ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 23, 2022

குருநாதருடன் ஆயுள் மெம்பராக நாம் இணைய வேண்டும்

வீட்டிலே சில பேர்களைப் பார்க்கலாம்…
1.இப்படிப் பேசுகின்றார்கள் உருப்படுவார்களா…? இப்படிப் பேசுகின்றார்கள் உருப்படுவார்களா…? என்று
2.இப்படிச் சொல்லிச் சொல்லியே “தன்னை உருப்படாமல்…” செய்து கொள்வார்கள்.

இந்த மாதிரிப் பேசுபவர்கள் உடல்களில் பாருங்கள்…! ரொம்பச் சங்கடங்கள் வரும். குடும்பத்தில் சண்டை வரும். பையன் மீது வெறுப்புகள் வரும்.

இவர்கள் எண்ணமே… உருப்படுவார்களா…? உருப்படுவார்களா…? என்று சொல்லும் போது மற்றவர்கள் இவர்களுக்கு உதவி செய்வதற்கு மாறாக பகைமையாக்கிப் பிரித்துவிடும்.

நண்பர்களிடம் அடிக்கடி இதைச் சொன்னாலும் அவர்கள் உடலில் பதிவாகி அவர்களும் இப்படிப் பேசுகின்றார்களே உருப்படுவார்களா…! என்ற நிலைக்கு வந்து விடுவார்கள். “எப்பொழுது பார்த்தாலும் இப்படிப் பேசுகிறார்கள்… இவர்கள் எல்லாம் உருப்படுவார்களா…?” என்று அவர்கள் சொல்ல ஆரம்பிப்பார்கள்.

இப்படித்தான் மாறிக் கொண்டே போகும்.

எத்தகைய தீமைகளைப் பார்த்தாலும் கேட்டாலும் அதை நுகரப்படும் பொழுது உயிரிலே பட்டுத் தான் அந்த உணர்ச்சிகள் நம்மை இயக்குகின்றது.

தீமை என்று தெரிந்து கொள்கின்றோம்… நமக்குள் அது புகாது முதலில் தடுத்துக் கொள்ள வேண்டும். அப்படித் தடுக்க வேண்டும் என்றால்
1.ஈஸ்வரா… என்று உயிரான ஈசனிடமே வேண்ட வேண்டும்… அவன் தான் நமக்கு உணர்த்துகிண்றான்.
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும்
3.எங்கள் உடல் முழுவதும் அந்தச் சக்தி படர வேண்டும்… எங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று இந்த உணர்வுகளைப் பெருக்கி பழகுதல் வேண்டும்.

மற்றவர்கள் தவறு செய்தாலும் கூட அவர்கள் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும். ஒரு தெளிவான நிலைகள் அவர்களுக்குள் வர வேண்டும் என்று இந்த உணர்வை எடுத்தால் நமக்குள்ளும் தெளிவாகின்றது.

அதே சமயத்தில் அவர்கள் எடுத்தால் அங்கே தெளிவாகின்றது.
1.எடுக்கவில்லை என்றாலும் அங்கிருந்து வந்த உணர்வுகளை
2.நாம் மேலே சொன்னபடி எண்ணிச் சுவையாகச் சமைத்து மாற்றிக் கொள்ள வேண்டும்.

காரமான உணர்வின் தன்மை அவர்களுக்குள் இருந்தால் நோயின் தன்மை அங்கே விளைகின்றது. அந்தக் காரத்தை நமக்குள் எடுத்தால் அதே நோய் நமக்கும் வரும்.

ஆகையினால் நம்மைக் காத்துக் கொள்ள வேண்டும் என்றால் நமக்கு ஒரு பாதுகாப்பு தேவை. அதற்குத் தான் ஒவ்வொரு நொடியும் அந்த துருவ நட்சத்திரத்தினுடைய சக்தியை எடுக்கும்படி சொல்கிறோம்.

துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து வளர்த்துக் கொண்டால் அதன் வழி உண்மை நிலைகளை நாம் உணர முடியும்.

கணவன் மனைவி இருவருமே அந்தத் துருவ நட்சத்திரத்தினுடைய சக்தியை எடுத்து ஒருவருக்கொருவர் பாய்ச்சப்படும் பொழுது தீமைகளை அகற்றி மகிழ்ந்து வாழும் சக்தி பெற முடியும்.

இது ஒரு பழக்கத்திற்கு வர வேண்டும். நம் குடும்பங்களில் முதலில் இதைப் பரப்பிப் பழக வேண்டும். நாம் எடுக்கும் உணர்வு நம் வீட்டில் மட்டுமல்ல… மற்ற இடங்களிலும் பதிவாகின்றது. அனைவருக்கும் கிடைக்கும் சக்தியாக வருகிறது

1.நம் குருநாதர் ஒளியாக இருக்கின்றார்
2.அவர் விண்ணிலே ஒளியாக இருப்பது போல நாமும் ஆயுள் மெம்பராக அவருடன் சேர வேண்டும்.