ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 17, 2015

யாம் கொடுக்கும் இராமபானம், ஆத்ம சுத்தி என்ற ஆயுதம் - ஞானகுரு

நமக்குள் இருக்கும் துன்பத்தைப் போக்குவதற்குத்தான் ஆத்ம சுத்தி. யாம் கொடுக்கும் அந்த ஆயுதத்திற்குள் பல இரகசியங்கள் இருக்கின்றது.

ஆக, அந்த ஆயுதத்தைப் பயன்படுத்தும் நிலைகளுக்குத்தான்
அம்பு என்று இருந்தாலும்
இராமபானத்தைப் பயன்படுத்தும் நிலைகள் கொண்டு
(நம் எண்ணங்கள் கொண்டு)
இராமன் என்பது - நம் உயிருக்குள் உணர்ந்த ஒவ்வொரு குணத்தின் நிலைகள்தான் இராமன், பரசுராமன், பலராமன் என்பது

இந்த எண்ணத்தின் வேகத்தின் நிலைகள் கொண்டு, நாம் எந்த எண்ணத்தின் உணர்வைப் பாய்ச்சுகின்றோமோ, அந்த அம்பின் தன்மைதான் மற்றதைக் கவர்ந்து அதை இழக்கச் செய்யும்.

அப்பொழுது, அந்த எண்ணத்தின் நிலைகள் செயலாவதை ஆஞ்சநேயராகக் காட்டினார்கள் அன்று மெய்ஞானிகள்.

அப்படி அந்தப் பொருளுக்குள் இருக்கும் நிலையை ஞானிகள் உணர்த்தினாலும் இன்று அதை உணர்வார் இல்லை.

இன்றைய நிலைகள் நாம் பார்த்த நிலைகள். இராமனாக, இராமபானம் என்று எத்தனையோ பானங்கள் இருக்கின்றது. அதற்குள் இப்போது நாம் கொடுத்த எண்ணங்கள் அனைத்துமே இராமபானங்கள்.

நீங்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு ஆயுதமும் உங்கள் திறனுக்குத் தக்கவாறு கணையை அன்று இராமன் ஒடித்துவிட்டான்.

மற்றவர்கள் தூக்க முடியவில்லையென்று சொன்னபோது, மெய்யுணர்வின் தன்மையைத் தூக்கும் சக்திக்குத் தக்க கணையை உங்களுக்குள் இயங்கச்செய்து,
யாம் கொடுக்கும் ஆத்ம சுத்தி என்ற அந்த ஆயுதத்தை
நீங்கள் சரியான விதத்தில் பக்குவப்படுத்திக் கொள்ளலாம்.

யாம் உங்களுக்குள் பதிவு செய்த ஞானவித்தை வளர்க்க மாமகரிஷியின் அருள் ஒளி பெற இப்போது நாம் தியானிப்போம். எல்லோரும் ஒன்று போல சொல்லுங்கள் “ஓம் ஈஸ்வரா குருதேவா”.

இப்பொழுது அகஸ்திய மாமகரிஷியின் அருள்சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கி இருங்கள் மனதிற்குள் எண்ணி ஏங்கி இருங்கள்.

அகஸ்திய மாமகரிஷியின் அருள்சக்தி எங்கள் ஜீவாத்மா பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்களை மூடி உங்கள் உடல் முழுவதற்கும் நினைவைச் செலுத்தி உங்கள் உடலை தியானியுங்கள்.

அகஸ்திய மாமகரிஷியின் அருள் சக்தியால் எங்கள் உடல் நோய் நீங்க அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கி இருங்கள்.

அகஸ்திய மாமகரிஷியின் அருள் சக்தியால் உடல் நோய் நீங்கி நாங்கள் நலமும் வளமும் பெற அருள்வாய் ஈஸ்வரா குருதேவா என்று ஏங்கி இருங்கள்.

எங்களுக்கு நல்ல எண்ணமும்
எங்களைப் பார்ப்போருக்கு நல்ல எண்ணமும்
எங்கள் வழி நல் வழியாகவும்
எங்களுக்கு உன்னை என்றும் மறவாத எண்ணமும் கொடு ஈஸ்வரா.

அகஸ்திய மாமகரிஷியின் அருள்சக்தியால் நாங்கள் பார்ப்போர் அனைவரும் நலமும் வளமும் பெற அருள்வாய் ஈஸ்வரா

“ஓம் ஈஸ்வரா குருதேவா”