ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 4, 2021

தீமைகளை நீக்கக் கண்ணன் காட்டும் திருட்டு வழி

 

இன்று மனிதனாக இருக்கும் நாம் நல்ல செழுமையாக இருந்தாலும் பிறருடைய துயர் துடைக்கக் கேட்டுணர்ந்த அந்தத் துயரமான உணர்வுகள் நமக்குள் வந்த பின் அந்த உணர்வுகள் நம் நல்ல உணர்வுடன் இரண்டறக் கலந்து விடுகின்றது.

பின் அது ஓங்கி வளர்ந்து விட்டால்
1.நம் உடலை… மகிழ்ச்சியாக வைத்திருந்த இந்த உடலின் சாரத்தை
2.அது செயல்படாது தடுத்து விடுகின்றது.
3.அதனால் உடல் நலிந்து… உணர்வுகள் குறைந்து… எண்ணங்கள் நலிந்து…
3.நம் வாழ்க்கையில் எதனையுமே வலுவான நிலையில் செய்ய முடியாத நிலைகளுக்குக் கொண்டு செல்கின்றது.

இதிலிருந்து நம்மைக் காத்திட… இத்தகைய நஞ்சிலிருந்து நாம் மீள்வதற்கு நமது குரு காட்டிய அருள் வழியில் நாம் ஆத்ம சுத்தி செய்வோம் என்றால் நம்மைக் காத்திட முடியும்.

அதற்காக வேண்டித்தான்,,,
1.அந்த அருள் ஞானிகள் கண்டுணர்ந்த இந்த உணர்வின் சாரத்தை
2.உங்களுக்குள் காத்திடும் எண்ண உணர்வுகளுக்குள் இணைத்து
3.அதை வலுப் பெறச் செய்யும் நிலைக்கு இதை யாம் (ஞானகுரு) உபதேசிப்பது.

மாமகரிஷி வியாசர் காட்டிய அருள் வழியில் கண்ணன் (நமது கண்கள்) காட்டிய நிலைகள் கொண்டு, “அதோ வருகின்றான் நாரதன்…!” என்று நாம் எண்ணும்போது புற நிலைகள் கொண்டு நமது ஆன்மாவைச் சுத்தப்படுத்திச் செயல்படுகின்றோம்.

1.நம் கண்ணின் நினைவலைகளை விண்ணை நோக்கிச் செலுத்தி…
2.இப்போது உங்களுக்கு உபதேசித்த உணர்வுகளின் வலுவின் துணை கொண்டு
3.அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நாம் பெற வேண்டும் என்று
4.கண்ணின் நினைவை உயிரோடு ஒன்றச் செய்ய வேண்டும்.

உயிரான கண் அகக்கண்… நம்முடய கண் புறக்கண். புறக்கண்ணால் அகக் கண்ணின் (உயிரின்) நினைவு கொண்டு அந்த ஆற்றல் மிக்க சக்தியை நாங்கள் பெற வேண்டும் என்று நாம் ஏங்கினால் “சிவன் நெற்றிக் கண்ணைத் திறந்தால் சுட்டுப் பொசுக்கிவிடுவான்” என்பதாகும்.

நம் உடலான சிவத்திற்குள்…
1.உயிர் அகக்கண்ணாக இயக்கும் நிலையில்
2.புறக்கண்ணின் நினைவு கொண்டு நினைவினை உயிருடன் ஒன்றி,
3.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கி
4.அது எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலிலுள்ள ஜீவ அணுக்கள் ஜீவாத்மாக்கள் பெற வேண்டும் என்று
5.உள் நினைவில் கண்களை மூடி
6.நம் உடலுக்குள் இருக்கும் அனைத்து அணுக்களிலும் படர வேண்டும்” என்று செய்வதே கண்ணன் காட்டிய திருட்டு வழி.

கண்ணன் காட்டிய நிலைகள் கொண்டு இந்த உணர்வுகளை (மகரிஷிகளின் உணர்வுகளை) உள் செலுத்தும் போது அந்த ஞானிகளின் உணர்வுகள் “பிராணாயாமம்”

அந்த ஞானிகளின் உணர்வுகளை நமக்குள் ஜீவன் பெறச் செய்து அது வளர்ச்சியாகும் பொழுது
1.நாம் ஒரு பொருளைப் பாத்திரத்தில் போட்டு வேக வைக்கும் பொழுது
2.அதனின் சத்து கொதித்து அதனின் மணம் வெளி வருவதைப் போன்று
3.அந்த மணத்தின் வீரியத் தன்மை (ஞானிகளின் அருள் சக்தி) உள் நின்று வெளி வருவதை
4.நாம் வேதனைப்பட்ட உணர்வின் தன்மையை இது பிளக்கின்றது.

முதலிலே சொன்ன… பிறர் துயர் துடைக்க எடுத்துக் கொண்ட துயரமான உணர்வுகள் நம் உடலுக்குள் சேர்க்கும் முன் நம் ஆன்மாவாக மணமாக மாறுகின்றது.

அது மடி மேல் ஆன்மாவாக இருந்தாலும்
1.நாம் கண்ணின் நினைவு கொண்டு உயிருடன் ஒன்றி
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெற வேண்டும்
3.அது எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் உள்ள ஜீவ அணுக்கள் ஜீவாத்மாக்கள் பெற வேண்டும் என்று
4.கண்ணான கண்ணின் நினைவுகளை உள் செலுத்தப்படும்போது நாம் எண்ணிய உணர்வுகள் பிராணாயாமம்…!

அது ஜீவன் பெற்று அந்த மணத்தின் வீரியத் தன்மை உள் நின்று வெளி வருவதை மடி மீது நம் வேதனைப்பட்ட உணர்வின் தன்மையைப் பிளக்கின்றது.

இந்த முறைப்படி ஆத்ம சுத்தி செய்தால் எத்தகைய தீமைகளையும் நாம் பிளக்க முடியும். நாம் செய்த நன்மை நிலைத்திருக்கும். நமக்கும் உயர்வைத் தான் தரும்.