ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 13, 2022

நம்மை நாம் அறிந்து கொள்வோம்

உதாரணமாக சண்டையிடுவோர்களைப் பார்க்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்போது நமக்கும் அதே உணர்வுகள் வருகின்றது,
1.இது தெரிந்து கொள்ள உதவுகின்றது.
2.தெரிந்தாலும் உயிரிலே பட்ட பின் உணர்ச்சிகளாக இயக்கப்பட்டு உடலுக்குள் அந்த உணர்ச்சிகளை ஊட்டுகின்றது

உணர்ச்சிகளால் அறிய முடிகின்றது. அந்த உணர்ச்சிகளால் நாம் இயக்கப்படுகின்றோம். நாம் கண்ணிலே பார்க்கிறோம் என்றால் கருவிழி ருக்மணி நம் எலும்புக்குள் ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவு செய்கின்றது. “மூளையில் அல்ல...!”

உடலில் எலும்புக்குள் உள்ள ஊனில் வித்தாகப் பதிவாக்குகின்றது ஆதைத் தான் ஊழ்வினை என்று சொல்வோம்.
1.இங்கே பதிவு செய்தால்தான் மீண்டும் மீண்டும் அது நினைவுக்கு வரும்.
2.பதிவாகவில்லை என்றால் நினைவு வராது.

அவர்கள் இருவரும் சண்டை போட்ட உணர்வுகள் (மூச்சலைகள்) வெளி வருவதைச் சூரியனுடைய காந்தப்புலனறிவு கவர்ந்து வந்தால் அது உணர்வாக மாறுகின்றது.

உதாரணமாக செடி கவர்ந்து கொண்டால் அதை வித்து என்று சொல்கின்றோம். அது போல் தான் கோபம் இங்கே “உணர்வாக” (வினை) மாறுகின்றது

அந்த உணர்வை நாம் சுவாசித்த உடனே உயிரிலே பட்டு உணர்ச்சிகளாக மாற்றி அந்த உணர்வுகள் நம்மை இயக்குகின்றது. இந்த உணர்ச்சிகள் நம் இரத்தத்தில் கலந்த பின் அவர்கள் வெளிப்படுத்திய உணர்ச்சிகள் போன்று நம் உடலிலும் பரவுகிறது.

நம் உயிரிலே மோதும் பொழுது இயக்கத்தின் சக்தியாக மாறுகிறது. இரத்தத்தில் கலந்தால் இந்திரலோகமாக மாறுகிறது. இந்திரலோகம் என்றால் கருத்தன்மைகள் உருவாகும் இடம்.

நம் இரத்த நாளங்களில் கலக்கப்படும் பொழுது கருவாகி உருவாகிவிட்டால் பிரம்மலோகம்... அணுவாகின்றது. அணுக்களாக உருவாகிவிட்டால் அதற்கு உணவு தேவை.

அப்போது உணவுக்காகக் கிளர்ச்சியாகி உந்தப்படும் பொழுது உயிரில் பட்டு உணர்ச்சிகளாக மாறி இரத்த நாளங்களில் கலக்கின்றது.
1.உயிருக்கு எட்டும் போது சண்டையிட்டவர்கள் வெளிப்படுத்திய உணர்வுகளைப் பரமாத்மாவிலிருந்து கண்ணின் காந்தப் புலன் இழுக்கின்றது.
2.காந்தப்புலன் இழுத்து நம் ஆன்மாவாக மாற்றுகின்றது... சுவாசிக்கச் செய்கின்றது.
3.அந்த உணர்வுகள் உணர்ச்சிகளாக மாறி இது உணவாக எடுத்துக் கொள்ளக்கூடிய நிலை வருகிறது.

நம் உடலில் எத்தனையோ கோடி உணர்வுகள் இருப்பினும் இதன் உணர்வு வலுப்பெறும் போது அந்தக் கோப உணர்வுகளைக் கவர்கிறது.

அதே உணர்ச்சியின் தன்மை நமக்குள் ஏற்படும் போது என்ன நடக்கிறது...?

யாரையாவது பார்த்தோம் என்றால் திடீரென்று நமக்குக் கோபம் வரும். கோபம் ஏன் வருகிறது...? ஒருவரைப் பார்த்தால் ஏன் சப்தம் போடுகிறோம் என்று தெரியாது...!

சண்டை போடுவதே சிலருக்குத் தெரியாமல் இந்தக் கோபத்தின் தன்மை வரும். பளீர்... என்று வரும். காரணம் அந்த அணுக்களுக்குச் சாப்பாடு வேண்டும் என்பதற்காக அப்படி இயக்குகின்றது.

அந்த நேரத்தில் நம்மால் நல்ல குணங்களை என்ன முடிகின்றதா...? இல்லை.

சில நேரங்களில் நாம் நல்ல குணங்களை எண்ணினால் அது முடிவதில்லை. வெறுப்பு வேதனை போன்ற அணுக்கள் ஜாஸ்தியாக நம் ஆன்மாவிலே முன்னாடி இருந்தால் அத்தகைய நிலை தான் வரும்.

ரேடியோ டி.வி. ஸ்டேசன் ஒலி/ஒளிபரப்பு செய்த உடனே எந்தெந்த உணர்வுகள் எந்த அலைவரிசைகளில் வருகிறதோ திருப்பி வைத்தவுடனே டி.வி.யிலே பார்க்கின்றோம்... ஒளிகளைக் காண முடிகின்றது. காற்றிலிருந்து பிரித்து எடுக்கின்றது.

இதே போன்றுதான் நமக்குள் இருக்கக்கூடிய உணர்வுகள் எப்போது பதிவானதோ இந்த உணர்ச்சிகள் தன்னிச்சையாக இயக்கப்படும் பொழுது நமக்கு அந்த எண்ணங்கள் வருகின்றது.

1.நாம் அமைதியாக இருந்தாலும்... சண்டை போட்ட நினைவெல்லாம் வரும்... பாக்கி நினைவு வராது
2.வெறுப்படைந்தது தவறு செய்தது தவறான நிலையில் எல்லா நினைவையும் இழுத்துக் கொண்டு வரும்.

ஏனென்றால் அது வலு பெற்றது. நல்ல அணுக்களுக்குச் சாப்பாட்டை விடுவதில்லை. நல்ல அணுக்கள் சோர்வடைந்து விடுகின்றது. அப்படிச் சோர்வடைந்த பின் அடுத்து ஒரு நல்ல காரியத்தைச் செய்ய வேண்டும் என்றாலும் கூட
1.“என்ன வாழ்க்கை போ...!
2.என்ன செய்து என்ன ஆகப் போகின்றது...?” என்ற சொல் வரும்.

வலு கொண்டு ஒரு நல்ல எண்ணத்தையோ ஒரு காரியத்தையோ பற்றிப் பேசவோ செயல்படுத்தவோ முடியாத நிலைகள் ஏற்பட்டு விடுகின்றது.

காரணம் “அதனுடைய அழுத்தம்: அதிகமாக இருப்பதால் ஆன்மாவில் வந்து இயக்கி விடுகின்றது.

ஆகவே நம் கண் கருவிழி ருக்மணி இது போன்று பதிவாக்கி அத்தகைய உணர்ச்சிகள் வந்தால் அடுத்த கணமே ஈஸ்வரா...! என்று புருவ மத்தியில் எண்ணி... துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் என்று சிறிது நேரம் ஏங்கித் தியானிக்க வேண்டும்.

இந்த உணர்வுகளை இழுத்து
1.அந்த வேதனைப்பட்ட கோபப்பட்ட உணர்வோடு சேர்த்து இணைத்து... ஒட்டச் செய்ய வேண்டும்.
2.எப்படிப் பதிவானதோ அந்தப் பதிவான இடத்திலேயே கலக்க செய்ய வேண்டும்.

அக்ரிகல்சுரலில் (AGRICULTURE) வித்துக்களை மாற்றுவது போன்று மாற்ற வேண்டும். இப்படி மாற்றினால் சண்டை போடும் உணர்ச்சியை மாற்றிவிட்டுச் சிந்திக்கும் தன்மையாக வரும்.

செய்து பாருங்கள்.