ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 12, 2022

இன்றைய செயல்... "நாளைய சரீரம்...!"

உதாரணமாக ஒரு மனிதன் அவன் உடலுடன் இருக்கும் போது “கோபித்தான்…” என்ற நிலையில் அந்தக் கோப உணர்வுகளை எடுத்துக் கொண்டாலும் சரி… அல்லது அவன் இறந்த பின்னும் அவன் இப்படியெல்லாம் என்னைக் கோபித்தான் என்ற உணர்வை எடுத்துக் கொண்டாலும் சரி…
1.நமக்குள் பதிவான பின் எனக்குத் தீங்கு செய்தான் என்று
2.அவனை எண்ணும் போதெல்லாம் அந்தத் தீமையே நமக்குள் உருவாகும்.

எப்படி…?

நம் பிரபஞ்சத்தில் உள்ள வியாழன் கோள் பல நிலைகளைக் கவர்ந்து பல பல மாற்றங்களை ஏற்படுத்துகின்றது. ஒரு இணைப்புப் பாலமாகி ஒன்றாக இணைத்துப் புதுப் புது அணுக்களை உருவாக்கும் தன்மை பெறுகின்றது.

இதனின்று வெளிப்படுவதைச் சூரியன் கவர்ந்து தனக்குள் உணவாக எடுக்கின்றது.

அதே போல் தான் நாம் உற்றுப் பார்த்தோ அல்லது செவி வழி கேட்டோ நுகரும் உணர்வுகள் சுவாசத்தின் வழி கூடி உயிரில் பட்டு உடலுக்குள் சென்று இரத்தத்தில் கலக்கின்றது,

இரத்தத்திலிருந்து அது ஊடுருவி எல்லாப் பாகங்களில் செல்வதற்கு முன்
1.எதெனதன் உணர்ச்சிகளை வளர்த்துக் கொண்டதோ அத்தகைய அணுக்களாகி அதனின் மலமாகி
2.உணர்ச்சிக்கொப்ப நம் உடலில் உறுப்புகளில் ரூபங்கள் மாறுகின்றது… அந்த உறுப்புகளில் சத்துகள் மாறுகின்றது.

மாடு ஆடு நாய் நரி புலி குருவி மைனா காக்காய் போன்ற உயிரினங்களோ அல்லது மற்ற பட்சிகளானாலும் அவைகள் நுகர்ந்த உணர்வுக்கொப்ப நுரையீரல் மண்ணீரல் கல்லீரல் போன்ற (அதனதன் சத்துக்கொப்ப) உறுப்புகளாகி அதன் உணர்வின் தன்மை இரத்தங்களாகி உணர்வின் தன்மை உயிரிலே மோதி உணர்ச்சிக்கொப்ப அந்த உணர்வின் எண்ணங்களாக மாற்றுகின்றது.

இதைப் போன்று தான் பிரபஞ்சத்தில் உள்ள நவக்கோள்களின் வளர்ச்சியும்.

நம் உயிர் இந்த உடலுக்குச் சூரியனாக ஆனாலும்
1.நுகர்ந்த உணர்ச்சிகளை எல்லாம் கலக்கும்… இணைக்கும்… எல்லாவற்றிற்கும் பாலமாக அமைகின்றது
2.நமது உயிரே குருவாக இருக்கின்றது

இந்தப் பிரபஞ்சத்தைச் சூரியன் இயக்கினாலும் இந்தp பிரபஞ்சத்திற்குள் மற்றதை இணைக்கும் பாலமாக அது (சூரியன்) குருவாக அமைகின்றது.

இப்படிக் கலந்து வரும் உணர்வின் சத்தைச் சூரியன் அருகில் இருக்கக்கூடிய புதன் கோள் பல விதமான உணர்வின் தன்மை கலந்து கலந்து… கலவைகளை மாற்றி உலோகத்தன்மைகளாக அது வெளிப்படுத்துகின்றது

சூரியனிலிருந்து வரும் வெப்பம் காந்தம் விஷம் என்ற நிலைகள் இதிலிருந்து வரக்கூடியதைக் கவர்ந்து பிரபஞ்சத்தில் மீண்டும் வீசினாலும் மற்றதுடன் கலந்து சூரியன் தன் உணவாக எடுத்துக் கொள்கின்றது

இதைப் போன்று தான்
1.நம் நுகர்ந்த உணர்ச்சிகளின் தன்மை இரத்த நாளங்களில் கலந்து மற்றதை வளர்த்தாலும்
2.நரம்பு மண்டலங்களில் ஆசிட் தன்மையாகவும் வாயுத் தன்மையாகவும் உருவாக்கி
3.சுருங்க… இழுக்க… அந்த உணர்வின் தன்மைக்கொப்ப இயக்கச் சக்தியும்
4.இப்படி உருமாற்றி வரும்… இவைகளை எல்லாம் கலந்து வரும் உணர்வின் சத்தை நரம்பு மண்டலங்களில் வடித்து
5.நமது உயிருக்கும் சிறுமூளை பாகத்திற்கும் இந்த உணர்ச்சிகள் உந்தப்படும் பொழுது அது இயக்கமாகி… இணைத்து…
6.இந்த உடலில் உருவாக்கும் கருத்தன்மையாகி… அந்தக் கருத்தன்மையில் அதிலே சேர்க்கப்படும் தன்மைகள் எதுவோ
7.அதிலே நாம் நுகர்ந்த உணர்வின் அணுக்கள் நாம் பிறிதொரு உடலின் தன்மை பெற்றாலும்
8.இதன் ஈர்ப்பு மண்டலத்திற்கு அழைத்துச் சென்று (ஒரு எறும்பை நசுக்கினாலும் இந்திரீக மண்டலம் என்று ஒன்று உண்டு)
9.அதன் உணர்வுக்குள் இழுத்துச் சென்று அதன் உணர்வின் கலவைக்குள் கொண்டு
10.இந்த உடலில் பெற்ற உணர்வைக் கலவையாக்கி அதற்குத்தக்க உடலை மாற்றும் தன்மை பெறுகின்றது.

இது எல்லாம் இயற்கையின் நியதிகள்.