ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 19, 2022

போக்கிரி வலுவானவன் தான்… ஆனால் உடலுக்குப் பின் எந்த நிலை அடைகிறான்…?

ஒரு போக்கிரி இருக்கின்றான் என்று வைத்துக் கொள்ளுங்கள் அவன் மற்றவர்களை அடித்து உதைத்துப் பழக்கப்பட்டவன். ஒருவன் மற்றவனை அடிப்பதை இவன் பார்த்தால் மன தைரியத்தோடு இருப்பான்.
1.அப்படித் தான் அடிக்க வேண்டும்…! என்று சொல்வான்.
2.ஏனென்றால் அவன் அடித்துப் பழகியவன்
3.அடித்து அடித்தே அவன் உணர்வுகளை வலுப் பெற்றவன்.

அவனுடைய அழுத்தம் அதிகமாக இருப்பதால் மற்றவர்கள் அடிப்பதை இவன் பார்த்தாலும் “அப்படித்தான் வேண்டும்…” என்ற வகையிலே தன்னுடைய உணர்ச்சிகளை வலுப்படுத்திக் கொள்கின்றான்.

ஆனால் ஒருவன் மற்றவனை அடிப்பதைப் பார்த்தால் நமக்கு நடுக்கம் தான் வரும். பயமும் பதட்டமும் சேர்ந்து வரும்.

போக்கிரியினுடைய அழுத்தம் மற்றவர்களைச் செயலிழக்கச் செய்து உடல் உறுப்புகளைப் பின்னப்படுத்தும். அத்தகைய பின்னப்படுத்தும் உணர்வுகள் வரப்படும் பொழுது அதே உணர்வைத்தான் அவனும் வளர்த்துக் கொள்ள முடியும்

அடுத்தவர்களைச் சிதையச் செய்த உணர்வுகள் தான் அவனுக்குள் சுவாசமாகி அதுவே உடலுக்குள் வளரும். உடலை விட்டுப் பிரிந்தால்
1.“எட்டுக்கால் பூச்சி… ஆக்டோபஸி…!” போன்ற பல விதமான உயிரினங்களாக மாறி அதிலே அவன் அவஸ்தைப்படும் தன்மை வரும்.
2.உணவைச் சரியாக உட்கொள்ள முடியாது கடுமையான விஷத்தன்மை கொண்ட பூச்சி இனங்களாக உயிர் உருவாக்கி விடும்.

மற்றவர்களைக் காக்க வேண்டும் என்ற நிலையில் மனிதனாக இருக்கின்றோம். இருந்தாலும் உயிர் அதுவாக மாற்றி விடுகின்றது.

இது போன்ற உணர்வுகளை மாற்றுவதற்குத் தான் துருவ நட்சத்திரத்தின் உணவுகளை உங்களுக்குள் பதிவாக்குகின்றோம். ஆயுள் கால மெம்பராகச் சேரும் நீங்கள் அதன் தொடர்பை எடுத்து துருவ நட்சத்திரத்தின் சக்தியைத் தனக்குள் வலுவாக்க வேண்டும்.

சண்டை செய்தவர்களுக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி கிடைக்க வேண்டும். அவர்கள் உடல் நலம் பெற வேண்டும் பூரண குணம் கிடைக்க வேண்டும் என்று இத்தகைய உணர்வுகளை எண்ணிச் சொல்லுதல் வேண்டும்.

ஆகவே இப்படி நாம் நுகர்ந்த உணர்வுகள் அந்தத் துருவ நட்சத்திரத்துடன் இணைந்து கொண்ட பின் அது நம் உடலில் உள்ள இரத்த நாளங்களில் கலக்கின்றது.

இரத்தத்தில் அது சுழன்று வரப்படும் பொழுது நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்களுக்குச் சுவையான உணர்வாக மாறிவிடும்.

அடுத்தவர்களைப் பற்றி நன்றாக வேண்டும் என்று சொல்லும் பொழுது நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் நல்ல முறையில் வளரும்.

அப்பொழுது எதனுடன் தொடர்பு கொள்கின்றது…?

1.உயிருடனும் துருவ நட்சத்திரத்துடனும் தொடர்பு கொள்கிறோம்.
2.இதைத்தான் விஷ்ணு தனுசு என்று சொல்வது
3.உயிருடன் ஒன்றி... உணர்வின் தன்மைகளை எல்லாம் ஒளியாக்குகின்றோம்.