
பிரபஞ்சத்தின் சக்திகள் அனைத்தும் பூமிக்குள் பெருக்காகப் பெருகுவதே “ஆடி பதினெட்டு…”
1.ஒவ்வொரு வருடத்திலும் ஒவ்வொரு மாதத்திலும் மனிதன் எவ்வாறு தன்
நினைவுகளைக் கூட்டிக் கொள்ள வேண்டும்…?
2.தன்னை உயர்த்திக் கொள்ள வேண்டும்…?
உயர் ஞானத்தை எப்படித் தனக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும்…? என்பதற்குத் தான் ஆடிப் பெருக்கு.
வருடத்திற்கு 12 மாதம் என்றால் அந்த 12
மாதத்திலும் 12 ராசிகள் என்று சொல்வார்கள்.
12 மாதங்களையும் 12 ராசிகளாகப் பிரித்தனர் ஞானிகள்.
ஒவ்வொரு மாதத்திலும் அந்த மாதத்தில் சூரியனிலிருந்து
வெளிப்படும் கதிரியக்கங்கள் மற்ற கோள்களில் இருந்து வெளிப்படுத்தும் உணர்வுகளையும் மற்ற நட்சத்திரங்கள் வெளிப்படுத்தும் உணர்வுகளையும் “ஒவ்வொரு
நட்சத்திரத்தின் தொகுதி… தொகுப்பு…”
என்ற நிலையில் கொண்டு வருகிறது.
12 மாதங்களிலும் இதே போன்று தான்.
1.எந்தெந்த நட்சத்திரங்கள் அந்தந்த மாதங்களில்
அருகிலே ஒன்றாகக் கலந்து
2.அது கவர்ந்து கொண்ட சக்திகளை மற்ற கோள்கள் கவர்ந்து அது
நமது பூமிக்கு எவ்வாறு கிடைக்கின்றது…? என்ற நிலையும்
3.அதே உணர்வின் சக்தியை நாம் எவ்வாறு நமக்குள்
பெருக்கிக் கொள்ள வேண்டும்…? என்ற நிலைப்படுத்தித் தான் மாதங்களை 12 ராசிகளாகப்
பிரித்தனர்.
12 ராசிகள் என்றாலும் அதிலே ஒவ்வொரு ராசிக்கும்… இரண்டு நட்சத்திரம் மூன்று நட்சத்திரம் நான்கு நட்சத்திரம்
என்ற அந்த அலைவரிசைகளில் அது கலந்து அது மற்றொரு நிலைகளில் கலந்து ஒவ்வொரு கோள்களும் தனக்குள் அதை கவர்ந்து
வரும்.
அப்படித் தனித்தனியாக (தொகுப்பு) வரும் நேரத்தில் நமது பூமி
அந்தந்த மாதத்தில் 12 மாதங்களிலும் அதை எவ்வாறு கவர்கிறது…? என்ற
நிலையைத் தான் ராசி என்று பிரித்தனர்.
அவ்வாறு பூமிக்குள் வரும் அந்த அணுக்களின் தன்மையை தாவர இனங்கள் தனக்குள் எதைச்
சேர்த்துக் கொண்டதோ
1.அதனதன் வளர்ச்சிகள் அந்த மாதங்களில் வரும் பொழுது அதனுடைய பெருக்குகள் பெருகி வருகின்றது.
2.தான் கவர்ந்து கொண்ட சக்திகளைப்
பெருக்கிக் கொள்கிறது என்ற நிலையை நிலைப்படுத்துவதற்குத்
தான்
3.12 விதமான ராசிகளாகப் பிரித்து
காட்டினார்கள்.
27 நட்சத்திரங்களும் அதற்குள் ஒன்பது கோளின் நிலைகளையும்
இப்படிப் 12 ராசிகளாகப் பிரிக்கப்பட்டு… நட்சத்திரங்கள் வெளிப்படுத்தும் உணர்வுகளும் ஒன்பது
கோள்களும் அதை எடுத்து வெளிப்படுத்தும் போது சூரியன் தனக்குள் கவர்ந்து அதனுடைய ஒளிக்கதிர்களை வெளிப்படுத்துகிறது.
அவ்வாறு கலந்து அது வெளிப்படுத்தியதை
1.நமது பூமி சுழலும் போது பூமியின் துருவப் பகுதி (வடக்கு) எந்தெந்த நட்சத்திரத்திற்கு நேர்முகமாக
இருக்கின்றதோ
2.அந்தச் சக்திகளை அதன்வழி கவர்ந்து நம் பூமிக்குள் கொண்டு வருகிறது.
அதிலே வளர்த்துக் கொண்ட நிலைகள்
தான் தாவர இனங்களுக்கு ராசியாகப் பெறுகின்றது.
நட்சத்திரங்களின் சத்தை மற்ற கோள்கள் எடுத்தது ஒவ்வொரு
தொகுதியும் தொகுப்புகளுக்கு எவ்வாறு…
1.அதாவது எல்லை வகுப்பு… மத்திய கோடு என்ற கோடு வரிசையில் வைத்து
2.இன்னென்ன பகுதிகளில் இன்னென்ன ராசிகள் இவ்வளவு வருகின்றது…
3.இன்னென்ன வகைகளில் இன்னன்ன நட்சத்திரங்களின் சக்திகளும் கோள்களின் சக்திகளும் இந்த அளவுக்குப் பெறும் தகுதியாகப் பரவுகின்றது என்று
4.கோள்களின் சக்தியும் நட்சத்திரங்கள் சக்தியும் அது கலந்து
வந்து நமது பூமியில் தாவர இனங்களில் கலவை ஆகி
5.அதே சமயத்தில் பூமிக்குள் கலவைகளாகி
பாறைகளும் மற்ற கல்களும் உருவாகி… பற்பல உலோகங்களாகி
6.உலோக சக்தியிலிருந்து பூமியிலிருந்து
வெளிப்படும் உணர்வுகள் ஆவியாக வெளியாகி
7.அப்படி வெளிப்படும் உணர்வுகளை மீண்டும் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து
8.நமது பூமியில் எவ்வாறு அதனுடைய
பெருக்கங்கள் வருகிறது…? என்ற நிலையே “ஆடி பதினெட்டு…”
இப்படி பூமி முழுவதிலுமே எல்லா வகைகளிலும் இசைந்து ஆடி
வருகின்றது.
ஆக… இயக்கத்தின் தன்மைகள் ஒன்றுடன்
ஒன்று அசைந்து சென்று… ஒன்றுடன் ஒன்று மோதி… மோதலுக்குத் தக்க இசைகள் ஒவ்வொன்றும் மாறுகின்றது.