ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 27, 2021

உங்கள் பார்வை அனைவரது நோய்களையும் போக்கக்கூடிய சக்தியாக மலரட்டும்

 

இன்றைய விஞ்ஞான உலகில் அஞ்ஞான வாழ்க்கையாக வாழ்ந்து... விஞ்ஞான அறிவால் பூமியில் தீயவினைகள் பரவியிருக்கும் இந்த நேரத்தில்
1.மகரிஷிகளின் அருள் சக்தியை ஒவ்வொருவரும் பெற்று... அருள் ஞான வாழ்க்கை வாழ்ந்திடவும்
2.நஞ்சினை வென்றிடும் அருள் சக்தி பெற்று மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ்ந்து பேரின்பப் பெரு வாழ்வு வாழ்ந்திடவும்
3.சர்வ பிணிகளையும் அகற்றும் சக்தி பெற்று சர்வ நஞ்சுகளையும் வென்றிடும் அருள் சக்தி பெற்று
4.உலக மக்கள் அனைவரையும் அருள் சக்தி பெறச் செய்யும் அருள் சக்தி நீங்கள் பெற
5.எமது அருளும் அகஸ்தியனின் அருளும் உறுதுணை செய்யும்.

உங்கள் பார்வையில் சர்வ பிணிகளையும் போக்கிடும் அருள் சக்தி பெறுவீர்கள். உங்களைப் பார்ப்போர் அனைவரையும் நலம் பெறச் செய்யும் அருள் சக்தி நீங்கள் பெறுவீர்கள்.

நீங்கள் பார்ப்போர் அனைவரும் அவர்கள் உடல் நலம் பெற்று மகிழ்ந்து வாழும் அருள் சக்தி பெற்றிட... குரு அருளும் எமது அருளும் உறுதுணை செய்யும்.

மகரிஷிகளின் அருள் வட்டத்தில் நாம் அனைவரும் வாழ்வோம் இருளை வென்றிடும் மெய்ப்பொருள் காண்போம். அருள் வாழ்க்கை வாழ்ந்து அருள் ஞானம் பெறுவோம். தெளிந்த மனத்துடன் வாழ்வோம். மலரைப் போல மனம் பெற்று மகிழ்ந்து வாழும் சக்தியுடன் வாழ்வோம்.

மகரிஷிகளின் அருள் சக்தி அனைவரும் பெற்று மகிழ்ந்து வாழும் சக்தியாக நாம் பெறச் செய்வோம். உலக மக்கள் அனைவரும் நலம் பெற்று விஞ்ஞான அறிவால் விளைந்த சர்வ நஞ்சினை வென்றிடும் அருள் சக்தி பெற நாம் தியானிப்போம்.

உலக மக்கள் அனைவரும் அருள் ஞானம் பெறும் சக்தியாக ஒன்றுபட்டு வாழ்ந்திடத் தியானிப்போம்.

1.இனி வரும் காலங்களில் மெய் வழி செல்லும் மெய் வழி பெறும் அருள் ஞான வாழ்க்கையாக நாம் வாழ்வோம்.
2.உலக மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு வாழ்ந்திட நாம் தியானிப்போம்... தவம் இருப்போம்

உலக மக்கள் அனைவரும் நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றிடும் அருள் உணர்வு பெற நாம் தவம் இருப்போம். அருள் வழி வாழ்வோம்... அனைவரும் ஒன்றுபட்டு வாழ்ந்திடும் அருள் ஞானம் பெற நாம் தவம் இருப்போம்..!