ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 5, 2014

நாம் சுவாசிப்பதை உயிர் எப்படி இயக்குகின்றது

நம் உயிர் எலக்ட்ரிக். நாம் சுவாசிப்பதை எலக்ட்ரானிக்காக, அதாவது உணர்ச்சிகளாக மாற்றுகின்றது. அந்த உணர்ச்சிக்கொப்பத்தான் நம்முடைய ஒவ்வொரு செயலும் அமைகின்றது.

ஒரு கம்ப்யூட்டரில் இரண்டு அலைகள் போட்டவுடன், உதாரணமாக எழுத்து வடிவிலே ஆங்கிலமோ, தமிழோ கொடுக்கிறார்கள். அதனதன் அழுத்தத்தைக் கொடுத்தவுடன் மற்றதைப் பிரித்துக் காட்டுகின்றது.

இதைப் போல நமது உயிர், சூரியனின் காந்த சக்தி கவர்ந்த இந்த உணர்வுகளை நுகரப்படும் பொழுது, அதை எலக்ட்ரானிக்காக மாற்றுகின்றது.
அதனுடைய செறிவினுடைய அளவுகோல் எதுவோ
அதற்குத் தகுந்த மாதிரி நம் உடலை இயக்குகின்றது.

அதன் அளவுகோல் எதுவோ அதற்குத்தகுந்த மாதிரி
நமது உயிர், காந்தத்தை இழுக்கின்றது.
அதில் வந்த உணர்வு
அதிலே அழுத்தம் எவ்வளவு இருக்கின்றதோ,
அதற்குத் தகுந்த மாதிரி,
எலக்ட்ரானிக்காக (உணர்ச்சிகளாக) மாற்றுகின்றது.

மாற்றிய அதனுடைய உணர்வுகளைப் பரப்பப்படும் பொழுது அதனுடைய இன உணர்வுகள்
அதற்குத்தகுந்த அதிர்வுகளைக் கொடுத்து
உடலை இயக்குகின்றது.
அதற்குத்தகுந்த சிந்தனைகளைக் கொடுத்து
அதற்குண்டான செயல்களையும் செய்கின்றது.
இதைப் போலத்தான், நமக்குள் நூற்றுக்கணக்கான பிரிவுகள் உண்டு.

அது வெளிப்படும் பொழுது எந்தெந்த அளவுகோல் இருக்கின்றதோ, அதற்குத் தக்கவாறுதான் இந்த வாழ்க்கையில், நாம் எந்த உணர்வை அதிகமாகச் சேர்த்துக் கொண்டோமோ, அந்த அணுக்களின் உணர்ச்சிகள் அதிகமாகத் தூண்டும்.

அது ஆன்மாவாக மாறும். இது இரண்டும் கலந்து உயிரிலே படும் பொழுதுதான், எலக்ட்ரானிக்காக மாற்றி பல நிலைகளை நாம் தெரிந்து கொள்கின்றோம்.

ஒவ்வொரு நொடிப்பொழுதும் நாம் சுவாசிப்பது அனைத்தையும் உணர்ச்சிகளாக மாற்றி, அதன் வழிகொண்டுதான் உடலை இயக்கிக் கொண்டுள்ளது நம் உயிர்.