிடும்.

இப்பொழுது நாம் நல்லவர்களாக இருக்கிறோமென்றால், ஒருவர் சிறு குற்றமான செயலைச் செய்கிறார், நம்மீது ஒரு பழிச்சொல்லைச் சொல்கிறார்,  அந்தச் சொல் வெறும் வார்த்தைதான்.  
அதை நமக்குச் சொன்னவுடன், அந்த உணர்ச்சிகள் தூண்டப்பட்டு
நமக்குள் அடக்கமுடியவில்லை.
இவ்வாறு சொல்கிறானே! என்று பதட்டமும்,
பயங்கரமான விளைவுகளும் ஏற்பட்டுவிடும்.

ஏனென்றால் அவர் செய்த உணர்வுகள் நமக்குள் இயக்கி, தவறு செய்யும் நிலைகளுக்கு எங்கிருந்து அந்தத் தவறு வந்ததோ, அவர்களை அழிப்பதற்கு வருகின்றது.

இல்லாததைச் சொல்கிறான் என்ற உணர்ச்சியின் வேகம் தூண்டுகின்றது.

ஆனால் அதே சமயம் இந்த உணர்ச்சியுடன் சேர்ந்து உமிழ்நீராககச் சுரந்து நம் ஆகாரத்துடன் கலந்து விடுகின்றது. இப்படி ஆகாரத்துடன் கலந்தவுடன், அது நம் உடலில் சாப்பிட்டவுடன் சத்தான ஆகாரத்தை ஜீரணிக்கக்கூடிய சக்தியிழந்து, அதனுடைய செயல்களைச் செயலாக்கத் தொடங்கிவிடுகின்றது. அது இரத்தமாக மாறி, நம் தசைகளாக மாறிவிடுகின்றது.

மெய்ஞானிகள் அவர்கள் வாழ்க்கையில் வந்த பெரும் தொல்லைகளை நீக்க, விண்ணின் ஆற்றல்களை அவர்கள் பெற்று, அவர்கள் உடலிலே வந்த சில நிலைகளையெல்லாம் மாற்றி, உயிராத்மாவை ஒளியாக மாற்றிச் சென்றனர். 

அவர்கள் எதை எதையெல்லாம் அவர்கள் மூச்சாலும், பேச்சாலும், சொல்லாலும் அவர்கள் வெளிப்படுத்தினார்களோ, அந்த அலைகள் நம் பூமியில் படர்ந்துகொண்டிருக்கின்றது. அவையெல்லாம் சீக்கிரம் அழிவதில்லை.

நம்மைப்  போன்ற சாதாரண மனிதர்கள் பேசியதெல்லாம், ஆற்றல் மிக்க உணர்வின்  சக்தி கொண்ட வெப்பகாந்தங்கள் தாக்கியவுடன், அது அழித்துவிடும். அந்த உணர்வுகள்
இந்த உணர்வுடன் அதை ஈர்த்துக் கொண்டு,
மற்ற உணர்வுகள் காரத்துடன் காரம் சேர்த்து, காரமாக உருப்பெற்று,
மற்றவர்களைத் தாக்கும் உணர்வாகச் சென்றுவிடும்.

ஆனால், மெய்ஞானியின் சக்தியினுடைய நிலைகளை, அதை மற்ற சாதாரணமான ஒரு அணுவின் தன்மை புவிக்குள் வருவதை அதை செயலிழக்கச் செய்யமுடியாது. ஆகையினால், அந்த ஞானிகளுடைய சக்தியை, மனிதன் சாதாரணமாக எடுக்கமுடியாது.

நீங்கள் நினைத்தவுடன் ஆத்மசுத்திக்கு ‘’ஓம் ஈஸ்வரா’’ என்று உயிருடன் தொடர்பு கொண்டு, அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெறவேண்டும் என்று ஏங்கும்போது   அந்த அருள் சக்தியை நீங்கள் பெற முடியும் என்று, யாம் உங்களுக்கு உறுதியாகச் சொல்கின்றோம்.

காரணம் அவர்கள் எடுத்துக்கொண்ட ஆற்றல்
எவ்வழிகளில் பெற்றார்களோ
அதை அவருடைய நிலைகளை உபதேசித்து,
உங்கள் உணர்வலைகளுக்குள் பதியச்செய்யும்போது,
இந்த உணர்வுகள் உங்களுக்குள் வித்தாக மாறுகின்றது.    
அந்த வித்திற்கு, நீங்கள் துருவநட்சத்திரத்தின் பேரொளியை எடுத்து ஊட்டினால்தான் அந்த வித்திற்குச் சக்தி கூடும். 

அப்பொழுது அந்த ஞானியருடைய உணர்வலைகள், காந்தத்தின் பவர் கூடினால்தான் அந்த ஞானியருடைய எண்ண அலைகளுக்கு சக்தி கூடுகின்றது.

அப்பொழுது நாம் ‘’ஓம் ஈஸ்வரா’’ என்று உயிருடன் தொடர்பு கொண்டு, நாம் நினைவுபடுத்தி, அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நான் பெற வேண்டுமென்று ஏங்கி, அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை என் ஜீவாத்மா பெற வேண்டுமென்று எண்ணி, நம் உடலுக்குள் எல்லா அணுக்களிலும் செலுத்தமுடியும்.

அவ்வாறு எல்லா அணுக்களிலும் செலுத்தி, சர்வ தீமைகளையும் நீக்கி, அனைத்தையும்  ஒளியாக மாற்றி, நாம் மகிழ்ந்து வாழ முடியும், பிறவியில்லா நிலை என்ற அழியா ஒளிச் சரீரம், நாம் அனைவரும் பெற முடியும். எமது அருளாசிகள்.

(பக்கம் 14-18)
உதாரணமாக, இப்பொழுது ஒருவர் தவறு செய்திருக்கிறார், கோபமான  உணர்வை நம் புலனறிவு இழுத்திருக்கின்றது. அப்பொழுது அந்த கோபத்தை நினைவுபடுத்தி கண்ணிலே பட்டவுடன், நாம் இங்கே பார்த்தவுடன்,
அடுத்து ஒருவர் சந்தோஷமாகச் சொன்னால்,
இந்தப் புலனறிவு அவரைப் பார்க்கும்போது,
அவர் சொல்வதைச் சரியாகக் கிரகித்து இழுக்காது. 

ந்தக் கோபத்தின் மேல், இந்த உணர்வின் நினைவலைகள் பட்டு, நாம் செயல்படுத்தும்போது அந்த நினைவலைகள், கண்ணிலே பாய்ந்துகொண்டிருக்கும்.

நம் முன்னால் ஏதாவது சொல்லிக் கொண்டிருந்தால், இந்த உணர்வுகளை அது கிரகிக்கக்கூடிய சக்தி இருக்காது.  மிகவும் கஷ்டமாகத் தெரியும். ஆக, நம் கண்ணின் புலனறிவு அதன் வழிக்குத் தக்கவாறுதான் அதை ஈர்ப்பது.

பாலிலே, சர்க்கரையைக் கலந்து குடிக்கப்படும்போது, எப்படியோ, நாம் நல்லதைப் பெற வேண்டும் என்று ஏங்கிக் கொண்டிருந்தாலும், இதைப்போல கசப்பான உணர்வுகளையும், மற்றவைகளையும் கலந்து நாம் சுவாசிக்கும்போது, நம் உயிருக்குள் பட்டு, இந்தச் சுவையின் தன்மைகள் மாறிவிடுகின்றது.

ஆக இரண்டு எண்ணங்களை நாம் சுவாசிக்கும்போது, அதன் உணர்வுகள் இரண்டுக்கும் மாறுபட்ட நிலைகள் சிதறுண்டு, நம் நினைவலைகளை இயக்கச் செய்கின்றது. இப்படித்தான், நம் உடலின் உறுப்பின் நிலைகளும், மற்ற நிலைகளும் இயங்குகின்றது.

இதை நாம் கட்டுப்படுத்துவதற்குத்தான்,   மெய்ஞானியின் அருள் சக்தியை உங்களுக்குள் பதியச் செய்கின்றோம்.  மகரிஷிகளின் அருள்சக்தி நாம் பெற வேண்டும் என்று அதற்குள் நினைவைச் செலுத்திப் பழகிக்கொண்டால், அப்பொழுது  உடனடியாகக் காற்றிலிருந்து, இந்த ஞானியருடைய அருள் சக்தியை நாம் பெற முடிகின்றது.  அவ்வாறு சுவாசித்து, நம் உடலில் வரக்கூடிய துன்பங்களைப் போக்க இது உதவும்.

இதற்கு நமக்கு ஆற்றல் தேவை. அதற்குத்தான் நாள் முழுவதும் உழைத்தாலும், நாம் ஒவ்வொரு நாளும் ஒரு பத்து நிமிடம் அந்த சக்தியைப் பெருக்கவேண்டும்.

ஏனென்றால் ஞானியருடைய, மகரிஷிகளுடைய அருள்சக்தியை உங்களுக்குள் பதியச் செய்திருக்கின்றோம். ஒரு பத்து நிமிடமாவது, அந்த ஞானியருடைய அருள் சக்தியை எடுத்து, மாற்றிப் பழகிக்கொள்ள வேண்டும்.

அப்படி பழகிக் கொண்டால், நம் வாழ்க்கையில் எப்பொழுது எங்கே, எத்தகைய நம் எண்ணங்களைத் தடுமாறச் செய்யக்கூடிய நிலைகள் வந்தாலும், அப்பொழுது நாம் ‘’ஓம் ஈஸ்வரா’’ என்று உயிரை எண்ணி, ‘’ஆத்மசுத்தி’’ செய்து நம் உடலுக்குள் நினைவைச் செலுத்தும்போது, நம்மையறியாமல் ஆத்திரப்படக்கூடிய நிலைகளிலிருந்து, பயப்படும் நிலைகளிலிருந்து, விடுபடுகின்றோம். நாம் சிந்தனை குறைந்திருக்கக்கூடிய நிலைகளிலிருந்து விடுபடுகின்றோம்.

நம் உடலில் வியாதிகள் இருந்தாலும், அந்த வேதனையான எண்ணங்கள், நமக்கு பல முறைகளில் பல தீமைகளை உருவாக்குகின்றது. ஆக, வேதனை என்பது விஷம். இதைப்போன்று நம்மையறியாது பல நிலைகள் உருப்பெற்றுவிடுகின்றன.

இதையெல்லாம் மாய்க்கவல்ல சக்தி அந்த சப்தரிஷிகளுக்கு உண்டு. “சப்தரிஷிகள் தங்களுக்குள் விளையை வைத்ததை நாம் பெறுவதுதான் இந்த ஆத்மசுத்தி.
 
‘’ஆத்மசுத்தி’’, ‘’ஓம் ஈஸ்வரா’’ என்று உயிரை புருவ மத்தியில் எண்ணி, ‘’அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா’’ என்று ஏங்கி, அது ங்கள் ஜீவாத்மா பெற அருள்வாய் ஈஸ்வரா’’ என்று உங்கள் உடலுக்குள் செலுத்துங்கள்.

நம் புலனறிவு கொண்டு முன்னால் பார்ப்பது, 
வெகு தூரத்தில் உள்ளதைக் கூர்ந்து கவனித்து,
அப்பொருளை நாம் காண முயற்சிக்கின்றோம்.
அந்தப் பொருளின் சத்தின் தன்மையை, நாம் அறிகின்றோம்.

நம் உணர்வுக்குள் அனைத்து நிலைகளிலும் கண் இணைக்கப்பட்டு இருக்கின்றது,   நாம் எதை நினைவுபடுத்துகின்றோமோ, அந்த உணர்வின் நினைவலைகள் உயிரிலே பட்டு, அதன் வழிதான் தெரியும்.

அதைப்போல அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும்  நாம் பெறவேண்டும், என்ற ஏக்க உணர்வுடன் கண்ணின் நினனைவைச் செலுத்திவிட்டு, துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் ங்கள் ஜீவாத்மா பெறவேண்டுமென்று, உள் நினைவிலே உங்களுக்குள் செலுத்தப்படும்போது,  அனைத்து அணுக்களிலும் அந்த சக்தி இணைகின்றது.

இந்த ஆத்மசுத்தியை உங்கள் வாழ்க்கையில் எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்துங்கள். நீங்கள் தனித்து நாள் முழுவதும் இருந்து பெறமுடியாத சக்தியை, ஒரு பத்து நிமிடம் துருவ நட்சத்திரத்தின் பேரொளியை நீங்கள் பெற்றபின், அடுத்து,
உங்கள் வாழ்க்கையில் எதிர்ப்படும்,
நீங்கள் சந்திக்கும் துன்பங்களிலிருந்து உங்களைக் காத்துக்கொள்ள
இந்த ஆத்மசுத்தி என்ற ஆயுதம் உங்களுக்குப் பயன்படும்.
(பக்கம் 26,27,33-35)
மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றியவர்தான் பிருகு மகரிஷி. தனக்குள் ஆற்றல் மிக்க சக்திகளைக் கொண்டு, கூடுவிட்டுக் கூடு பாயும் நிலையும், மற்றொன்றை அறியும் நிலைகளையும் அறிந்துணர்ந்தவர் தான் பிருகு மகரிஷி. ஆனால், அதையெல்லாம் கற்றுக் கொண்டபின், அவர் உண்மையை உணர்கின்றார்.

நாம் எதை எதைச் செய்தாலும், புழுவிலிருந்து மனிதனாகத் தோன்றியபின் இத்தகைய வித்தைகளும், அரச போகங்களும் அனைத்தும் இந்த உடலில் இருக்கும் வரையிலும்தான், அனுபவிக்க முடிகின்றது.

ஆனால், இந்த உடலிலிருந்து
நாம் எந்தெந்த எண்ணங்களை எடுத்துக் கொண்டோமோ,
அந்த எண்ணத்தை நம் உடலின் சத்தாக அது மாற்றி,
அந்த உணர்வின் இயக்கமாக
நம் உயிராத்மாவில் சேர்ந்துவிடுகின்றது
என்ற பேருண்மையை அறிந்தபின் தான், அவர் அத்தகைய நிலைகளிலிருந்து விடுபடுவதற்காக வேண்டி, முயற்சி செய்தார்.

ஏனென்றால், உயிர் எப்படி ஒளியாக இருக்கின்றதோ, அதைப் போன்று தன் உணர்வின் நிலைகளை உயிரின் துடிப்பின் நிலைகள் கொண்டு, மற்ற உணர்வின் தன்மை கொண்டு உடலை இயக்குவதும், சொல்வதும், பேசுவதும், உடலிலே வளர்க்கச் செய்வதும் உயிரின் வேலை.

அதைப் போன்று, அந்த இயக்கங்களின் நிலைகள் கொண்டு உடல் அமைப்பும், மனிதன் தன் எண்ணத்தால் பேசும் செயல் அமைப்பு இருந்தாலும், தான் சுவாசித்த அந்த உணர்வின் சத்தினுடைய நிலைகள் நம் சொல்லாலே, செயலாலே, உடலில் அது எப்படி உருமாறச் செய்கின்றது? எண்ணங்களை செயலாக்கச் செய்கின்றது?

இதைப் போன்று உணர்வின் சத்துக்கள் நம் உடலுக்குள் சென்று, தன் உயிராத்மாவில் சேர்க்கப்படும் பொழுது, உணர்வுக்கொப்ப அடுத்து, மாற்று சரீரம் பெறுகின்றது, என்ற உண்மையை அறிந்துணர்ந்தார் பிருகு மகரிஷி.

பிருகு மகரிஷி அரசனாக இருக்கும் பொழுது அரச போகங்கள் செய்தாலும், மந்திர தந்திரங்களுடைய நிலையை எடுத்துக் கொண்டாலும், நாம் பிறிதொரு மனிதனின் செயலை அறிந்துணரப்படும் பொழுது, அவர் உடலில் இருக்கக் கூடிய உணர்வின் ஆற்றலைத்தான் சுவாசிக்கின்றோம்.

அப்படி சுவாசித்து, நம் உடலிலே சேர்த்து அந்த உணர்வின் நிலைகள் கொண்டு நாம் இன்றைய வாழ்க்கையை நடத்தினாலும்,
பிறிதொரு உணர்வின் சத்துக்கள்,
பிறிதொரு மனிதனின் தீய சத்துக்கள்
நம் உடலில் விளைந்து, தன் உயிராத்மாவாக மாறும் பொழுது,
பின், இந்த சரீரத்திற்கு ஏற்படும் நிலையை உணர்ந்தபின் தான்
அவர் மாறுபடுகின்றார்.

அப்பொழுதுதான், பிருகு கடும் தவமிருந்து, சூரியனின் காந்த சக்தியைத் தனக்குள் சேர்த்து, தன் உணர்வின் சக்தியை அன்று அகஸ்திய மாமகரிஷி  காட்டியது போன்று, தன் உடலின் உணர்வை ஒளியாக மாற்றி விண் சென்றார்.

இன்று கம்ப்யூட்டர் என்ற நிலைகள் கொண்டு, பல அலைவரிசையில் இன்று கணக்குகள் போடுவதும், துரித நிலைகள் கொண்டு மின்னலைகள் கொண்டு பல நிலைகளை அறிந்துணர்ந்து, எடுத்துக் கொண்ட இந்த உணர்வுகள் அதிலே சேர்க்கும் கதிரியகக அலைகள், கருவிலே இருக்கக்கூடிய குழந்தைகளுக்கும் அது ஊடுருவி, மனிதனுடைய சிந்தனையை அழிக்கக் கூடிய நிலைகளில், இன்று விஞ்ஞான அறிவு சிதறுண்டு போய்விட்டது.

நாம் குறுகிய காலத்தில் எல்லா அணுக்களையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டுமென்று விரும்புகின்றோம். இப்பொழுது மைக் எப்படி நாம் பேசும் உணர்வலைகளைப் பெரிதாக்குகின்றதோ, இதைப் போன்றுதான், நம் உடலில் இருக்கக் கூடிய காந்த அலைகள், நாம் எந்த அளவிற்கு எடுக்கின்றோமோ, நம் உள் அறிவுக்குள், புலனறிவுக்குள் நுண் அலைகளாகக் காட்டி உணர்த்துகின்றார்கள்.

இதைப் போன்றுதான், இந்த உணர்த்தும் நிலைகள் கொண்டு நாம் ஐந்து புலன்களிலும் எதனின் உணர்வின் தன்மை இயக்குகின்றதோ, அதைச் செயலிழக்கச் செய்து, நாடு பிடிக்கும் நிலை வருகின்றது.

முந்தைய கால அரசர்கள் மனிதனுக்குள் மந்திரங்களை ஏவி, அந்த மந்திர அலைகளைப் பரப்பச் செய்து, அவர்கள் எண்ணங்களைத் திசை திருப்பியிருந்தாலும், அது அவ்வளவு கடினமான நிலையில்லை. ஆனால், அது மனித உடலுக்குள் சென்று, மனித உணர்வுக்குள் சென்று, மனிதனாக மாற்றும் நிலையாகத்தான்  கடந்த கால ஆட்சியின் காலங்களில் இருந்தது.

அது சிறுகச் சிறுக விரிவடைந்து, புறப் பொருளினுடைய நிலைகளில் இன்றைக்கு மனிதன் அலைவரிசையில் சேர்க்கப்பட்டு, இன்று மனிதன் மனிதனென்ற உரு நிலையையே அழிக்கக்கூடிய அளவுக்கு, விஞ்ஞான நிலைகள் அடைந்துவிட்டது.

யாம் பயமுறுத்துகின்றோம் என்று எண்ன வேண்டாம். இதை ஏற்கனவே பல முறைகள் சொல்லியிருக்கின்றோம். இதைப் போன்று, எந்த நிமிடம், எந்த நேரத்திலும், யுத்தம் நிகழலாம்.

ஆனால், மனிதனுக்குக் காய்ச்சல் இருந்தால், இப்பொழுது ஜன்னி மாதிரி வரும். நவீன நிலைகளில், நோய்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றது.

இதைப் போன்ற நிலைகள் பரவிக் கொண்டிருக்கும் இந்தக் காலத்தில் நாம் நம்மைக் காப்பாற்ற நம்முடைய குருநாதர் காட்டிய அருள்வழிப்படி, இன்று பிருகு மாமகரிஷி, மெய் ஒளியின் ஆற்றலைக் கொண்டு தன் உயிராத்மாவை ஒளியாக மாற்றி,
இன்று சப்தரிஷி மண்டலத்தில்
ஒரு அங்கமாக சுழன்று கொண்டிருக்கும்
அந்த பிருகு மகரிஷிகளின் அருள் சக்தியை
நாம் அனைவரும் பெறலாம்.

(பக்கம் 38-41)
நம் வாழ்க்கையில் எப்பொழுதெல்லாம் துன்பங்கள் நம்மைச் சாடுகின்றதோ, நம் எண்ணங்களை எப்பொழுது சிதறச்செய்கின்றதோ,
அந்தச் சந்தர்ப்பத்தில் நாம் ஒவ்வொருவரும்
“ஈஸ்வரா” என்று உயிருடன் தொடர்பு கொண்டு
அந்த மகரிஷிகளின் அருள்சக்தியை நாம் பெற வேண்டுமென்று
ஏங்கி தியானிக்க வேண்டும்.

அப்படி அதை ஏங்கும் போது, இந்தக் காற்றிலே இருக்கக்கூடிய மெய்ஞானியின் அருள்சக்தியை, உங்கள் சுவாசத்திற்குள் கிடைக்கச் செய்து அந்த சுவாசத்தாலே உயிருடன் மோதும்போது, அந்த உணர்வின் சத்துக்கள் உணர்வலைகளாக உடலில் பாய்கின்றது.

அப்படிப் பாயும் பொழுது, அந்த மகரிஷிகளின் அருள் உணர்வின் சத்துக்கள், உமிழ்நீராக உங்கள் ஆகாரத்துடன் ஆகாரமாக அது கலந்து, இந்த உணர்வின் அலைகள் உங்கள் உடலுக்குள் ஒவ்வொரு அணுக்களிலும் ஊடுருவுகின்றது.

இவ்வாறு, நமக்குள் அந்த மெய்ஞானிகளின் அருள்சக்தியைக் கலக்கச் செய்தால் தான், நாம் விதியை மதியால் வெல்ல முடியும். ஏனென்றால் இத்தகைய நிலைகளில், விதியை மதியால் வெல்ல முடியும் என்பதை, நீங்கள் அறிந்துணர்ந்து கொள்ளுங்கள் .

இன்று வாழ்க்கையில், பெருமையும் போற்றுதலும் எல்லாம் கிடைக்கும், சொல்லிலே மிக ஆனந்தமாகவும் இருக்கும் .மகிழ்ச்சியும் பெறும்.

ஆனால், இன்று போற்றுதலுக்குரிய நிலைகளில் நாம் இருந்தோம் என்றால் அந்தப் போற்றல் நம்மைப் படுபாதாளத்தில் தள்ளிவிடும். போற்றுதலை நாம் போற்றிக் கொண்டிருப்போம். நம்மையறியாமலேயே, அது நம்மை இழி நிலைகளுக்கு இட்டுச்செல்லும். பேருண்மையை அறியாத நிலைகளில் நாம் விட்டு விடுவோம்.

ஒருவரைப் போற்றினால்
போற்றுதலுக்குத்தக்கவாறு பொருள் கிடைக்கும்.
இந்த உடலுடன் நாம் மகிழலாம்.
ஆனால், நம் உள்ளத்தாலே
நமக்குள் எடுக்கும் மெய்யுணர்வின் தன்மையை
நாம் இழந்து விடுவோம்.

இதைப்போன்ற நிலைகளிலிருந்து நாம் விடுபட்டு, இன்று நமக்கு உணர்த்திய அந்த மெய்ஞானிகள் சப்தரிஷி மண்டலங்களாக முப்பத்து முக்கோடி தேவாதிதேவர்கள் என்று சொல்லிக்கொண்டிருக்கும் அவருடைய சத்தான ஆற்றல்கள் மிதந்து கொண்டிருக்கிறது .
அந்த ஆற்றலை நாம் பெறுவதற்கு, துருவ நட்சத்திரத்தினுடைய பேரருளை நாம் பெற்று, நம் உணர்வின் சக்தியை விண்ணை நோக்கி ஏகி, அந்த விண்ணின் ஆற்றலை நாம் பெறுவதற்குண்டான முயற்சிதான், நாம் எடுக்கும் இந்த தியானத்தின் நிலைகள்.

ஆகையினாலே, ஒவ்வொருவரும் நேரத்தையும், காலத்தையும் விரயமாக்காதபடி, ,ஆற்றல்மிக்க அரும் பெரும் அந்த மகரிஷிகளின் அருள்சக்தியை நீங்கள் சுவாசியுங்கள்.

அதை அப்படி சுவாசித்து, உங்களை அறியாமல் துன்பப்படுத்திக் கொண்டிருக்கின்ற, தீய உணர்வினுடைய நிலைகளை செயலிழக்கச் செய்து, உங்கள் உடலுக்குள் ஆற்றல் மிக்க மெய்யுணர்வின் சக்தியைக்கூட்டி, அந்த நல்ல உணர்வின் தன்மைகள், உங்களை மகிழச் செய்யட்டும்.

அந்த மகிழச்செய்யும் உணர்வுகள் நமக்குள் ஒளியாக மாறி,
இந்த உடலை விட்டு நாம் சென்றாலும்,
ஒளிச்சரீரமாகப் பெறும் தகுதியை நாம் ஏற்படுத்திக்கொள்வோமாக.
எமது அருளாசிகள்.


(பக்கம் 41-46)
வாழ்க்கையில், நம்மை அறியாமல் சலிப்பு, சஞ்சலம், சங்கடம், கோபம், குரோதம், அவசரம், ஆத்திரம், பயம், இதைப் போன்ற உணர்வின் சத்துக்கள் அது ஒவ்வொரு நொடிப்பொழுதும், நம் உடலுக்குள் சேர்கின்றது.

உதாரணமாக, நாம் கோபமாகப் பேசும் பொழுது, இந்த உணர்ச்சியின் தன்மை கொண்டு, நாம் கண்ணிலே எப்படி ஏகுகின்றோமோ, அதைப் போன்று, அங்கங்களை அசைக்கப்படும் பொழுது,
கோபத்தாலே, ஆத்திரத்திலே மடக்கி அசைக்கப்படும் பொழுது,
நாம் எடுத்துக் கொண்ட இந்தச் சுவாசத்தின் அலைகள்
வேகமாக நம் உடலில் ஊடுருவிச் செல்லும் பொழுது,
நாம் மடக்கிய அந்த அங்கங்களின் நிலைகளில் தடைப்பட்டு,
சிறிது நேரம் தேங்கித்தான் செல்லும்.

ஏனென்றால், உணர்ச்சியின் நிலைகள் நாம் எதை எடுக்கின்றோமோ,
“உயிர்” மடக்கும் நிலைகளில் நின்று
இதை அசைத்து அடைத்துச் செல்லும்.
இவ்வாறு, ஆத்திரமூட்டும் உணர்வின் சத்துக்கள் அங்கே தேங்கிவிட்டால், அடிக்கடி இத்தகைய சம்பவங்கள் வாழ்க்கையிலே நாம் சந்திக்கும் துன்பத்தின் நிலைகள், நாம் செயல்படும் இந்த அங்கங்களை இயக்கி செயல்பட்டுப் பேசும் பொழுது, அந்த விஷமான சத்துக்கள் அங்கங்கு தேங்கி, கண்களில் வாதமும், மூட்டுவாதமும், கீழ்வாதம் போன்ற நோய்களை நாம் காண்கின்றோம். அங்கு பட்டாலே புண் போன்று வரும்.

ஒருவர் ஆத்திரத்துடன் செயல்படுத்தும் பொழுது, வேதனை கொண்ட உணர்வுடன் ஆவேசத்துடன் நாம் சுவாசிக்கும் இந்த உணர்வுகள், நம் அங்கங்களை அசைக்கும்போது,
அந்த அதிர்ச்சி ஊடுருவிச் செல்லும் போது,
உணர்வின் சத்துக்கள் அங்கங்கே வடித்து,
இத்தகைய நிலைகளை உருவாக்கிவிடுகின்றது.

ஆனால், நாம் தவறு செய்யவில்லை. சந்தர்ப்பத்தால், இப்படிப்பட்ட ஊடுருவக் கூடிய நிலைகளிலிருந்து நம்மை மீட்டுக் கொள்வதற்கு, எந்த ஆயுதத்தை வைத்திருக்கிறோம்?

இன்றைக்கு அவர்கள் திட்டினார்கள், பதிலுக்கு, நாம் பேசினோம். இன்று சமமாக நாமும் பேசினோம் என்ற வகைகளில்,
அவர் ஒரு தரம் சொன்னார்.
நான் பத்துத் தரம் சொன்னேன்,
நான் விடுவேனா?
அவர் ஒரு தரம் நம்மை உதைக்கிறேன் என்று சொன்னால், நாம் அவரைப் பத்துத் தரம் உதைக்க வேண்டும் என்ற அந்த உணர்வின் தன்மையை நாம் சுவாசிக்கும் பொழுது, நம் அங்கங்களும், உடல்களும், உறுப்புகளும் வேகமாகத் துடித்திருக்கும்.

ஆனால், எந்த உணர்ச்சியின் தன்மை கொண்டு துடித்திருக்கின்றோமோ, நம் செவியின் புலனறிவிலே நாம் பேசும் பேச்சு, இந்த அதிர்வான நிலைகள், அந்தக் காந்த அலைகள் அதிர்வினாலே, நுண்ணிய அலைகளுடன் மோதல் வந்துவிடும்.

அப்படியாகும் பொழுது, காதிலே இரைச்சலும், காது செவிடாகும் தன்மையும், பிறர் சொல்வதைக் காதால் கேட்க முடியாத நிலைகளும் வந்துவிடும்.

அதைப் போன்று உணர்வின் வசப்பட்டு, நாம் எடுத்துக் கொண்ட நிலைகள் “காட்-டிராக்ட்” என்ற நிலைகள் போல, நாம் பல உணர்வுகள் தாக்கப்படும் பொழுது, இந்த அதிர்வின் வேகம், ஒத்த உணர்வலைகளை நாம் எடுத்தோமோ, இதைப் போன்று, கண்விழிகளிலே விழிப்படலங்களாக, எட்டுப் படங்களாகத் தெரிய வந்துவிடும்.

இன்று, திரைப்படத்தில் காட்டும் நிலைகள், ஊடுருவி, பல பாகங்களாகப் பிரித்து, ஒரு விளக்கை பத்து விளக்காகவும் காட்டும், ஒரு விளக்காகவும் காட்டும்.

அதைப் போன்று, ஒரு பொருளை நீங்கள் கூர்ந்து கவனித்தால், உதாரணமாக, ஒரு லைட் எரிகின்றதென்றால், அதனுடைய அலைகளை ஒன்றாகக் குவிக்காதபடி,
விழிப்படலம் பலவீனமடைவதினால்,
அலைகளைச் சிதறுண்ட நிலைக்ளுக்கொப்ப
நாம் ஒரு பொருளின் தன்மையை
நாம் பார்க்க முடியாத நிலைகள் ஏற்படுகின்றது.

இதுவெல்லாம், நாம் தவறு செய்யாமலயே வரக்கூடிய துன்ப நிலைகள். சுத்தமான பாலாக இருந்தாலும், அதற்குள் நாம் விஷத்தைச் சேர்த்தவுடன், அதற்குத் தக்கவாறு, அதைக் குடித்தால் நம் உடலைத். துடிக்கச் செய்கின்றது. செயலையெல்லாம் செயலிழக்கச் செய்கின்ற நிலைகளும், இருக்கின்றது.

இதைப் போன்று, நாம் உடலில் சேர்த்த இத்தகைய விஷத்தின் தன்மைகள், கை கால் குடைச்சலில் இருந்து, மேல்வலியிலிருந்து, கண்களின் பல நிலையிலிருந்து, ஒரு சில வலிகள் போன்று நாம் அதிகமான சிந்தனையோ, கவலையோ எடுத்துக் கொண்டால், அந்த உணர்வின் தன்மை நாம் சிந்திக்கத் தொடங்கியவுடன், உடலிலே தலைவலி, தாங்க முடியாத நிலைகளாக வந்துவிடுகின்றது.

ஆனால், தலைவலியின் வேதனையின் நிலைகள் கொண்டு, நாம் இன்று எந்தச் சிந்தனையும் இழக்கச் செய்து, அதற்குத் தக்கவாறு உணர்வுகளை நாம் சுவாசித்து, நம் உடலிலே அத்தகைய அணுத்திசுக்களை வளர்க்கச் செய்து, அந்த அணுத்திசுக்களினுடைய நிலைகள் உயிராத்மாவில் சேர்க்கப்படும் பொழுது, நம்முடைய அடுத்த சரீரம் விஷமான உயிரினமாக, நாம் இப்பொழுது தயார் செய்து கொள்கிறோம்.

இன்று நாம் விஞ்ஞான அறிவு கொண்டு, மரங்களுக்குப் பல சத்தினுடைய நிலைகள் சேர்க்கப்பட்டு, பல இனங்களுடைய நிலைகளை உருமாற்றுகின்றனர்.
இதைப் போன்று உயிரினங்களில்,
பல சத்தின் தன்மைகளைக் கலக்கச் செய்து,
அதில் கருவின் தன்மையில் தனியாகப் பிரித்து,
அந்தக் கருவை மற்ற சத்துடன் கலக்கச் செய்து,
அந்தக் கருவுடன் ஒன்றாகப் பிணைந்து,
உருத்தன்மையினுடைய நிலைகள் கொண்டு,
அது வளர்க்கச் செய்வதற்கு,
ஒரு மிருகமோ, ஒரு மாட்டிலோ, உருவிலோ, ஓர் உடலில் வைத்து,
கருவின் தன்மை உருமாற்றமாகி, உருமாறி,
உடலின் அங்கங்களை உருமாறச் செய்கின்றனர், விஞ்ஞானிகள்.

இதைப் போன்றுதான், நாம் எடுத்துக் கொண்ட ஒவ்வொரு உணர்வின் சத்தும், உடலில் நாம் சுவாசித்து, அந்த எண்ணங்கள் கொண்டு நாம் செயல்பட்டாலும்,
நம் உடலில் சேர்த்துக் கொண்ட அந்த உணர்வின் சத்துக்கள்
நம் உடலில் அணுத்திசுக்களாக விளைந்து,
அணுத்திசுக்களின் நிலைகள்
உயிராத்மாவில் சேர்க்கப்படும் பொழுது,
அடுத்த உடலை நாமே சிருஷ்டித்துக் கொள்கின்றோம்.

பல கோடிச் சரீரங்களில் தீமையிலிருந்து விடுபடும் உணர்வுகளைச் சுவாசித்து சுவாசித்து,
பரிணாம வளர்ச்சியில், மனிதனாக முன்னேறி வந்த நாம்,
இனி அடைய வேண்டியது பிறவியில்லா நிலை.

அந்த நிலையை அடைய வேண்டுமென்றால், நம் வாழ்க்கையில் வரும் தீமைகளை அகற்ற, மெய்ஞானிகளின் அருள் ஆற்றலை நமக்குள் சேர்த்து, அதை நாம் துடைத்துப் பழகவேண்டும்.
          
மெய்ஞானிகள், தீமையை வென்று உணர்வை ஒளியாக மாற்றிச் சென்றவர்கள். ஆக, அந்த மெய்ஞானிகளின் உணர்வை நாம் நமக்குள் வளர்த்தால், நம் உயிர் அனைத்தையும் ஒளியாக மாற்றிவிடும், நம்மை அழியா ஒளிச் சரீரம் பெறச் செய்துவிடும் நமது உயிர்.

அதற்குத்தான் இந்த உபதேசமும், தியானமும், ஆத்ம சுத்தி என்ற பயிற்சியும். எமது அருளாசிகள்.
(பக்கம் 51-53)
கடலில், சிற்றலை பெரிய அலை வருவது போன்று, மனித வாழ்க்கையில் இன்று ஒவ்வொரு நிமிடத்திற்கு நிமிடம், எண்ணப் புயல்கள் மாறிக் கொண்டே தான் இருக்கும். அலைகள் மாறிக் கொண்டே தான் இருக்கும்.

ஒரு நண்பனைப் பார்த்தவுடன், மகிழ்வோம். அடுத்த நண்பன் வந்தவுடன், அவன் நம்மைத் திட்டினான் என்றால், உடனே “அப்படியா சொன்னான்?” என்று, ஆத்திரத்துடன் செயல்பட்டுவிடுவோம்.

அடுத்து வரக்கூடிய நண்பனுடைய நிலைகளில், கொடுத்த பாக்கியை கொடுக்க முடியாது என்று சொன்னவுடன், “இருக்கட்டும் நான் பார்க்கிறேன்” என்ற ஆத்திர உணர்வுடன் செயலபடுவோம்.

அடுத்து ஒரு நண்பன் வந்தவுடன், இன்னொருவர் சொல்கிறார். “உங்களைப் பைத்தியக்காரர், ரொம்ப மோசமான ஆள், இரண்டில் ஒன்று பார்க்கிறேன்” என்று சொல்கின்றார். அதை நாம் கேட்டவுடனே, நம் மானமே போய்விடும் என்று, சோர்வான நிலைகளில் இந்த அலைகள் வந்து பலவீனமான நிலைகள் ஏற்படும்.

இப்படி, ஒரு நிமிடத்திற்கு நிமிடம், மற்றவர்களை நாம் சந்திக்கும் பொழுது, அந்த உணர்வலைகள் நமக்குள் தாக்கப்பட்டு, அந்த உணர்வாலே அத்தகைய அலைகள் மோதிக் கொண்டேதான் இருக்கும்.

சாதாரண வாழ்க்கையில், காற்று மண்டலம் எப்படி இந்தப் பூமியிலே சுழலுகின்றதோ, இதைப் போன்று நாம் எடுத்துக் கொண்ட உணர்வுக்கொப்ப நம் உடலில் அலை அலையாக மாறி வருவதை, சுதிவாய்வு என்று சொல்கின்றனர்.

இவ்வாறு நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகளெல்லாம், உடலாக மாறி, அந்த உடலின் தன்மையினுடைய நிலைகள் ஆவியாக மாறி, அது ஒலியாக மாறி, நமக்குள் அது சொல்லாகவும், செயல்களாகவும் செயல்படுகின்றது.

உங்களுக்குள் இருக்கக்கூடிய எந்த உணர்வை எண்ணினாலும், அந்த எண்ணத்தைச் சிறிது நேரம் சுவாசிக்கும் பொழுது, அந்த உணர்வின் அலைகள் உங்களை அலைக்கழிக்கின்றது. நடக்கின்றது. அதன் வழிகளிலே உங்களைச் செயலாக்குகின்றது.

இதை நாம் அறிந்துணர்ந்தவர்கள்தான். அறியாதவர்கள் யாரும் இல்லை. எல்லோருக்கும் தெரியும். புதிதாக யாம் ஒன்றும் சொல்லவில்லை.

நம் உடலிலே எந்தெந்த குணங்களை
அதிகமாக, ஆழமாகப் பதிவு செய்திருக்கின்றோமோ,
அது அதிவேகமாக முன்னனியிலே வந்து,
அதைச் சுவாசித்து, அதன் வழிகளில் தான் நாம் நடக்கின்றோம்.

இன்று வரையிலும் நாம் சாந்தமான நிலைகளில் இருக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். அதையும் தாங்காதபடி, ஆழமான உணர்வுகள் நமக்குள் பதிவாகி உள்ளதை, நாம் உந்தச் செய்யும் பொழுது, அந்த உணர்வை முன்னனியிலே வைத்தவுடன், அந்த உணர்வுகள் நமக்குள் வேகமாகக் கூடி, அதன் வழிகளில்தான் நாம் நடக்கின்றோம்.

இதைப் போன்று நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்தக் காலத்திலே தான், நமது குருநாதர் காட்டிய அருள்வழிப்படி, உங்களுக்குள் வரக்கூடிய துன்பத்தைப் போக்க,
உங்களை நீங்கள் நம்புங்கள்,
தாய் தந்தையை தெய்வமாக எண்ணுங்கள்,
தாய் தந்தையருடைய அருளால், எல்லா மகரிஷிகளின் அருள் சக்தியையும் எளிதில் நீங்கள் பெறமுடியும்.

யாம் சொல்லும் முறைப்படி, இந்த ஆத்ம சுத்தியையும் தியானப் பயிற்சியையும் நீங்கள் தொடர்ந்து கடைப்பிடிக்கும் பொழுது, உங்களுக்குள் வரும் எல்லாத் தீமைகளிலிருந்தும் விடுபடும் அருள் ஆற்றல் கிடைக்கும். வாழ்க்கையில், நீங்கள் எல்லோரும் மகிழ்ந்து வாழ முடியும். எமது அருளாசிகள்.
(பக்கம் 54-59)
ஒவ்வொரு நிமிடமும், நம்மை அறியாமல் பிறர் கோபமாகப் பேசினாலும், “ஈஸ்வரா” என்று உயிரை எண்ணி, அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை நாங்கள் பெறவேண்டும் என்று ஏங்கி, உடலுக்குள் செலுத்த வேண்டும்.

இப்படி, உடலுக்குள் நினைவைச் செலுத்திவிட்டு, உங்களைத் திட்டியவர்கள், அவர்கள் எங்களைப் பார்க்கும் பொழுது, நல்ல சொல்லாகச் சொல்லும் ஆற்றல் பெறவேண்டும் என்று எண்ணுங்கள்.

அவர்கள் எதையெல்லாம் பேசி, எதையெல்லாம் உங்களுக்குச் சங்கடமாக எண்ணுகின்றனரோ, அந்த சமயம், நீங்கள் ஆத்ம சுத்தி செய்து கொண்டு,
அவர்கள் எதைச் செய்ய வேண்டுமென்று விரும்புகின்றனரோ,
அது அவர்களுக்கு நடந்து,
“அவர்கள் உணரும் ஆற்றல் பெறட்டும்”
என்று நீங்கள் எண்ணுங்கள்.

இப்பொழுது, உங்களை ஒருவர் திட்டிக் கொண்டே இருக்கிறார் என்று சொன்னால், நாம் சுத்தமாகக் கேட்டுக் கொண்டே இருந்தபின், “திட்டியது அனைத்தையும், நீங்களே வைத்துக் கொள்ளுங்கள், எனக்கு வேண்டாம் என்று நாம் அவரிடம் சொல்லிவிட்டால், அது நம்மைப் பாதிக்காது.

நீங்கள் ஆத்ம சுத்தியைச் செய்துவிட்டு, திட்டியவரிடம், “நீங்கள் எப்படியெல்லாம் திட்டினீர்களோ, அதையெல்லாம் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள், எனக்கு வேண்டாம்” என்று
சிரித்த முகத்துடன் சொல்லுங்கள்
அந்த உணர்வுகள் உங்களை ஆட்டிப் படைக்காது.

நாம் ஆத்மசுத்தி செய்து இவ்வாறு சொன்னவுடன், “ஆ” என்று அவர்கள் இழுதால் போதும், அவர்கள் அறியாமல் செய்த தவறை, நாம் விட்ட மூச்சலைகள் அவருக்குள் ஊடுருவிச் சென்று, அவர்கள் செய்த தவறை உணர்த்தும். இதை உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்.

இதைப் போன்று, நீங்கள் ஒவ்வொருவரும் குடும்பத்திலோ, மற்ற நிலைகளிலோ, நம்மையறியாமல், அடிக்கடி பேசுகின்றனர். அவர்கள் உடலில் சேர்த்த்துக் கொண்ட இந்த உணர்வின் சத்துக்கள், அவர்கள் உடலில் வேலை செய்துவிடுகின்றது. அவர்கள் கட்டுப்படுத்த வேண்டுமென்றாலும், முடியவில்லை.

இப்பொழுது நாம் ஒவ்வொருவரும் நம் அனுபவத்தில் பார்க்கலாம். பையன் மேல் நாம் வெறுப்பாக இருப்போம். அவன் நல்லது செய்டுவிட்டு வந்தாலும்கூட, லேட்டாகிவிட்டது என்கிற பொழுது, அவனை நினைத்தவுடன், “அவன் எப்பொழுது பார்த்தாலும், இப்படித்தான் இருக்கிறான்”. ஒரு காரியத்திற்குப் போனால், லேட்டாகி, அந்தக் காரியத்தை முடித்தவிட்டு வருவான், என்று சொல்வோம்.

ஜெயித்துவிட்டு வந்தான் என்றால் கூட, ஏற்றுக் கொள்ள மாட்டோம். அவன் சென்று வந்த காரியம் என்ன என்று கேட்காதபடி, அவன் இப்படித்தான், எப்பொழுது சென்றாலும் லேட்டாக வருவான், என்று அவனைத் திட்டவும், பேசவும், ஏசவும்தான் செய்வோம்.

அவன் உண்மையைச் சொன்னாலும்கூட, ஏற்றுக் கொள்ள மாட்டோம். பொய் சொல்கின்றான் என்ற எண்ணம்தான் தோன்றும். அதைக் கேட்டு அறிவதற்கு தாமதமாகும்.

நாம் நல்லது நினைத்தாலும்கூட, நம்மையறியாமல்
அந்த உணர்வுகளை நிற்கச் செய்வோம்.
அந்த உணர்வின் தன்மை
அவனைக் கெட்டவனாக மாற்றச் செய்யும்.

இதைப் போன்று, ஒவ்வொரு குடும்பத்திலும், ஒருவர்பால் கெடுதலான எண்ணங்களை வைத்துவிட்டால், அந்த உணர்வின் பார்வையிலே பேசும் பொழுது,
நாம் என்ன நல்லது செய்தாலும்,
அந்த எண்ணங்களுக்குத் தப்பாகத்தான் தெரியும்.

ஆகையினாலே, அதைப் போன்ற நிலைகளை மாற்ற வேண்டுமென்றால், “ஆத்ம சுத்தியை” நாம் முதலில் செய்து கொள்ள வேண்டும்.

ஆத்ம சுத்தி செய்து முடித்தபின், அவர்கள் பேசிய முறைகள், அவர்கள் செய்த முறைகள், அவர்கள் உணர்ந்து, அவர்களே அதை அனுபவித்துத் தெரிந்து கொள்ளும் ஆற்றல் பெறட்டும், என்ற இந்த உணர்வின் நிலைகளை நீங்கள் மனதில் எண்ணிக் கொள்ளுங்கள். வாயிலே சொல்லிவிடாதீர்கள். சொன்னால் வம்பு வந்துவிடும்.

உங்கள் எண்ணத்தால் இப்படி வளர்க்கச் செய்யும் பொழுது, அந்த உண்மையின் தன்மையை அவர்கள் அறியும் தன்மை வந்துவிடும். ஏனென்றால், அவர்கள் உணர்ச்சிவசப்பட்டு, சோர்வோ, மனச் சஞ்சலமோ, வெறுப்போ அடைந்தால், இதைப் போன்ற உணர்வுகள் நம்மைப் பாதிக்காது.

நாம் எடுத்துக் கொண்ட இந்த ஆத்ம சுத்தியின் நிலைகள்
நம்மை அறியாமையிலிருந்து மீட்க,
நமக்கு அந்தச் சக்தி உதவும்.

குடும்பத்திற்குள், இதைப் போன்ற நிகழ்ச்சிகள் நிறைய உண்டு. மாமியாருக்கும், மருமகளுக்கும் பிடிக்காது. மகனுக்கு, அப்பாவைக் கூடப் பிடிக்காது. அந்த அளவிற்கு, இன்று பெரும்பகுதி ஆகிவிட்டது.

இன்றைக்குக் குழந்தைப் பருவத்திலிருந்தே, அந்த நிலைதான். இதைப் போன்ற நிலைகளெல்லாம், நாம் ஒவ்வொரு நிமிடமும் நம் உணர்வலைகளை மாறாமல் இருப்பதற்கு, இந்த ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தை ஒவ்வொரு நிமிடமும் பயன்படுத்தத் தவறாதீர்கள்.

யாம் வெறும் வார்த்தையில் சொல்கிறோம், என்று எண்ணி விடாதீர்கள். ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தை உங்களுக்கு வாக்காகக் கொடுத்து, உங்களுக்குள் வரக்கூடிய துன்பத்தைப் போக்குவதற்கு, இப்பொழுது உங்களுக்குள் பதிவு செய்திருக்கிறோம்.
(பக்கம் 61-64)
வாரத்தில் ஒருநாள் கூட்டுக்குடும்ப தியானமிருந்து, தியான முறைப்படி அனைவரும், வீட்டிலிருக்கக்கூடிய மூதாதையர்களின் உடலை விட்டுப் பிரிந்த உயிராத்மாக்கள் சப்தரிஷிமண்டலத்துடன் இணைய வேண்டும், அந்த உயிராத்மாக்கள் ஒளிச்சரீரம் பெற வேண்டும் என்று அந்த குடும்பத்திலுள்ளோர்கள் எண்ண வேண்டும்.

அப்படி எண்ணியபின், சப்தரிஷி மண்டலங்களிலிருந்து வரக்கூடிய பேரருள் பேரொளி, நாங்கள் பெற வேண்டும், என்று உங்கள் உடலுக்குள் நினைத்துவிட்டு,
நம் வீட்டில் அனைத்து இடங்களிலும்
அந்தச் சக்தி படர வேண்டுமென்று,
உங்கள் வீட்டின் பதிவிலே,
நீங்கள் எடுத்துக்கொண்ட அலைகளை,
நம் பூமியிலே ஈர்த்து படரச்செய்கின்றீர்கள்.
அப்படி படரச்செய்தபின், குழந்தைகளும் அம்மா, அப்பா அருளாசியால் ‘’நலமும் வளமும் பெற வேண்டும்’’, ‘’கல்வியில் ஞானம் பெற வேண்டுமென்று’’ அம்மா, அப்பா அருளாசி பெற நாம் பழகிக் கொடுக்க வேண்டும்.

நம் குழந்தைகள், வெகுதூரத்தில் ஹாஸ்டலில் படித்தாலும், இப்படி எண்ணி விட்டுத்தான் செயல்பட வேண்டும். வாரத்தில் ஒருநாள் கூட்டுக்குடும்ப தியானமிருக்கிறோம் என்ற நினைவை, அவர்களுக்கு ஊட்டிப்பழக்க வேண்டும். இதைப்போல, குழந்தைகளுக்கு நாமும் அந்த அருளாசியைக் கொடுக்க வேண்டும்.

சூரியன், ஒரு குடும்பத்தினுடைய நிலைகளாக, மற்ற கோள்கள் எத்தனை உணர்வுகள் குணங்கள் கொண்டிருந்தாலும், ஒரே அமைப்புக்குள் ஒன்று சேர்ந்து பிரகாசிக்கின்றது.
அதைப்போல, ஒரு குடும்பத்திற்குள் பத்து குழந்தைகளின் எண்ணங்கள் மாறுபட்டிருந்தாலும், தாய் தந்தையை வணங்கும் நிலைகள் கொண்டு,
ஒரே இனமான எண்ணங்களுக்கு வரும் போது
தாயின் சொல்லைக் கேட்கும்.
அந்தக் குழந்தைகளுடைய உணர்வை மாற்றி,
நல்வழியில் இட்டுச் செல்லவும் இது உதவும்.

ஆக, தாய் தந்தையரிடம் அந்தப் பாசங்கள் வளர்ந்தபின், நாம் இந்த உடலை விட்டுச்சென்ற பின், அந்தக் குழந்தைகள் யாம் இப்பொழுது காட்டிய வழிகொண்டு,
தாய் தந்தையருடைய உயிராத்மாக்களை,
சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்யும் நிலையாக,
ஒளிசரீரம் பெற வேண்டும் என்று அவர்கள் ஏங்கி,
உடனடியாக விண் செலுத்த வேண்டும்.

எந்தச் சாமியாரும் விண் செலுத்த முடியாது
அவர்கள்தான் விண்செலுத்த முடியும்
எந்த ஜோசியமும் நம்மை அனுப்பாது,
எந்த உடலின் சரீரமாக இருக்கிறார்களோ
அந்த குழந்தைகள்தான் விண்ணிலே செலுத்த வேண்டும்.

இன்று விஞ்ஞானிகள் எப்படி அலைவரிசைகளை வைத்திருக்கின்றனரோ, அதேபோன்று தாய் தந்தையரின் உணர்வின் அலைகள்தான், தசைகளாக இன்னும் இங்கு இயங்குகின்றது

அவர்கள் உணர்வின் சத்துக்கள் அணுக்களாக இருக்கும்போது, அந்த அணுவின் உணர்வுகளாகத்தான் இருக்கும். அதன் வழி கொண்டு, நாம் துடிப்பான இருக்கமான தொடர்புகொண்டு, சப்தரிஷி மண்டலங்களின் உணர்வின்  சத்துக்களை நாம் பெருக்கி, அவர்களுடன் இணைக்கச்செய்து உயிராத்மாவை விண் செலுத்த வேண்டும். அப்பொழுதுதான் அந்த ஒளிசரீரத்தைப் பெறமுடியும்.

இன்று கூட்டுக்குடும்ப தியானம் இருப்போர் அனைவருமே, பௌர்ணமி தியானத்தில் உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிராத்மாக்களை சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டுமென்று இணைக்கச்செய்ய வேண்டும்.

பௌர்ணமி தியானத்தன்று, சப்தரிஷி மண்டலம் நம் அருகிலே வருவதனாலே,
இந்தப் புலனறிவுக்குள்
அந்த அலைகளின் எண்ணங்களைச் சிக்கச்செய்து,
உங்கள் ஆற்றலை அதனுடன் இணைக்கச் செய்து,
அந்த ஒளியான எண்ணங்கள் உங்களுக்குள் தோற்றுவிப்பதனாலே,
அடிக்கடி நாம் அந்த எண்ணங்களை எடுக்கும் போது,
சப்தரிஷிகளின் அருள்சக்தியைப்பெற முடிகின்றது

அந்த ஆற்றல் இல்லாதபடி, நாம் எதையுமே அனுப்ப முடியாது அதைப்போன்று, ஒரே உணர்வுகொண்டு எண்ண அலைவரிசையில், ஒவ்வொருவரும் இந்த கூட்டுத்தியான நேரங்களில் எண்ணி, அந்த சப்தரிஷி மண்டலங்களின் அருள்சக்தி பெற வேண்டுமென்று எண்ணி ஏங்கிவிட்டு, இறந்தவர்களுடைய உயிராத்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டுமென்று, அதை உந்தி அனுப்பவேண்டும்.

அப்பொழுதுதான், அந்த சப்தரிஷி மண்டலத்திலிருந்து வெளிப்படும் ஆற்றல்மிக்க சக்திகளை, நாம் அனைவரும் பெற முடியும்.
(பக்கம் 67-69)
‘’ஓங்காரக்காளி’’ என்று யாம் சொன்ன ஓசோன் திரையையும், இன்று அணு குண்டினால் சிதறடித்துவிட்டார்கள். இதனால், விஷத்தன்மைகள் பூமியில் வந்து படர்ந்து கொண்டிருக்கின்றது.

விஞ்ஞானக் கருவிகள் கொண்டு, விண்ணிலே பல அலைகளைப் பாய்ச்சிக் கொண்டிருக்கிறார்கள். விண்ணிலே பாய்ச்சினால், இங்கே பாதிக்காது என்பது அவர்களுடைய எண்ணம். 

விண்ணிலேயும் விஷத்துகள்கள் பரப்பப்படும்போது, புவியின் ஈர்ப்புக்குள் சுழற்சியில் வரப்படும்போது, அந்த அலைகள் பூமிக்குள் வருகிறது.
அப்படி அலைகள் வரப்படும்போதுதான்,
விஷத்தின் தன்மையை முறியடிக்ககூடிய சக்தி இருந்தாலும்,
மனிதன் விஞ்ஞானத்தினால் செய்யப்பட்ட நிலைகள்
ஒன்றை அழித்துவிட்டு ஒசோன் திரையைக் கிழித்துவிடுகின்றது.
ஆக விண்ணிலே இருக்கக்கூடிய ஆற்றல்கள், துரித நிலைகளில் நம் பூமிக்குள் வரக்கூடிய நிகழ்ச்சிகள், நடந்து கொண்டிருக்கின்றது. அவ்வாறு வரக்கூடிய நிகழ்ச்சிகளினாலே, மனிதனுடைய சிந்தனைகள் குறைந்து கொண்டிருக்கின்றது.

நாமெல்லாம், ஆனந்தமாக இருக்கவேண்டுமென்று எண்ணுகின்றோம். ஆனால், உணர்வுக்குள் வேதனை தாண்டவமாடிக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரி நிலைகளிலிருந்து மீட்டிக்கொள்வதற்கு, நாம் செய்யவேண்டிய ஒரே முறை, அந்த மெய்ஞானியரின் அருளை நாம் பெற வேண்டும்.

இன்று எப்படி ஓசோன் திரை கிழிந்து வருகிறதோ, அதைப்போன்று  மற்ற விஷத்தின் தன்மையை கிழித்தெறியும் தன்மை நாம் பெற வேண்டும். 

நாம் சாதாரண மனிதர்கள் என்று எண்ண வேண்டாம். இவையெல்லாம் சாதாரணமானவைதான். நம்மிடமிருப்பது சாதாரண ஆயுதம்தான், பணவசதியுள்ளவர்கள் யாருமில்லை.

நமக்குள், எண்ணத்தின் வலுவின் தன்மைகளை நாம் பெற வேண்டும். நாம் மெய்ஞானியரின் அருள் சக்திகளைப் பெற வேண்டும்.
நம் எண்ணத்தின் வலுகொண்டு,
தீயசக்திகள் நம்மை அணுகாது
நாம் பாதுகாக்கவேண்டும்.
அந்த உர்வின் ஆற்றல் மிக்க சக்திகளை
நாம் பெற வேண்டும்.
நமக்குள் பெருக்கவேண்டும்.

ஒவ்வொரு நிமிடமும், அலைவரிசையினாலே மனிதனை இயக்க முடியும் என்று விஞ்ஞானிகள் சொல்லுகின்றனர்.. அதைப்போல
மெய்ஞானிகள் அருள்வழிப்படி,
அந்த மெய்ஞானியரின் அருள்ஒளியை நமக்குள் கூட்டி,  
இந்த அலைவரிசைகளை
நமக்குள் பெருக்கிப் பழகவேண்டும். 
அப்படிப் பழகுவதற்குத்தான் இந்த ஆத்மசுத்தியும், பயிற்சியும் கொடுத்தது. எமது அருளாசிகள்.
(பக்கம் 71-73)
ஒவ்வொருவரும் குடும்பத்தில் வேற்றுமையில்லாத நிலைகளில், நாம் இங்கே ஒருங்கிணைந்து, முதலில் குடும்பத்தில் ஒற்றுமையான நிலைகளில் செயல்படவேண்டும். குடும்பத்திற்குள் தாய் தந்தையரை வணங்க, குழந்தைகளுக்குப் பழகிக் கொடுக்க வேண்டும்.

இந்த முறைப்படி நாம் ஓரிடத்திலிருந்து பதிவு செய்து, இந்த ஆற்றலின் சக்தியை, நாம் ஒவ்வொருவரும் கூட்டிக் கொள்ள வேண்டும்.

இன்று விஞ்ஞானிகள் எப்படி, தன்னைத் தற்காத்துக் கொள்வதற்கு பல நிலைகளை விஞ்ஞான ரூபத்தில் செய்கின்றனரோ, அதாவது தன் உணர்வின் அலைவரிசையில், பல விமானங்களையும் எதிர்த்துத் தாக்குகின்றனர். கடும் ஆயுதத்தையும் எதிர்த்து விடுகின்றனர்.

இந்த உடலின் அமைப்புக்குள், ஆத்மாவாக இயங்கும் ஒரு குறிப்பிட்ட தூரத்தின் அருகில் எந்த எண்ணங்கள் இருக்கிறதோ, அதன் அலைகள் நமக்குள் ஈர்க்கும். அப்படி ஈர்க்கப்படும் பொழுது, நாம் பிறருடைய எண்ணங்களைப் பாய்ச்சப்படும் பொழுது, இது ஊடுருவி நம் எண்ணங்களை அழித்துவிடுகின்றது.

ஆனால், அதைப் போல கடுமையான எண்ணங்கள் நம்மைச் சுற்றி சாய்த்தாலும், விஞ்ஞானத்தால் வரக்கூடிய எத்தகைய விஷ அணுத்தன்மையினுடைய நிலைகளையும்,
மகரிஷிகளின் அருள் ஒளியை நமக்குள் பெற்று,
இந்த அலைவரிசையின் உணர்வலைகளை
நாம் எண்ணியவுடன், அந்த அலைகள்
நமக்குப் பாதுகாப்புக் கவசமாக வரவேண்டும்.

நமது பூமி ஓசோன் திரையாக அமைத்து,
விஷத்தின் தன்மையினுடைய நிலைகள்
நம் பூமிக்குள் வராதபடி தடுத்து நிறுத்துகின்றது.

அதைப் போல, சூரியன் தான் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மைகள் விஷத்தன்மையை எதிர்த்து, இது மோதும் அந்த அலைகள் மற்ற “ULTRA VIOLET” என்ற அந்த அலைகளானது
பொங்கியெழுந்து வீசும் அலைகள் கொண்டு
சூரியனை அணுகாதபடி
அது பிரபஞ்சத்திற்கே அனுப்பிக் கொண்டிருக்கின்றது.
இதைப் போல ஆற்றல்மிக்க நிலைகள் போல, நாம் எடுக்கும் இந்த ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தினுடைய நிலைகள் கொண்டு, இன்று இந்த விஞ்ஞானத்தினால் வரக்கூடிய ஒவ்வொரு விஷத்தன்மையினுடைய நிலைகளையும், நாம் விடும் மூச்சலைகளால் மாற்றி அமைக்க முடியும்..

இதைப் போன்று, நம்மைப் பாதுகாக்கக்கூடிய சக்தியாக மெய்ஞானியருடைய உணர்வலைகளை நமக்குப் பாதுகாப்புக் கவசமாக, “ஆத்ம சுத்தி” என்ற அலைகளில் நம்மைச் சுற்றி அந்தக் கவசமாக மாற்றிக் கொள்ளக் கூடிய சக்தியாக, நாம் பயிற்சி செய்து கொள்ள வேண்டும்.
                   
எனென்றால், நாட்டில் யுத்தங்கள் எந்த நிமிடம் வேண்டுமென்றாலும் நடக்கலாம். இந்த அலைவரிசையிலே நாம் இரவில் படுத்துத் தூங்கப்படும்போதும் அந்த மகரிஷிகளை எண்ணி,
அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெறவேண்டும்
என்ற நிலையான நிலைகளை
நம்மைச் சுழலவிட்டுப் பழகவேண்டும்.

அப்படி இருந்தால்தான், இரவிலே விஞ்ஞானிகள் அலைவரிசை என்ற நிலைகளைக் காட்டி, உலக மக்களைச் சூனியமாக்கச் செய்தாலும், நம்மைப் பாதிக்காதவண்ணம் நாம் தப்பித்துக் கொள்ள முடியும்.

இன்று சொத்து, சுகம் எல்லாமே நாம் நினைக்கலாம், ஒரு பிட்ஸ், காக்காய் வலிப்பு மாதிரியான நிலைகள் எல்லோருக்கும் வந்துவிட்டால், நாம் எதைச் செய்யப் போகின்றோம்? எந்த நிலைகளைச் செய்யப் போகின்றோம்? சற்று சிந்தனை செய்து பாருங்கள்.

ஆகவே, யாம் உபதேசிக்கும் இந்த அருள்ஞானிகளின் நிலைகளே, நமக்கு உண்மையான நிலைகள். நாம் சிந்தித்து எடுக்கக்கூடிய இந்த சந்தர்ப்பத்தை நழுவவிடாதபடி, ஆத்ம சுத்தி எனற ஆயுதத்தை எடுத்து, அனைவரும் பழக வேண்டும்.
(பக்கம் 75-78)
நண்பனுக்குள், ஒருவருக்கொருவர் நட்பென்ற நிலைகளில் எண்ணும் பொழுது, 2000 மைல்களுக்கு அப்பால் இருந்தாலும், விக்கல்கள் பாய்கின்றது. அதைப் போன்று, எனக்கு துரோகம் செய்தான் என்று எண்ணும் பொழுது, புரையோடுகின்றது.

அதே மாதிரி, பாசத்துடன் நாம் இருக்கும் பொழுது, குழந்தைக்கு ஏதாவது விபத்து என்று எண்ணினால், உடனே அந்த உணர்வுகள் நம்மைப் பதறச் செய்ன்றது, நடுங்கச் செய்கின்றது. இதை நாம் பார்க்கலாம்.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து, கணவனும் மனைவியும் சரீரம் இரண்டாக இருக்கலாம். ஆனால், உணர்வுகள் ஒன்றாக இங்கு கலக்க வேண்டும். காரணம், இன்று குடும்ப வாழ்க்கையில் ஒற்றுமையாக இருக்கக்கூடிய நிலைகள் ஏற்படுகின்றதோ, இதைப் போன்றுதான் உயிரணுக்களாகத் தோன்றியது.

இரு சரீரங்கள் ஒன்றாகி, அந்த ஒன்றிய உணர்வின் நிலைகள் கொண்டுதான் ஒரு சரீரத்தில் உருவாகின்றது. இதைப் போன்றுதான், இன்று கணவன் மனைவியாக இருக்கும் நிலைகள் கொண்டவர்கள், இந்த தியானத்தை எடுத்துக் கொண்டவர்கள் ஒவ்வொருவரும்,
கணவன் மனைவி இருவருமே
ஒருவரை ஒருவர் எண்ணிப் பார்க்கப்படும் பொழுது,
இந்த உணர்வுகள் அவர்களுக்குள் ஆற்றல்களாக விளைந்து,
பேருண்மையினுடைய நிலைகளை அறியக் கூடிய ஆற்றல்கள்
மிகத் தெளிவான நிலைகள் சீக்கிரமாகவே கிடைக்கின்றது.
அப்படிக் கிடைத்துவிட்டால், மிகவும் நல்லது.

ஆக, இந்த உடலைவிட்டு யார் முதலில் சென்றாலும், இந்த உடலை விட்டுச் சென்றபின், அடுத்த உடலும் இந்த உணர்வுடன் கலந்துவிடும். ஆக, இரண்டு உயிராத்மாக்களும் ஒன்று சேர்ந்துவிட்டால், “ரிஷித்தன்மை” என்று சொல்வார்கள்.
அத்தகைய ரிஷிதன்மையை நாம் அடைவதற்காகத் தான், ரிஷிகள் எத்தனையோ முயற்சிகள் எடுத்து, இந்த முறைகளைக் கையாண்டு விண் சென்றார்கள்.

இன்று சாதாரண வாழ்க்கையில் இருந்தாலும், நீங்கள் முறைப்படி அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளை, பேரொளியை எடுத்து, அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை உங்கள் உடலுக்குள் செலுத்தி,
கணவன் மனைவி, இரு சரீரமும் ஒன்று சேர்த்து
நாம் இன்று எப்படி இருக்கின்றோமோ, அதைப் போன்று
இந்த உடலுக்குள் உயிரும், உடலும், உணர்வுகளும்
எப்படி இயங்குகின்றதோ, இதைப் போல
ஒளிச்சரீரத்திற்குள் என்றும் மகிழ்ச்சியான நிலைகள்
பேரானந்த பெருவீடு என்ற நிலைகள் அடைகின்றோம்.
அந்தப் பெருவீடு அடைவதுதான் கடைசி நிலை.

அந்தக் கடைசி நிலைகளிலிருந்து உருப்பெறும் நிலைகள்தான், உலகை சிருஷ்டிக்க ஒரு அணுவின் தன்மை ஆகின்றது. அத்தகைய அணு தான் “நாரதன்’ என்பது.

ஆக, ஒரு கோளின் தன்மையானாலும், ஒரு உணர்வின் தன்மயானாலும், சப்தரிஷி மண்டலங்களிலிருந்து வரக்கூடிய ஒவ்வொரு உணர்வின் ஆற்றல் மற்ற பொருள்களில் பட்டவுடன், அது உருவாக்கும் மாற்றமும்,
பூமியிலேயோ, மற்றவைகளிலோ,
அதிசயப்படத்தக்க அந்த உணர்வின் ஆற்றல்கள்
இயங்குவதை நாம் பார்க்கலாம்.

இன்று நாம் சிறுநீரை டெஸ்ட் செய்யும் பொழுது, நாம் ஒரு திரவத்தை ஊற்றியவுடன், அதற்குத்தக்கவாறு அதனுடைய உணர்வுகள் எவ்வாறு பிரித்துக் காட்டுகின்றது. அதனுடைய சத்துக்கள் எவ்வாறு பிரித்து, இன்று விஞ்ஞான அறிவு கொண்டு பார்க்கின்றோம்.

இதைப் போன்றுதான், அந்த மெய்ஞானிகளிடம் இருந்து வெளிப்படுவதை, மனிதன் சுவாசத்தில் ஈர்க்கப்பட்டால், மனிதனுக்குள் அந்த மெய்யை உணரக்கூடிய  ஆற்றல்கள் நமக்குள் வளர்கின்றது.

அந்த நாரதர் என்ற அலையைச் சுவாசிப்பதற்குத்தான், இன்று நாம் செய்யும் இந்தத் தியானத்தின் பலன். ஆக, நாரதன் கலகப்பிரியன். அந்தக் கலகமோ நன்மையில் முடியும்.

சப்தரிஷி மண்டலங்களிலிருந்து வரக்கூடிய, அந்த மெய் ஒளியின் தன்மையைத் தான் நாம் இந்த தியானத்தால் சுவாசித்து, அந்த உணர்வின் ஆற்றலை நம் உடலுக்குள் செலுத்திவிட்டால்,
அந்த மெய்ஞானிகள் எவ்வழிகளில் சென்றார்களோ,
அதைப் போன்று மெய் ஒளியின் தன்மையை
நம் எண்ணத்திலே தோற்றுவித்து, அந்த உணர்வுகளைச் சுவாசித்து,
நம் உடலுக்குள் ஆற்றல் மிக்க சக்திகளை நாம் பெறுகின்றோம்.

அப்படி சக்தி பெற்றபின், பேரண்டத்தின் பேருண்மையை, நமக்குள் உளமாற வளர்த்துக் கொள்ளும் ஆற்றலும், வருகின்றது. அந்த ஆற்றலை வளரச் செய்வதற்குத்தான், இந்த தியானத்தைச் செய்கின்றோம்.
(பக்கம் 80-83)
இன்று, இருளான பல பொருள்களைச் சேர்த்து ஒரு விளக்கை எரித்து, மற்ற பொருள்களைக் காண்கின்றோம். மற்ற பொருள்களைச் சேர்த்து, ஒன்றை உருவாக்கச் செய்கின்றோம்.
அந்த உணர்வின் நிலைகள் ஆக்குவது போன்று,
நமக்குள் நம் எண்ணத்தை ஒளியாக்கி,
நமக்குள் எண்ணும் நிலையினுடைய தன்மையை,
சிருஷ்டிக்கும் தன்மை பெற்ற நாம்
ஒவ்வொருவரும் செய்ய முடியும்.

அவ்வாறு செய்யும் தன்மைதான், அந்த மெய்ஞானிகள் சப்தரிஷி மண்டலங்களிலிருந்து வெளிப்படுத்தும், அந்த நாரதரான உணர்வின் அலைகளை நாம் சுவாசித்து, நம்மையறியாமல் இருளில் மூழ்கடித்துக் கொண்டிருக்கும் இந்த நிலையிலிருந்து நம்மை மீட்டுத்தர, இந்த நாரதர் என்ற இந்த அணு, நமக்கு வழிகாட்டும்.

இன்று ஒருவன் நமக்குத் துன்பம் செய்தான் என்றால், இப்படிச் செய்தான் என்று நாம் ஆத்திரப்படுகின்றோம். “இரு நான் பார்க்கிறேன்” என்றும், “உன்னை அழித்துவிடுவேன்” என்று பயமுறுத்தி இருந்தால், அவனை நினைக்கும் பொழுதெல்லாம் “திடுக்… திடுக்…” என்று நமக்குள் பயத்தை ஊட்டிக் கொண்டிருக்கும்.

அந்த பய உணர்வின் தன்மையை நாம் சுவாசித்து, அப்பொழுது நாம் செயலிழக்கச் செய்யும் நிலையும், மேலும் பல நிலைகள் வருகின்றது. ஏனென்றால், அவன் பதித்த நிலைகள் நமக்குள் வேலை செய்கின்றது.

உங்களுக்குள் எத்தகைய பயம் வந்தாலும், மெய்ஞானியரின் அருள் சக்தியைப் பதிவு செய்து, யாம் சொன்ன முறைப்படி மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறவேண்டுமென்று ஏங்கி தியானியுங்கள்.

“ரிஷியின் மகன் நாரதன்” அவன் ஒரு முனிவன். ஏனென்றால், சப்தரிஷி மண்டலங்களிலிருந்து வரக் கூடிய ஒளிதான், ரிஷியின் மகன். அந்த ஒளியிலிருந்து வந்ததுதான் அந்த அணு நாரதன். அந்த உணர்வின் செயலாக்கம்தான் நாரதன்.

அந்த உணர்வின் தன்மை வந்தவுடன், அதன் ஆணைப்படி அது நல்லதை வழிகாட்டி, இருளை மாய்க்கும் தன்மை – முனி என்ற நிலையை அன்று தெளிவாகக் காட்டி உணர்த்தியிருக்கிறார்கள். ஆகையினாலே, அந்த உணர்வின் ஆற்றலை நமக்குள் பெற்று, இருளினை நீக்கி அருள் வழி வாழ்வோம்.

மெய்ஞானியர்களின் அருள் சக்தியை நம்முள் பெருக்கிக் கொள்ள வேண்டும். அந்த சந்தர்ப்பத்தை ஏற்படுத்தும் நிலைதான் இந்த உபதேசம். ஆகையினாலே, இன்றும் சரி, இனி என்றும் சரி, யாம் ஒவ்வொரு நிமிடமும் ஜெபமிருந்து கொண்டே இருக்கின்றோம்.
யாம் ஜெபமிருந்து, உங்களுக்கு அந்தச் சக்தி பெறவேண்டுமென்று,
நீங்கள் கோவிலில் ஆராதனை செய்வது போன்றே,
உங்கள் அனைவருடைய உயிரான ஈசனுக்கும், ஆராதனை செய்து கொண்டிருக்கின்றோம். உங்கள் உயிரான ஈசனிடம், அந்த மகரிஷிகளின் அலைகள் பாய்ந்து கொண்டே இருக்கின்றது.

அந்த ஆராதனையின் பலன்தான் எமக்கும், உங்களுக்கும், நற்பயனைக் கிடைக்கச் செய்கின்றது. ஆகையினாலே, மனிதர்களாகப் பிறந்த நமக்குள், விண்ணுலக ஆற்றலின் அனைத்து சக்தியும் நமக்குள் உண்டு. அனைத்தையும் பார்த்து, உணரக்கூடிய சக்தி ஒவ்வொரு மனிதனிடத்திலும் உண்டு.

மண்ணுக்குள் தங்கம் மறைந்திருக்கும் பொழுது, எப்படி வெளிப்படாமல் இருக்கின்றதோ, ஒரு குப்பைக்குள் மாணிக்கம் மறைந்திருக்கும் பொழுது, அந்த மாணிக்கத்தின் செயல்கள் நாம் காணமுடியவில்லை. குப்பைகள் விலகியபின் தான், மாணிக்கத்தின் தன்மையை நாம் அறிந்து கொள்கின்றோம்.

ஒரு மனிதனுக்கு, தன் உணர்வின் தன்மை இல்லையென்றால், அது வெளிச்சமான ஒரு மாணிக்கக் கல்லாக இருந்தால்,
நமக்குள் எண்ணம் சூனியமாக இருக்கும் பொழுது,
அது பிரகாசிக்கச் செய்யாது.

குழந்தைகளிடத்தில் மாணிக்கக் கல்லைக் கொடுத்தோம் என்றால், கொட்டிப் பார்க்கும். ஏனென்றால், அது அறியாத நிலைகள். ஆனால், மனிதர்களாக வாழ்ந்த நாம் வைரத்தின் தன்மையை அறிந்துணர முடியும்.
வைரத்தை அறிந்துணரக்கூடிய ஆற்றலைப் போன்றுதான், மனிதன் நாம் பிறந்த நிலைகள் கொண்டு, மனிதனுக்குள் இருக்கக் கூடிய இயற்கையின் ஆற்றல் எவ்வாறு? என்று தனக்குள் தான் அறிந்துணரச் செய்வதுதான், நாம் செய்யும் இந்த தியானத்தின் அறநெறி வழிகள்.