ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 15, 2022

அருள் ஒளியை எடுத்து அந்த ஒளி கொண்டு தாக்கினால்… இருளை ஒளியின் அறிவாக மாற்றச் செய்யும்… ஒளி.. ஒலி… ஒளி…!

 

ஒருவருக்கொருவர் கோபம் கொண்டு ஏசுகின்றனர்... பேசுகின்றனர். அப்போது தன்னைத் தாங்காது நீ உருப்படமாட்டாய்... உன் குடும்பம் நாசமாகிவிடும்.. உன் குழந்தை குட்டி எல்லாம் நாசமாகப் போகும்... கண் தெரியாது குருடாகிவிடும் என்று சந்தர்ப்ப பேதத்தால் ஒருவருக்கொருவர் சாபமிடுகின்றனர்.

சந்தர்ப்பவசத்தால் இப்படி மோதக் கூடிய நிலைகள் வரப்படும் போது அவனுக்குள் இருக்கும் நல்ல குணங்கள் அனைத்தும் சித்திரை.., திரையாக மூடிவிடுகிறது.

இந்த வாழ்க்கையில் இப்படி மூடி இருள் சூழும் நிலையாகி வேதனையாகி விட்டால் நாம் எதை நுகேர்வோம்...? அடுத்து எண்ணத்தால் நாம் எதை எடுப்போம்...? என்பதைத் தான் ஞானிகள் சித்திரை என்று அந்தத் திரையை நீக்கும் நாளாகக் காட்டினார்கள்.

1.சூரியன் எதனின் உணர்வின் தன்மையைத் தனக்குள் எவ்வாறு கவர்கின்றதோ
2.தன் ஒளியின் தன்மையைப் பாய்ச்சி அந்த அறிவின் ஞானமாக இயக்குகின்றது ஒளி... ஒலி.
3.அதைப் போல் .அந்த மெய் ஞானிகள் காட்டிய உணர்வின் சக்தியை நமக்குள் ஒளி... ஒலி... ஒளி என்ற நிலையில் எடுக்க வேண்டும்.

மனிதனுக்குள் விளைய வைத்த தீமையை அகற்ற வேண்டுமென்ற நிலையில் மெய் ஞானிகளின் உணர்வைத் தனக்குள் இழுக்கும் பொழுது இருள் சூழ்ந்த நிலையைச் சித்திரை (சிறு சிறு திரை) அதை நீக்கி உணர்வின் அறிவாக நமக்குள் அறியச் செய்யும்.

ஒருவன் தீமையில் சிக்கிக் கொண்டாலும்
1.அருள் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று அவனுக்குள் இருக்கும் உணர்வினை அந்த ஒளி கொண்டு தாக்கினால்
2.ஒளியின் அறிவாக அவனுக்குள் அறிந்திடும் ஆற்றல் வருகின்றது.. ஒளி... ஒலி ஒளி... ஒலி.

மெய் ஞானிகள் காட்டிய மெய்ப் பொருளின் உண்மை நிலைகளை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

இந்தப் புதிய வருடம் முழுவதும் என்றுமே நீங்கள் மகிழ்ந்திருக்க வேண்டும் என்பதற்குத் தான்
1.அந்த மெய் ஞானிகள் உணர்வை உங்களுக்குள் பதிவாக்கி
2.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில்
3.உங்களுக்குள் தீமைகளை அகற்றும் திறனைப் பெறச் செய்து கொண்டிருக்கின்றோம்.