ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 1, 2022

உயிர் வாழ அதி சக்தி வாய்ந்த உணர்வைக் கொடுத்தார் குருநாதர்

 

ஒரு சமயம் யாம் (ஞானகுரு) இமயமலைக்குச் செல்லப்படும் பொழுது மலை உச்சியில் பனிகள் உறைந்து இருக்கின்றது. ஆனால் உறைந்த பனிகள் (சுடு தண்ணீர் கிணறு – அடியில் கந்தகப் பாறை இருப்பதால்) சூட்டினால் கரைந்து ஒரு குளம் மாதிரி இருக்கின்றது.

அந்தக் குளத்திற்குள் பார்த்தோமென்றால் அடியில் இருக்கக்கூடிய சிறு துரும்பு கூட… கண்ணாடி போன்று பளிச்சிட்டுத் தெளிவாகத் தெரிகின்றது. ஆனால் அதில் இருந்து சூட்டினால் புகை வருகின்றது.

ஒரு துணியில் அரிசியைப் போட்டுக் கட்டி அதில் முக்கி 10 நிமிடம் வைத்திருந்தால் போதும். ஒரு பிரஷர் குக்கரில் அரிசியை வேக வைப்பது போன்று அவ்வளவு சீக்கிரம் வேக வைத்து விடுகின்றது.

அங்கே உட்கார்ந்து நான் தியானம் இருக்கச் சென்றேன். குருநாதர் அப்போதுதான் சொல்கின்றார் நீ குளிர் காய்வதற்கு இங்கே வரவில்லை… எழுந்திரு…! என்று சொல்லி குளிர் அடிக்கும் இடத்தில் போய் அமரச் செய்தார்

காரணம்…
1.குளிர் வரும் பொழுது உனக்குள் எப்படி நடுங்குகிறதோ
2.அந்த நடுக்கத்தை நிறுத்துவதற்கு இங்கே (சுடு தண்ணீர் இருக்கும் இடம்) எப்படி அமர்ந்தாயோ…
3.பின் அதி சக்தி வாய்ந்த உணர்வை நுகரப்படும் பொழுது உனக்குள் இந்த குளிர் வராது.
4.”அந்தச் சக்தியை நுகர்வதற்குத் தான்… இந்த குளிரிலிருந்து நீ தப்பிப்பதற்குத் தான்
5.நீ உயிர் வாழ வேண்டும் என்பதற்குத் தான் இதைச் செய்தேன் என்று
6.நீ போ…! என்று சொல்லி குளிர் அதிகமாக உள்ள இடத்தில் அமரச் செய்தார்.

வெறும் கோவணத்தைக் கட்டிக் கொண்டு தான் அங்கே சென்றேன். ஆனால் நீங்கள் இங்கே சமமான இடத்தில் உட்கார்ந்து மகிழ்ச்சியாக “இவ்வளவு இரகசியத்தையும்…” கேட்கின்றீர்கள்.

ஆனால் அங்கே கிடு…கிடு கிடு…கிடு என்று நடுங்கும். குருநாதர் சொன்ன முறைப்படி நான் தியானிக்கவில்லை என்றால் கிர்ர்ர்ர்ர்… என்று இரைச்சல் வரும்.

மார்கழி மாதப் பனிக்காலத்தில் ஒரு சிலருக்கு உள்ளுக்குள் இருந்து கிர்ர்ர்… என்று உடல் இரையும். அது போன்று அங்கே இமயமலைக் குளிரில் இருந்தால் எப்படி இருக்கும்…?

இருதயம் இரையப்படும் போது கொஞ்சம் வேகமாக உள்ளே வந்து டக்… என்று குறைந்து விட்டால் மூச்சு போய்விடும். காரணம் அந்த இரத்தங்கள் ஓடும் பொழுது அந்த இயக்கச் சக்தியாகும் போது உறைந்து விட்டால் எல்லாம் இன்ஜின் நின்றுவிடும்.

அந்த மாதிரி இடங்களில்…
1.மிக சக்தி வாய்ந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுகரும் பொழுது
2.உடலுக்குள் இந்த உணர்வை நான் செலுத்தும் பொழுது ரொம்ப சுகமாக இருக்கின்றது.
3.தியானத்தில் என் உடலில் இருக்கக்கூடிய அணுக்களுக்கெல்லாம் அந்தச் சக்தியைக் கொடுக்க முடிந்தது.

துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெருக்குவதற்காகத் தான் தனித்து அங்கு அனுப்பினார் குருநாதர். அதில் வளர்த்த உணர்வின் ஒளி அலைகளைத் தான் இப்போது உங்களிடம் சொல்கின்றேன்.

குருநாதர் எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பார் அந்த ஆற்றல்களை பெறுவதற்கு…! அவருக்குள் விளைந்த உணர்வின் உணர்ச்சிகளை அதைக் கவரும் ஞான வித்தாக எனக்குள் பதிவு செய்தார்.

அவர் வழியில் அதைச் செய்யப்படும் பொழுது அந்த அனுபவபூர்வமாக நான் தெரிந்து கொள்ள முடிந்தது… எடுத்துக் கொண்டேன்.
1.அதைத்தான் இப்பொழுது உங்களுக்குள் பதிவு செய்கின்றேன்
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நீங்கள் ஏங்கிப் பெறுவீர்கள் என்றால்
3.தீமைகள் செய்யும் உணர்வுகள் அனைத்தையும் கருக்கிவிடும்.