ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 17, 2022

தியானத்தின் அடிப்படை முறையும்… அதை வாழ்க்கையில் பயன்படுத்த வேண்டிய சரியான யுக்தியும் – பயிற்சி

 

ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்தவுடன்… “உங்கள் அம்மா அப்பாவை மனதில் எண்ணுங்கள்…” அவர்கள் தான் உங்களைக் காத்திடும் எண்ணங்கள் கொண்டு செயல்படுத்துபவர்கள்.

அந்த அரும் பெரும் சக்திகள் எத்தனையோ இந்தக் காற்று மண்டலத்தில் பரவி உள்ளது அவர்கள் உணர்வில் பதிவு செய்தது உங்கள் உடலிலும் ஆற்றல்மிக்க சக்தியாக உள்ளது.

அதன் துணையாகக் கொண்டு…
1.அம்மா அப்பா அருளால் மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்குங்கள்… உங்கள் கண்களைத் திறந்து.
2.அம்மா அப்பா அருளால் மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்
3.மகரிஷிகளின் அருள்சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா
4.அம்மா அப்பா அருளால் மகரிஷிகளின் அருள்சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா
5.மகரிஷிகளின் அருள்சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் ஜீவாத்மாக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா இப்படி ஐந்து முறை கண்களைத் திறந்து ஏங்குங்கள்.

பின் கண்களை மூடி மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் ஜீவான்மா பெற அருள்வாய் ஈஸ்வரா உள்முகமாக உங்கள் உடலுக்குள் அந்த மகரிஷியின் அருள் சக்தி பெற வேண்டும் என்று நினைவைச் செலுத்துங்கள். இவ்வாறு ஐந்து முறை எண்ணுங்கள்.

மகரிஷிகளின் அருள்சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் ஜீவான்மா பெற அருள்வாய் ஈஸ்வரா கண்களை மூடி ஐந்து முறை மீண்டும் நினைவைச் செலுத்துங்கள்.
1.உங்கள் உடலுக்குள் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்
2.மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா
3.மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா
4.மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா.

கண்களைத் திறந்து மகரிஷியின் அருள் சக்தியால் எங்கள் உடல் நலம் பெற அருள்வாய் ஈஸ்வரா.
1.மகரிஷியின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து ஆஸ்த்மா நோய் நீங்கி உடல் நலம் பெற வேண்டும் ஈஸ்வரா…
2.மகரிஷியின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து ஆஸ்த்மா நோய் நீங்கி உடல் நலம் பெற வேண்டும் ஈஸ்வரா…
3.மகரிஷியின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து ஆஸ்த்மா நோய் நீங்கி உடல் நலம் பெற வேண்டும் ஈஸ்வரா… என்று சொல்லி
4.ஒரு ஐம்பது தரமாவது எண்ணிச் சுவாசியுங்கள்.

இதே போல் கேன்சரோ மற்ற எந்த நோயாக இருந்தாலும் சரி… மகரிஷியின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து உடலில் உள்ள கேன்சர் நோய் நீங்கிட அருள்வாய் ஈஸ்வரா என்று எண்ணுங்கள்.

மகரிஷியின் அருள் சக்தியால் உடல் நலம் பெற வேண்டும் என்று முந்நூறு தரமாவது முதலில் சொன்ன மாதிரிச் சுவாசித்து அந்த உணர்வுகளை உங்கள் உடலுக்குள் செலுத்துங்கள்.
1.இந்த நோய் தன்னாலேயே போய்விடும்.
2.நீங்கள் எந்த மருந்தைச் சாப்பிட்டாலும் சரி இந்த மாதிரிச் செய்யுங்கள்.
3.மருந்து சாப்பிடுவதற்கு முன்பு இதே மாதிரிச் செய்யுங்கள்.

ஏனென்றால் இன்றைய விஞ்ஞான உலகில் மருந்து சாப்பிட்டுப் பழக்கமாகிப் போய்விட்டது. அதைச் சாப்பிடும் போது மகரிஷிகளின் உணர்வை எண்ணிக் கொண்டு நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்.

இந்தச் கேன்சருக்கெல்லாம் இன்று மருந்தே இல்லை என்று கூடச் சொல்லலாம். ஆனால் ஒரு ஆயிரம் தராமவது இப்படிச் சொன்னால் அதன் மூலம் அதை நீக்க முடியும்.

மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று ஒரு ஆயிரம் தரமாவது நீங்கள் எண்ணி அதைச் சுவாசித்தீர்கள் என்றால் நிச்சயம்
1.உங்கள் எண்ணம் உங்கள் உடலுக்குள் ஊடுருவி
2.அந்த மகரிஷியின் அருள் சக்தி உங்கள் உடலுக்குள் வலுப் பெற்று
3.அந்தக் கேன்சரையே “கேன்சல்…” செய்துவிடும்

அத்தகைய சக்தி உங்கள் எண்ணத்திற்கு உண்டு. நீங்கள் எண்ணும் எண்ணங்கள் உங்கள் உடலுக்குள் சென்று அந்தக் கேன்சரை நீக்கிவிடும்.

இதைப் பழக்கப்படுத்தினால் உங்கள் எண்ணங்களுக்கு மிக மிக வலிமையான ஆற்றல்கள் கூடும். அத்தகைய நிலை பெறச் செய்வதற்கே இந்தத் தியானப் பயிற்சி.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழிப்படி இதைக் கடைப்பிடிக்க நோய் நீக்கும் சக்தி உங்களுக்குக் கிடைக்கும்.

1.சாதாரணமாகச் சொல்கின்றேன்…! என்று யாரும் எண்ண வேண்டாம்.
2.உங்களுக்குள் அந்தச் சக்தி பெருகவே எமது குருநாதர் காட்டிய அருள் வழியில் உங்களுக்கு வாக்கின் மூலம் பதிவாக்குகின்றேன்.

ஒவ்வொரு மனிதனும் தன் மூச்சால் பேச்சால் பார்வையால் பிறருடைய தீமைகளையும் போக்க முடியும்.

நண்பனுக்கு நோய் வந்தாலும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று நூறு முறை சுவாசித்து விட்டு
1.உன் நோய் நீங்கி விடும்
2.நலமாக இருப்பாய் என்று சொல்லுங்கள்.
3.இந்த வாக்கினைப் பதிவு செய்யுங்கள்.

அவர் நோயால் அவதிப்படுகிறார் என்பதைக் கேட்டுணர்ந்தாலும் சோர்வடையாது மீண்டும் நூறு தரம்
1.மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்.
2.எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்.
3.எங்கள் ஜீவான்மா பெற வேண்டும் என்று எண்ணிச் சுவாசியுங்கள்
4.மகரிஷியின் அருள் சக்தி அவர் உடல் முழுவதும் படர வேண்டும்.
5.அவர் உடலிலுள்ள நோய்கள் நீங்க வேண்டும்.
6.அவர்கள் குடும்பங்கள் நலம் பெற வேண்டும் என்று நீங்கள் எண்ண வேண்டும்.

நீங்கள் இந்த உணர்வை எண்ணினால் கீதையிலே சொன்னது போல் நீ எதை எண்ணுகின்றாயோ நீ அதுவாகின்றாய்.
1.மற்றவர்கள் நலமாக வாழ வேண்டும் என்று நாம் எண்ணும்பொழுது
2.நலமடையும் சக்தியை நாம் முதலில் பெறுகின்றோம்.

தீமைகளை அகற்றும் ஞானியின் உணர்வை நமக்குள் வளர்க்கப்படும்போது தீமையை அகற்றிடும் சக்தியாக நமக்குள் விளைகின்றது.

அந்தத் தீமையை அகற்றும் ஆற்றல்களை நாம் பெற்றால் தான் இந்த உடலை விட்டு நாம் அகன்றால் பிறிதொரு உடலின் ஈர்ப்புக்குச் செல்லாதபடி மகரிஷியின் அருள் வட்டத்திற்குள் செல்ல முடியும்.

அங்கே சென்று உடல் பெறும் நிலையைக் கருக்கிவிட்டு உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக நிச்சயம் பெற முடியும்.

1.ஏதோ… எளிதில் சொல்கின்றேன்… எளிதில் கிடைக்கச் செய்கிறேன் என்று
2.அலட்சியப்படுத்தி விடாதீர்கள்… அது உங்களுடைய இஷ்டம்.

நீங்கள் பெற வேண்டும் என்று நான் சதா தியானிக்கின்றேன். எனது குரு அருள் உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று எண்ணுகிறேன்.

குரு அருளால் உங்களை அறியாது சேர்ந்த தீமைகள் தீய வினைகள் நீங்க வேண்டும் என்றும் உங்களை அறியாது சேர்ந்த பாவ வினைகள் சாப வினைகள் அனைத்தும் நீங்க வேண்டும் என்று தியானிக்கின்றேன்.

மகரிஷிகள் அருள் சக்திகளை நீங்கள் பெற்று உங்களை அறியாது சேர்ந்த தீமைகளை நோய்களை “நீங்களே நீக்க முடியும்…” என்ற அந்தத் தன்னம்பிக்கையில் செயல்படுங்கள்.

உணவை உட்கொள்ளும் போதும் உணவில் கை வைத்து அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணிவிட்டு பின் உட்கொள்ளுங்கள்.

அந்த அலைகள் அந்த உணவுக்குள் பாயும். சிறிது நேரம் ஆகாரத்தில் கையை வைத்து விட்டு
1.மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்.
2.எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்.
3.எங்கள் ஜீவாத்மா பெற வேண்டும் என்று குறைந்த பட்சம் பத்து தரமாவது எண்ணுங்கள்.

நாங்கள் உணவாக உட்கொள்ளும் இந்த உணவு அனைத்தும்
1.எங்கள் உடலுக்குள் நலம் பெறும் சக்தியாக வளர வேண்டும்.
2.மன பலம் மன வளம் பெறும் சக்தியாக மலர வேண்டும் என்று எண்ணி மகிழ்ச்சியுடன் உணவை உட்கொள்ளுங்கள்.
3.இந்த உணர்வின் உமிழ் நீர் சுரக்க சுரக்க
4.இந்த உணர்வுகள் சத்துள்ளதாகக் கூடி
5.உங்களுக்குள் நல்ல சக்தியாக நலம் பெறச் செய்யும் சக்தியாக வளர இது உதவும்.

இதை நீங்கள் பயிற்சியாகச் செய்து உங்கள் அனுபவத்தில் நல்ல முன்னேற்றங்களைப் பார்க்கலாம்.