ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 23, 2015

தீமைகளை அகற்றும் அழுத்தத்தின் அளவு கோல் - அருள் உணர்வுகள்

குழந்தைப் பருவத்தில் - வளரும் குழந்தையைப் பாருங்கள். 

தவறு செய்பவர்களுடைய தவறுகளை முதலில் நுகர்கின்றான். தவறு செய்யும் உணர்வுகள் வளர்ச்சியாகும் பொழுது தவறு இன்னது என்று அறிந்து தவறிலிருந்து விடுபடுகின்றான்.

குழந்தைகளில் யார் சேஷ்டை செய்கின்றார்களோ வனே குற்றத்தைச் செய்வான்.
அவன் வளர்ச்சிடையும் பொழுது
வனே குற்றத்தை அறிகின்றான்.
குற்றத்திலிருந்து விடுபடுகின்றான்.

அதே சமயத்தில் சாந்தமாக ஒருவன் இருப்பான். மற்றவர்கள் செய்கின்ற தவறுகளைக் கேட்டுக்கொண்டிருப்பான். இந்த உணர்வின் அழுத்தங்கள் அதிகமானபின் நாம் அவனை நல்லவனென்று நினைப்போம். ஆனால் அவன்தான் கெட்டவனாக இருப்பான்.

கைக்குழந்தைகள் நடமாடும் நிலை வரும்பொழுது நல்லவனாக இருப்பான்.
குழந்தையாக இருந்தபொழுது நல்லவனாக இருந்தான்,
இப்பொழுது இப்படி இருக்கின்றான் என்று சொல்லுவார்கள்.

குழந்தையாக இருந்த பொழுது சுட்டித்தனமாக இருந்தான்.
இப்பொழுது எவ்வளவு அமைதியாக இருக்கின்றான் பார் என்று
அவன் மேல் மகிழ்ச்சி வரும்.

ஏனென்றால், உணர்வால் அறிய அனுபவமாக குற்றங்களை எதிர்ப்பார்த்து அதிலிருந்து மீளும் வலிமை பெறுகின்றான். வளர்ச்சிபெறும் பொழுது அவன் வாழ்க்கையில் காக்க வேண்டும் என்ற உணர்வு வருகின்றது.

இந்த இயற்கையின் உண்மைகளை நீங்கள் அறியலாம்.

யாம் உபதேசிக்கும் இந்த சந்தர்ப்பம் அருள்ஞானத்தை உங்களுக்குள் உருவாக்கும் சந்தர்ப்பம். மூலாதாரத்தில் மூண்டெழும் கலை காலம் அறிந்துதான் இந்தப் பருவத்தில் உங்களுக்குள் செலுத்துகின்றேன்.

ஏற்புடையோர் உணர்வின் தன்மை ஏற்றுக்கொள்கின்றது. அருள் மகரிஷிகளின் அருள் உணர்வுகள் உங்களுக்குள் ஏற்கப்பட வேண்டும்.

அது உங்களுக்குள் வளர்ச்சி பெற வேண்டுமென்ற நிலைகள் கொண்டுதான் உங்கள் சிந்தனையில் தியானமாகக் கொண்டு வருகின்றேன்.
உங்கள் நினைவு எங்கும் செல்லவில்லை.
இந்த தியானம் அருள்ஞானத்திற்குள் சென்றது.

ஒரு இயந்திரத்தின் (கம்ப்யூட்டர்) துணையால் வரும்பொழுது உணர்வின் அழுத்தம் எலக்ட்ரான்.
அந்த அழுத்தத்திற்கொப்ப அதனுடன் இணை சேர்த்து
அந்த உணர்வுகள் யந்திரத்தை இயக்குகின்றது.
கால மணிகளை அளவுகோல் கொடுக்கின்றது.

அதைப் போன்று, யாம் உபதேசித்த உணர்வுகள் அடுத்து உங்களுக்குள் நினைவுக்கு வரும்பொழுது காலத்தை அறியும் அளவுகோலாக
கம்ப்யூட்டரில் பதிவு செய்த நிலைகள்
மாற்றியமைப்பது போல் தீமைகளை மாற்றியமைக்கும்.

அதனால்தான் உங்களுக்குள் செய்யும் இந்தப் பதிவின் நினைவாற்றல் பகைமை உணர்வு புகாது தடுக்கவும், நல் உணர்வுகளைக் காக்கவும், அருள்ஞானத்தை வளர்க்கவும் உதவும்.

கால நிலை கொண்டு எதிர்நிலை கொண்ட உணர்வுகளை மாற்றியமைக்கும் திறன் உங்களுக்குள் வருகின்றது.

தீமையின் உணர்வு நமக்குள் இருந்தால் நல் உணர்வை மாற்றியமைத்துவிடும்.

ஆகவே, நமக்குள் அருள் உணர்வு கொண்டு மற்றவர்களைக் காக்க வேண்டும் என்று தியானித்து அவர்கள்படும் துயரங்களில் இருந்து மீளவேண்டும் என்று எண்ண வேண்டும்.

குடும்பத்தில் ஒருவருக்கொருவர் சந்தர்ப்ப பேதத்தால் மக்களுடன் சுற்றுப்புற சூழ்நிலைகளுடன் வளர்கின்றோம்.

வேடிக்கையாகப் பார்த்திருப்பார். இந்த உணர்வின் அழுத்தம் வரும். உணர்வின் அழுத்தம் வரும் பொழுது அதன்மேல் கவனத்தின் தன்மை வரும்.

வீட்டிற்குள் இவர் ஒன்றே எதிர்பார்ப்பார். அந்த உணர்வின் அழுத்தம் எதிர்ப்பார்ப்பது நடக்கவில்லை என்றால் கோவிப்பார்.

கோபித்து அழுத்தமாகும்பொழுது பற்று வெறுப்பாக ஆகின்றது.
நல்ல ஞானத்தின் தன்மை வரும்பொழுது பற்று விரிவடைகின்றது.
ஆனால், சில சந்தர்ப்பங்கள் வரும்பொழுது அதை குறுக்கி விடுகின்றது.

பற்றுகள் இரு வகைகள் உண்டு. அவர் கொண்ட
வெறுப்பின் உணர்வுடன் பற்றுக்கொண்டால்
நல்ல மனதைச் சுருக்கி விடுகின்றது.

நல்ல மனதைக் கூட்டிவிட்டால்
தீமை என்ற மனதைக் குறுக்கி விடுகின்றது.

இதுவெல்லாம் உங்கள் சிந்தனைக்கு வரவேண்டும்.