ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 18, 2021

இன்றைய உலக சூழ்நிலையில் எதை நம் விதியாக மாற்ற வேண்டும்…?

 

அன்றாட வாழ்க்கையில் சந்தர்ப்பத்தில் ஒரு கடுமையான வேதனைப்படுவருடைய செயல்களை நாம் உற்று நோக்கினோம் என்றால் அது நமக்குள் “விதியாக” மாறுகின்றது.

இதை எதற்காகச் சொல்கிறோம் என்றால்... இன்றைய உலகில் அனைத்துமே விஞ்ஞான அறிவால் பெரும் வேதனைப்படும் உணர்வுகளையே நாம் நுகர்ந்து கொண்டிருக்கின்றோம்.

1.பத்திரிக்கை வாயிலாகவும் டி.வி. வாயிலாகவும் எங்கோ நடக்கும் சம்பவங்களை நாம் கேட்கின்றோம்… உடனுக்குடன் பார்க்கின்றோம்
2.அதையெல்லாம் பார்த்து… நுகர்ந்து… உணர்வால் அறிந்து கொண்டுதான் இருக்கின்றோம்.

அந்தக் கடுமையான உணர்வுகள் நமக்குள் பதிவாகி விட்டால் அதுவும் நமக்குள் “விதியாக” மாறி விடுகின்றது.

பலருடைய துன்பப்பட்ட உணர்வுகளையும் பலருடைய கொடுமைகளையும் நமக்குள் எடுக்கும் பொழுது அது எல்லாம் நமக்குள் வினையாக வித்தாகப் பதிவாகின்றது. இப்படி ஒரு வித்தாக மாறுவதைத்தான் “விதி” என்று சொல்வது.

1.அப்படிப் பதிவான வித்து தன் இனத்தைப் பெருக்க
2.மீண்டும் மீண்டும் அதே உணர்வைத் தான் கவரும்.
3.அதே துன்பத்தைத் தான் நமக்குள்ளும் செயல்படுத்தும்.

ஆனால் அந்த விதியை எவ்வாறு மாற்ற வேண்டும்…?

பத்திரிகையோ டி.வி.யோ பார்த்துப் படித்த பின்பு உடனே நாம் என்ன செய்ய வேண்டும்…?
1.அந்த வீரியத் தன்மை (கொடுமைகள்) நமக்குள் அது தனித்த நிலையில் வளராது தடுக்க
2.ஈஸ்வரா…! என்று நம் உயிரைப் புருவ மத்தியில் எண்ணி
3.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று
4.உடலுக்குள் பல முறை செலுத்த வேண்டும்… இந்த உணர்வினை நமக்குள் அதிகமாக நமக்குள் கலக்கச் செய்ய வேண்டும்.

அதற்குப் பின்… பத்திரிகையிலோ டி.வி.யிலோ படித்துப் பார்த்த (சம்பவங்கள்) அத்தகைய நிலைகள்…
1.நாளை நடப்பது எல்லாம் நல்லவைகளாக நடக்க வேண்டும்.
2.தீமைகளிலிருந்து மக்கள் விடுபட வேண்டும்
3.மெய்ப்பொருள் காணும் அருள் சக்தி அவர்கள் பெற வேண்டும் என்று இப்படி உணர்வை மாற்றி விட்டால்
4.இது நமக்குள் தீமைகளை வென்றிடும் “விதித் தன்மை” அடைகின்றது.

இதைத்தான் மதி கொண்டு விதியை மாற்றுதல்…! என்று சொல்வது.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று நாம் எண்ணி எடுத்தால் இது மதி…! அந்தப் பேரருளை நமக்குள் பெறச் செய்கின்றது. நம்மைப் பிறவியில்லா நிலை அடையச் செய்கின்றது

ஆகையினால் நாம் ஒவ்வொருவரும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற காலை துருவ தியானம் நல்ல பலனைத் தரும்.

குடும்பத்தினர் அனைவரும் ஒவ்வொரு நொடியிலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்து வளர்த்துக் கொள்ளுங்கள்.