ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 12, 2022

உயர்ந்த சக்தியை உங்களுக்குள் கொடுக்கின்றேன்… நீங்கள் பொறுமையைக் கையாள வேண்டும்

 

இராக்கெட்டை விஞ்ஞானிகள் விண்வெளியிலே அனுப்பினாலும் தரைக்கும் அதற்கும் நேரடித் தொடர்பு இல்லை… அலைகளை வைத்துத் தான் அதனுடன் தொடர்பு கொள்கிறார்கள்.

இவர்கள் அனுப்பிய இராக்கெட்டில் சந்தர்ப்பத்தால் ஏதாவது பழுதடைந்தால் தரையிலிருந்தே லேசர் இயக்கமாக அந்த இயத்திரத்தைப் பூமியிலிருந்தே சீர் செய்கின்றார்கள்.

அதைப் போன்று
1.அருள் மகரிஷிகளின் அருள் சக்தியை நமக்குள் பெருக்கி… அதை வைத்து ஒரு பழுதடைந்த மனதைத் தூய்மைப்படுத்த முடியும்…
2.அதாவது அடுத்தவர்களையும் மகரிஷிகளின் அருள் சக்தியால் (லேசர் இயக்கம் போன்று) நாம் சீராக்க முடியும்.

இன்றைய மனித வாழ்க்கையில் தொழிலின் நிமித்தங்களிலோ அல்லது குடும்ப நிலைகளிலோ அல்லது பற்று கொண்டு தொழில் நடத்தும் போதோ சில வித்தியாசமான நிலைகள் ஒருவருக்கொருவர் பகைமையாகி விடுகிறது.

பகைமையான பின் அவருடைய பொருள் தான் என்று தெரிந்தாலும் பகைமை உணர்வு கொண்டே அதைச் செயல்படுத்துவதும்… அவருடைய பொருள் என்ற நிலையில் அதைக் கொடுக்காத நிலையும் ஏற்பட்டு விடுகின்றது
1.அதாவது அடுத்தவருடைய பொருளை எடுத்துக் கொண்டு
2.”என்னுடையது தான்…” என்று இம்சிக்கும் இத்தகைய நிலைகள் இன்று உலகில் பெரும்பகுதி நடக்கின்றது.

இதைப் போன்று நடக்கும் தீமைகளிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள ஒவ்வொரு நாளும் துருவ தியான நேரத்தில் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து நாம் தூய்மைப்படுத்த வேண்டும்

உடல் அழுக்கைப் போக்க நாம் எப்படிக் குளிக்கின்றோமோ… துணி அழுக்கைப் போக்கச் சோப்பைப் போட்டு அதை எப்படித் தூய்மைப்படுத்துகின்றோமோ… இதைப் போன்று நமது ஆன்மாவில் பட்ட அழுக்கினைப் போக்க… அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து நமக்குள் செலுத்த வேண்டும்.

மற்றவர்கள் செயலைப் பார்த்து நாம் எந்த விருப்பு வெறுப்பினை அடைந்தோமோ அவர்களை எண்ணி “அவர்களுக்கு நல்ல அறிவு வர வேண்டும்…” என்று எண்ண வேண்டும்.

1.எனக்குத் தீங்கு விளைவிக்கும் எண்ணங்கள் அவருக்குள் வரக்கூடாது என்ற இந்த உணர்வினை நாம் எண்ணினோம் என்றால்
2.அவர்கள் நம்மைப் பகைமையாக எண்ணும் போதெல்லாம் இந்த உணர்வுகளை அவர் நுகர நேர்ந்து
3.நம் மீது பகைமையை மறந்து… சிந்திக்கும் திறனையும் அவர்களுக்கு நாம் உருவாக்க முடியும்.

ஏனென்றால்
1.அவ்வளவு பெரிய உயர்ந்த சக்தியை உங்களுக்குள் கொடுக்கின்றேன்
2.நீங்கள் பொறுமையைக் கையாள வேண்டும்
3.சிறிது காலம் இவ்வாறு செய்தால் இங்கிருந்தே பிறருடைய குறைகளை நாம் நீக்க முடியும்

உதாரணமாக
1.நன்மை செய்தார் என்று எண்ணினால் விக்கல் ஆகின்றது
2.தீமை செய்கிறான் பாவி…! என்று எண்ணினால் புரையோடித் தீமையின் செயலாக உருவாக்குகின்றது

அதே போல்
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வினை நமக்குள் பெருக்கி
2.தீமை செய்வோர் தீமையிலிருந்து விடுபட வேண்டும் என்று எண்ணினால்
3.தீமைகளிலிருந்து மற்றவரை மீளச் செய்யவும் முடியும்.