ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 26, 2022

எந்த நிமிடம்… எது நடக்கும்…! என்று தெரியாத நிலையில் தான் இன்று இருக்கின்றோம்

விஞ்ஞான அறிவால் அணுகுண்டுகளையும் மற்ற எத்தனையோ விதமான கெமிக்கல் குண்டுகளையும் உலகில் பல நாடுகளில் தயார் செய்து வைத்திருக்கின்றார்கள்.

மின்னல்கள் தாக்கப்படும் பொழுது கடலிலே பாய்ந்தால் மணலாக மாறுகின்றது. அந்த மணலிலிருந்து யுரேனியமாகப் பிரித்து எடுத்து “அணுவைப் பிளக்கும் சக்தியாகக் கொண்டு வருகின்றார்கள்…”

அதை மற்றதுடன் கலந்து நியூட்ரான் என்கிற நிலையிலும் புரோட்டான் என்கிற நிலையிலும் சில நிலைகளைச் செயல்படுத்துகின்றனர்.

பொதுவாக நட்சத்திரங்களில் இருந்தும் உமிழ்த்தப்பட்டு வரும் கதிரியக்கச் சக்திகள் சூரியனின் ஈர்ப்புக்குள் வரும் போது
1.சூரியன் இழுத்து வரும் பாதையில் ஒன்றுடன் ஒன்று கலந்தால் அதிகமான அழுத்தங்கள் ஆகும்.
2.அந்த அழுத்தத்தைக் கண்ட பின் மற்றதெல்லாம் அஞ்சி (நியூட்ரான்) ஓடுகின்றது.
3.ஓடினாலும் ஒன்றோடு ஒன்று கலந்து பல மாற்றங்கள் ஆகின்றது… சக்தி வாய்ந்த நிலையாக மாறுகின்றது.

அதை எடுத்துத் தான் இராக்கெட்டை விண்ணிலே செலுத்தினார்கள். நட்சத்திரங்களில் இருந்து வரக்கூடிய துகள்களைப் பிரித்து “நியூட்ரான்” என்று கொண்டு வருகின்றார்கள்.

அதை எடுத்துக் கொண்ட பின் “வெடிக்கச் செய்தால்” சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றி வைத்துக் கொள்கின்றது.

அத்தகைய உணர்வுகள் மனிதன் இருக்கும் பக்கம் பட்டால் விஷத்தின் தன்மை கலந்து… சிந்திக்கும் தன்மை குறைந்து… மனிதனுடைய நல்ல குணங்கள் எல்லாம் மறைந்து விடுகின்றது.
1.மனிதன் இருப்பான்... ஆனால் பைத்தியம் பிடித்தது போன்று ஆகிவிடுவான்.
2.மனிதனை மனிதனே கொன்று சாப்பிடும் நிலைகள் வருகின்றது

அதே சமயத்தில் அணுகுண்டுகளை வெடித்தால் கதிரியக்கங்கள் மோதி அனைத்தையும் பஸ்பமாக்கி விடுகின்றது இது மனிதன் கண்டுபிடித்தது தான். ஆனால் இதில் கட்டடங்கள் ஊரெல்லாம் அழிந்து விடுகின்றது என்று எண்ணி என்ன செய்தான்…?

நியூட்ரான் குண்டுகளை வீசி மக்களைப் புத்தி பேதமில்லாது செய்துவிட்டுத் “தான் ஆட்சிக்கு வரலாம்…” என்று செயல்படுத்துகின்றார்கள்.

இவ்வாறு எத்தனையோ செய்தாலும் அந்த விஷமான கசிவுகளைச் சூரியனுடைய காந்த சக்தி இந்த இரண்டையுமே (கசிவு + கதிரியக்கம்) கவர்ந்து வைத்துக் கொள்கின்றது.

காற்றலைகளில் இது பரவப்படும் பொழுது இதனுடைய அழுத்தம் எப்படி வான் வீதியில் நியூட்ரான் என்ற அழுத்தம் மற்றதோடு மோதும் பொழுது விரட்டிச் செல்கின்றதோ இதே போல கதிரியக்கச் சக்தியும் இதுவும் இரண்டும் மோதப்படும் பொழுது சுழிக்காற்றாக மாறுகின்றது.

இரண்டும் சேர்ந்த பின் என்ன நடக்கிறது…?

நட்சத்திரங்களின் கதிரியக்கச் சக்திகள் கலந்து தான் மண்ணோ கல்லோ செடி கொடிகளோ எல்லாமே உருவாகியுள்ளது.

1.சுழிக் காற்றாக மாறி… கல் மண் மற்றும் அனைத்திலும் இருக்கும் கதிரியக்கத்தைக் கவர்ந்து கொண்ட பின் இன்னும் வீரியம் அதிகமாகி
2.காற்றாடி போல (TORNADO) எல்லாவற்றையும் மேலே தூக்கிக் கொண்டு… பிய்த்து எறிந்து கொண்டு போகின்றது.

அமெரிக்கா சீனா ரஷ்யா ஜப்பான் எல்லா நாடுகளும் இது நடக்கின்றது பார்க்கலாம்…! எங்கெங்கே அதை உற்பத்தி செய்தார்களோ அந்த நாடுகளில் எல்லாம் இது சுற்றிக்கொண்டு தான் இருக்கின்றது. பெரிய கட்டிடங்களாக இருந்தாலும் சுக்கு நூறாகத் தவிடு பொடியாகிப் போய்க் கொண்டிருக்கின்றது.

1.கடல்களிலே பட்டால் கடல் அலைகள் பெருகி (TSUNAMI) நகருக்குள் இது பாய்ச்சப்பட்டு
2.ஊரே சின்னாபின்னமாகும் நிலைகளும் வந்து கொண்டிருக்கின்றது.

இதே சுழல் காற்றின் நிலைகள் மேகங்களிலே இழுக்கப்பட்டால்
1.இந்த உணர்வின் தன்மை மோதிய பின் மழை நீராகக் கொட்டு… கொட்டு… என்று கொட்டி… மேக வெடிப்பாகிப் (CLOUDBURST) பெரும் மழையாக
2.ஒரு வருடத்தில் பெய்யும் மழை ஒரு மணி நேரத்தில் பெய்து நகரமே வெள்ளக் காடாக ஆகி விடுகின்றது.

இந்த மாதிரி உலகத்தில் எந்த நிமிடம்… எது நடக்கும்…! என்று தெரியாத நிலையில் தான் இன்று இருக்கின்றோம்.

ஆகவே இன்றைய சூழ்நிலையில் எந்த நிமிடம் எந்த நிலை ஆனாலும் நாம் அந்தத் துருவ நட்சத்திரத்துடன் ஒன்றிப் பிறவி இல்லா நிலைகள் அடைதல் வேண்டும்.

இதை எல்லாம் உங்களுக்குள் பதிவு செய்கின்றேன் (ஞானகுரு). யாம் சொன்ன முறைப்படி வளர்த்துக் கொண்டால் இதில் சிக்க மாட்டோம்.
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் எடுத்துக் கொண்டால்
2.”ரிமோட் செய்வது மாதிரி…” ஒதுக்குப் புறமான இடங்களுக்கு அழைத்துச் சென்று “நாம் தப்ப முடியும்…”

ஏனென்றால் விஞ்ஞானத்தை மிஞ்சியது அந்த மெய் ஞானம்.

மெய் ஞானத்தின் உணர்வு வளரப்படும் பொழுது அதிலே வளர்ச்சி பெற்றவன்… மனிதனாக முழுமை அடைந்தவன் துருவ நட்சத்திரமாக நம் பூமியின் வடக்குத் திசையில் நிலை பெற்றிருக்கின்றான்.

1.அந்த உணர்வை எடுத்து நம்மைக் காக்கக்கூடிய சக்தியாக வளர்த்து
2.உடலுக்குப் பின் பிறவியில்லை என்ற நிலையை அடைவோம்.