ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 7, 2016

வீட்டில் "திருமண வைபவம்" நடைபெற தியானிக்க வேண்டிய முறை

நமது குடும்பங்களில் திருமணப் பருவம் எய்தியவர்களுக்கு திருமணம் செய்து வைக்க நல்ல வரன்கள் அமையாமல் இருக்கலாம். அல்லது வரன்கள் அமைந்து சூழ்நிலை சரியில்லாது திருமணம் தள்ளிப் போய்க் கொண்டிருக்கலாம் இவைகள் குடும்பத்தில் மனக் கவலையை உண்டாக்கலாம்.

ஆனால், இவைகளுக்காக நாம் கவலைப் பட்டுக் கொண்டேயிருந்தால் வேதனையின் நஞ்சு அதிகரித்து வீட்டில் குழப்பங்களும் அமைதியின்மையும் உண்டாகிவிடும்.

இவைகளையெல்லாம் தவிர்த்து சீக்கிரமே திருப்பூட்டு வைபவத்தின் மேளம் வீட்டிலே ஒலிக்க வேண்டும் என்றால் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்திகளை நம்மிடத்திலும் நம் இல்லத்திலும் படர வேண்டும்.

ஏனென்றால், துருவ நட்சத்திரத்தின் அருள் உணர்வுகள் நம்மிடத்திலும் இல்லத்திலும் படரும் பொழுது குழப்பங்கள் நீங்கி மனத் தெளிவும் அமைதியும் கிடைக்கப் பெறுகின்றது.

பின் இந்த இல்லத்திற்கு வரும் வரன் கூட்டத்தாருக்கும் துருவ நட்சத்திரத்தின் உணர்வலைகள் கிடைக்கப் பெற்று அவர்களும் உங்களுடைய “மனதிற்கிசைந்தவாறு ஒத்து வருவார்கள்”.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் உணர்வை எண்ணி ஏங்கும் பொழுது அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியே “நல்ல சம்பந்தந்தத்தை உங்கள் வீடு தேடி வருமாறு” செய்யும்.

எனவே தன் மகனுக்கோ மகளுக்கோ நல்ல வரன் அமையவோ அல்லது திருமணத்திற்கு உண்டான சூழ்நிலை உண்டாகவோ கீழ்க்கண்டவாறு ஆத்ம சுத்தி செய்து தியானித்து வருவோமேயானால் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியால் அனைத்தும் நல்ல முறையில் ஈடேற வாய்ப்புண்டு.

அம்மா அப்பா அருளால் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்களைத் திறந்து ஏங்கி இருக்க வேண்டும்.

பின் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று கண்களைத் திறந்து ஏங்கி இருக்க வேண்டும்.

கண்களை மூடி துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்தநாளங்களில் கலந்து இரத்தநாளங்களில் உள்ள ஜீவ அணுக்கள் ஜீவ ஆன்மாக்கள் அனைத்திலும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்ற உணர்வை உடல் முழுவதும் படரவிடுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியால் என் மகனுக்கு/மகளுக்குக் கூடிய சீக்கிரம் திருமணம் நடைபெற அருள்வாய் ஈஸ்வரா என்ற உணர்வை எண்ணி ஏங்கி ஒரு ஐந்து நிமிடம் குடும்பத்துடன் தியானிக்க வேண்டும்.
நல்ல மருமகன் அமைய
துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியால் என் பெண்ணிற்கு நல்ல வரன் கிடைத்து விவாகம் நடந்து துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியால் அவள் புகும் இல்லம் செல்வச் செழிப்புடனும் செல்வாக்குடனும் தொழில் வளத்துடன் வாழ்ந்து வளர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று எண்ணுதல் வேண்டும்.

குடும்பத்தில் உள்ள எல்லோரும் இதை எண்ணுதல் வேண்டும். அந்தப் பெண்ணும் இந்த முறைப்படி ஏங்கித் தியானிக்க வேண்டும்.
நல்ல மருமகள் அமைய
துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியால் என் மகனுக்கு நல்ல வரன் கிடைத்து விவாகம் நடந்து துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியால் வரும் மருமகளால் இந்த வீட்டில் செல்வச் செழிப்பும் தொழில் வளமும் செழித்திருக்க அருள்வாய் ஈஸ்வரா என்று எண்ணுதல் வேண்டும்.

குடும்பத்தில் உள்ள எல்லோரும் இதைத் தியானித்தல் வேண்டும். அந்த ஆணும் இந்த உணர்வை ஏங்கித் தியானிக்க வேண்டும்.

மேலே சொன்ன முறைகளில் எண்ணி ஏங்கித் தொடர்ந்து தியானித்து வருவீர்கள் என்றால் நல்ல குடும்பத்திலிருந்து மணமகனோ மணமகளோ வெகு சீக்கிரமே அமைந்து விடும்.

பின் அவர்களுடைய வாழ்க்கை செல்வச் செழிப்புடனும் தொழில் வளத்துடனும் சிறப்பான முறையில் இருக்கும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் முப்பத்து முக்கோடி மகரிஷிகளின் அருள் சக்தியும் எங்கள் இல்லம் முழுவதும் படர்ந்து எங்களை அறியாது சேர்ந்த தீய வினைகள், பாவ வினைகள், சாப வினைகள், பூர்வ ஜென்ம வினைகள் அகன்றிட அருள்வாய் ஈஸ்வரா என்று வீட்டில் உள்ள அனைவரும் சேர்ந்து கூட்டுத் தியானம் இருக்க வேண்டும்.
எண்ணியது கை கூடும் வழி
தியானம் செய்யக் கூடிய அன்பர்களைக் கூப்பிட்டு “வாராந்திரக் கூட்டுத் தியானமும், மாதாந்திரக் கூட்டுத் தியானமும் இல்லத்தில் நடத்துவது” சாலச் சிறந்தது.

அனைவரும் சேர்ந்து ஐக்கிய உணர்வுடன் தியானித்து வெளிப்படுத்தும் துருவ நட்சத்திரத்தின் ஆற்றல்கள் நம் இல்லங்களில் படர்ந்து சந்தர்ப்ப சூழ்நிலைகளால் நாம் பதிய வைத்த வேதனையான உணர்வுகளை மாற்ற வழி வகுக்கும்.

நமது இல்லத்திற்கு வருவோர் அனைவரும் மகிழ்ச்சி பெறுவார்கள். நாம் மன வளம் மன பலம் கொண்டு சிந்தித்துச் செயல்பட முடியும்.

“நாம் எண்ணியது கை கூடும்”