ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 23, 2022

மனிதன் உயர்ந்த நிலை பெற ஞானிகள் காட்டிய மிக மிக எளிதான வழி - ஈஸ்வரபட்டர்

இவ்வுலகில் உதித்திட்ட அனைத்து உயிராத்மாக்களும் உயிரணுக்களும் அனைத்துமே தெய்வம் தான்.

1.தெய்வம் என்று அன்பு கொண்டு நாம் காணும் சிறு துரும்பும்
2.நாம் தெய்வம் என்று எண்ணும் நிலையிலேயே
3.நம் உயிராத்மாவும் அத்தெய்வ சக்தியைப் பெறுகின்றது.

கல்லையும் மண்ணையும் ரூபப்படுத்தித் தெய்வமாக வணங்குவதெல்லாம்
1.நம் ஆத்மாவையே அத் தெய்வ நிலையில் அன்பு கொண்டு வணங்கிடுங்கால்
2.அச்சக்தியின் திறன் நம் ஆத்மாவிற்கே பதிவு கொள்கின்றது.

உருவ வழிபாடெல்லாம்.. குண நிலையை உணர்த்திட நம் முன்னோர்கள் வழி நடத்திட்ட நல் வழி முறைகள் தாம்.

இம்மனித எண்ணங்களில் வாழ்க்கையுடன் கூடிய பல நிலைகள் கொண்ட எண்ணக் கலவையிலிருந்து
1.ஆண்டவனைப் பக்தி கொண்டு பூஜிக்கும் நிலை ஏற்படும் பொழுதே
2.ஒவ்வோர் ஆத்மாவும் அமைதி கொள்கின்றது.

பாட நிலையில் இந்நிலைகள் அனைத்திற்கும் எல்லா நிலைகளையும் புரியும்படி விளக்கியுள்ளோம். வழிப்படுத்தும் முறைக்காகத்தான் இப்பக்தி நிலை.

நாம் வாழ்ந்த… வாழும் இந்த நாட்டில் உள்ள பக்தி நிலையின் தொடர்பினால்தான் இங்குள்ள மக்களின் எண்ணத்தில் அன்பு நிலையும் சில இடங்களில் ஆத்மீக நெறி முறையும் உள்ளன.

ஆனால் இப்பூமியிலேயே மற்ற மேலை நாடுகளில் உள்ள நிலையினை அறிந்திருக்கலாம் எப்படி இருக்கிறது என்று...!

ஏனென்றால் அவரவர்கள் தான் அமைத்துள்ள வழியில்... வந்த தம் தம் தொடர்புப்படி பெற்ற... எண்ணக் கலவையின் வழித்தொடரிலேயே இன்றளவும் எண்ண நிலையுள்ளது.

ஆனால் மனித எண்ணத்தில் அனைத்து நிலைகளையும் அறியும் சக்தித் திறனுண்டு. அதை நல் நிலைப்படுத்தி… எடுத்த பிறவியின் பலனை ஒவ்வொருவரும் அடைதல் வேண்டும் என்பதற்கே இந்தப் போதனைகள்.