ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 27, 2016

நோயை நீக்குவதற்காக அல்ல, மகரிஷிகளின் அருளைச் சேர்த்து உயிருடன் ஒன்றி ஒளிக்கதிராக மாற்றிடவே இந்த உபதேசம்

எமது அருள் ஞான உபதேசத்தினைக் கேட்டுக் கொண்டிருப்பவர்கள் யாம் சொல்வது புரியவில்லை என்ற இந்த உணர்வை இணைத்துவிட்டால் அடுத்து நீங்கள் சிந்தித்தாலும் இந்த நினைவுகள் வராது.

ஆகவே, உபதேசிக்கும் இந்த உணர்வைப் பெறவேண்டும், இதை அறிய வேண்டும், அந்த அறியும் உணர்வுகள் எனக்குள் வளரவேண்டும் என்று ஏங்கிப் பெற்றால் இந்த உணர்வின் தன்மை உங்களுக்குள் அணுக்கருவாகி நினைவு கொள்ளும் போது அதனின் இயக்கமாக வரும்.

ஆசிரியர் பாடம் சொல்லிக் கொடுக்கிறார் என்றால் சொல்வது எனக்கு அர்த்தமாகவில்லை என்று ஏங்கிப் பெற்றால் அடுத்து அவர்கள் பார்த்தாலும் அந்த அறிவு அவர்களுக்கு வராது.

ஆகவே, நாம் எதனைக் கூர்மையாக எண்ணுகின்றோமோ அதுதான் நமக்குள் பதிவாகும், உயிர் அதைத்தான் நமக்குள் அணுவாக உருவாக்கும், அதனின் செயலாகவே நம்மை இயக்கும்.

இன்றைய நிலைகளில் வேதனையாக இங்கே வருகின்றார்கள் இந்த நோய்கள் எல்லாம் நீங்கும் என்று சொன்னால் அதை உற்றுப் பார்த்தால் அந்த நோய்க்கு மட்டும் உணர்வுகளை நுகர்வார்கள்.

அந்த உணர்வைத் தனக்குள் பருக ஏங்குவார்கள். ஆனாலும், இந்த உண்மையின் உணர்வின் தன்மையைப் பெறும் தன்மையை இழந்துவிட்டு நோய் தீர்ந்தால் சரி என்ற உணர்வில் தான் வரும்.

இது ஒன்று மட்டும் இது உதவாது.

அருள் மகரிஷிகளின் உணர்வை நமக்குள் சேர்த்தால்தான் பின் வரும் உணர்வின் அந்த நஞ்சின் அணுக்களை இது மாற்றியமைக்கும். அதனை அடக்கி அதனின் உணர்வின் தன்மை கொண்டு ஒளியாக மாற்றும் நிலை வரும்.

ஆகவே, நம் எண்ணத்தின் வலிமை கொண்டு தான் உபதேசிக்கும் உணர்வுகளை நமக்குள் வளர்த்து அருள் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ்ந்திட வேண்டும்.

இந்த உடல் நமக்குச் சொந்தமல்ல. நம் உயிரை நமக்குச் சொந்தமாக்க வேண்டும். இந்த உடலிலே விளைந்த உணர்வின் அணுக்களை நமக்குள் சொந்தமாக்க வேண்டும் என்றால் அருள் மகரிஷிகளின் உணர்வை நமக்குள் பாய்ச்ச வேண்டும்.

உயிர் ஒளியானது, உணர்வை ஒளியாக இதை இணைத்து இந்த உயிரின் துணை கொண்டு இந்த உணர்வின் தன்மை தனக்குள் இணைத்து இந்த உடலை விட்டுச் சென்றால் ஒளியின் கதிராக மாற்றிடும் உணர்வுகள் பெறவேண்டும்.

ஆகவே, இவ்வாறு மாற்றிடும் நிலை பெறவேண்டும் என்றால் தான் பெற்ற சக்தி தன் மனைவி பெறவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும். கணவனால் பெற்ற சக்தி கணவன் உயரவேண்டும் என்று கணவனும் மனைவியும் இந்த உணர்வு இரண்டையும் ஒன்றியே செயல்படுத்த வேண்டும்.

இதைத்தான் காலை துருவ தியானத்தில் நாம் இதையெல்லாம் எண்ணி ஏங்குதல் வேண்டும். இதுதான் நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழி.