ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 11, 2015

மகரிஷிகளுடன் நேரடியாகத் தொடர்பு கொள்ளும் வழி

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அவர் தமக்குள் சேர்த்துக்கொண்ட ஒளியின் தன்மைகள், அதைப் பருகும் நிலையில் எமது இயக்கம் இருந்தது.

அப்பொழுதுதான் எமது குருநாதர் மின் கம்பத்தைக் கல்லைக் கொண்டு தட்டிக்கொண்டிருப்பார்.

“ஏன் சாமி..?” இப்படிக் கல்லைக் கொண்டு தட்டிக்கொண்டிருக்கிறீர்கள்...? என்று கேட்டேன்.

“யாரடா கேட்டார்கள்... நீதானே கேட்கிறாய்...?” நான் தட்டுகிறேன்... என்னைப் பைத்தியக்காரன்...! என்றுதான் நினைத்தார்கள். ஏன் தட்டுகிறாய் என்று கேட்டது நீதான். ஆகையினால் ஏன் தட்டுகிறேன் என்று “நீ பார்...!” என்றார் குருநாதர்.

யாம் கேட்ட இந்தக் கேள்விக்கு அந்த உணர்வில் நீ எதைப் பெறவேண்டுமென்று எண்ணினாயோ...! ஏன் தட்டுகிறேன் என்று கேட்டதன் விளைவுதான்
ஒரு கோடி... ஒரு கோடி மிளகாய்...!
அது.., இது.., என்று சொல்லிக்கொண்டே இருந்தார்.

என்ன..? ஒரு கோடி மிளகாய்... இரண்டு கோடி மிளகாய்...! என்கிறார் என்னவோ பைத்தியக்காரர் மாதிரி சொல்லிக் கொண்டிருக்கிறார் என்று யாமும் அப்படித்தான் எண்ணினோம்.

அந்தக் கோடி, கோடி, கோடி, கோடி, கோடி, கோடி, கோடி, கோடி, கோடி, கோடி, கோடி -- விண்ணிலே சென்ற ஒரு உணர்வின் தன்மை கோடி கோடியாக அந்த உணர்வின் தன்மை கொண்டு கோள்கள் எப்படி உருவானது என்று அதற்குபின்தான் அந்த உணர்வின் எண்ணத்தைப் பதிவு செய்து ஞானத்தைக் கொண்டு வந்தார்.

அதைப்போன்றுதான், யாம் உங்களிடம் என்னென்னமோ சொல்லிக்கொண்டே வருகிறோம் என்று நினைக்க வேண்டாம்.

இதையெல்லாம் உணர்வின் வித்தாக எடுத்து,
நீங்கள் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுக்கப்படும்போது,
அந்த மெய்யுணர்வின் தன்மை உங்களுக்குள் வளர்ந்து
உங்களை அறியாமல் அழித்துக் கொண்டிருக்கும்
இருளான நிலைகளிலிருந்து மீட்டி,
உங்களுக்குள் உணர்வின் எண்ணத்தை ஒளியாக மாற்றி
விண் செல்வதே அதுதான்.

மனிதன் ஆனபின் விண் செல்ல வேண்டும்.

இல்லையென்றால் இந்த கூட்டைவிட்டுச் சென்றுவிட்டால், நாம் மனித உடல் அல்லாதபடி, நாம் கீழான நிலைகளில் போய் சிக்கி விடுவோம்.

ஏற்கனவே பலமுறை உங்களுக்குக் கூறியிருக்கின்றோம்.

அதனால் அப்படிச் சிக்காதவண்ணம் நாம் தப்பிப்பதற்கு, ஞானத்தின் நிலைகள் கொண்டு மெய்ஞானிகள் பெற்ற மார்க்கத்தைப் பெற்று, ஒவ்வொரு மனிதனும் அதன் தன்மைகள் வளர்ச்சி பெறுவதற்கு அந்த அகஸ்திய மாமகரிஷியினுடைய அருள் ஒளியை, உணர்வின் அணுக்களை நீங்கள் தியானித்தால் பேருண்மையை உங்களுக்குள் காணலாம்,

காணக்கூடிய அந்த சக்தியினுடைய நிலைகள் கொண்டு அந்த உணர்வின் செல்களை எமக்கு குருநாதர் பதிவு செய்தது போன்று ஒவ்வொன்றையும் தொட்டுக் காண்பித்து அந்த உணர்வின் ஆற்றலை உங்களுக்குள் பெருக்கச் செய்து கொண்டிருக்கின்றோம்.

மகரிஷிகளுடைய அருள் என்றுமே ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டது.

ஒன்றுடன் ஒன்று தொட்டு நம் சரீரம் இயங்கினாலும், நம் குருநாதர் காட்டிய அருள்வழியில் மகரிஷிகளுடன் தொடர்பு கொண்டு அந்த ஆற்றல்களை நீங்கள் நிச்சயம் பெறமுடியும். எமது அருளாசிகள்.