ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 25, 2022

“நான்…” செய்வது தான் சரி…! என்ற எண்ணத்துடன் இருந்தால் வளர்ச்சியே இருக்காது - ஈஸ்வரபட்டர்

கேள்வி:
எண்ணத்தில் தூய்மையும் நற்செயலுடனும் இருக்கும் ஒருவருக்குத் தியானம் அவசியமா…?

மற்றவரை நோக வைக்கும் எண்ணமோ செயலோ இல்லை. தான் செய்யும் காரியமும் எண்ணமும் சரியானதாகவும் இருப்பதாக இருக்கின்றது. தான் செய்வது சரியா…? நியாயமா…? என்பது தெரியவில்லை.

1.எனக்கு நியாயம் என்று தோன்றுகிறது.
2.ஆனால் மற்றவர்கள் அதை ஏற்பது இல்லை...!

என் நினைவிலும் செயலிலும் தவறு இருந்தால் அதைத் திருத்திக் கொள்வதற்கு தயாராக இருக்கின்றேன்.

பதில்:
எண்ணமுடனும் உணர்வுடனும் நல் நிலை பெற்றிருந்தாலும் பக்தி என்ற அன்பு நிலையை வளரவிடாமல் “நான்…” என்ற நிலைப்படுகின்றது இந்த வினாவின் நிலை.

கேள்வி கேட்டவர்:
அது சரியா… தவறா..! என்பது தெரியவில்லை. “நான்…” என்று எனக்கு உணரும் நிலை எனக்கு நன்றாகத் தெரிகின்றது.

பதில்:
உணர்வுடனே… “தன் நிலையை நல் நிலை என்றுணர்ந்து.. நான்…!” என்ற உணர்வையும் கலக்கிவிட்டதினால் வந்த நிலை உன் நிலை.

1.ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லாமல் இவ்வியற்கையின் சக்தியில் எவையுமே இல்லை
2.இந்த நிலையில் தன் உணர்வை நல்லொழுக்கப்படுத்தி அவ்வொழுக்க நிலைக்கே அடிமைப்பட்டு
3.அந்த நிலையையே தெய்வமாக்கித் தன் உணர்வுடன் நானாக இருந்து என்னம்மா பயன்…?

அனைத்து நிலைகளை அறிந்த சப்தரிஷிகளுமே தனித்த நிலையில் இயங்குவதில்லை. உணர்வுடன் உணர்வை ஒன்றச் செய்து தான் செயலாக்குகின்றார்கள்.

1.நீ அமைத்துக் கொண்ட இந்நிலையிலிருந்து விடுபட்டால் தான்
2.உன் உணர்வுடன் சேமித்துள்ள நற்சக்திகள் செயல் கொண்டிட முடியும்.

நல் எண்ணமும் அவ்வெண்ணமுடன் கூடிய உணர்வினால் நம் பார்வையின் சக்தியும்… நாம் செப்பிடும் சொல் அழகும்… அன்பான ஆசை வாழ்க்கை நிலையும் தான் ஜெப வாழ்க்கையம்மா.

“ஜெபம் என்பதுவே வாழ்க்கையுடன் ஒன்றிட்ட நல் உணர்வைப் பெற்றதுவே…”

எண்ண நிலையை ஒரு நிலை கொண்டு உண்மையுடனும் அன்புடனும் அன்பாசையுடனும் உள்ளவர்களுக்குத் தெய்வ நிலை கிட்டும். தெய்வம் என்பதுவே இந்த நிலை பெற்றோரைத்தான்.

1.ஆதிசக்தியின் இயற்கை சக்திகள்தான் அனைத்து சக்திகளும்.
2.நம்மையே நாம் இவ் இயற்கையுடன் தெய்வமாகக் கலக்கவிட்டு வாழ்ந்து காட்டிடல் வேண்டும்.

இப்பேராசைக்கும் வெறி உணர்வுகளுக்கும் மற்றத் தீய சக்திகளின் உணர்வுகளுக்கும் நாம் அடிமையாகாமால் வாழ்வதற்கே “நல் ஜெபம் எடுத்திடுங்கள்…” என்று மீண்டும் மீண்டும் சொல்வது.