ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 11, 2016

எலக்ட்ரானிக்கில் பூசப்படும் கெமிக்கல் முலாமும், ஊனுக்குள் யாம் பதிவாக்கும் அருள் ஞானிகளின் முலாமும்

விஞ்ஞானி நிரூபிக்கின்றான். ஒரு காந்தப்புலனறிவில் பல கெமிக்கல் கலந்த நிலைகளை ஏற்றிவிடுகின்றான். பின், அதனுடைய சுருதிகளை அங்கே அதைத் தட்டி எழுப்பப்படும்போது அந்த உணர்வு வருகின்றது.

ஏனென்றால் மனிதனுக்குள்ளும் எலக்ட்ரான்தான், ஒவ்வொரு புலனறிவுக்குள்ளும் எலக்ட்ரான். அந்த உணர்வின் அறிவாகும்போது
அவன் எண்ணிய உணர்வு அதிர்வுகளாகின்றது. 
அதிர்வுக்குத்தக்க இவன் எண்ணியபடி கண்களால் பார்க்கின்றான்.

உருவத்தின் தன்மையை இப்படித்தான் இருக்கும் என்ற நிலையை அந்த எலக்ட்ரான் .எண்ணங்களை எண்ணும் போது அதற்குக்தக்க உருவத்தையே அந்த எலக்ட்ரிக் கம்ப்யூட்டரில் போட்டுக் காட்டுகிறான்.

இது எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் அந்தக் கெமிக்கலைக் காட்டுகின்றது.

இதே போல அளவுகோலின் உண்மையின் உணர்வின் தன்மையை இவன் எடுக்கப்படும்போது மனிதனுடைய சிந்தனை - எல்லாம் எலக்ட்ரான் என்ற நிலை வரப்படும்போது
அதில் எண்ணும் கூர்மை தைக் கவர்ந்து
இவனுக்குள் அடிக்கச் செய்து இந்த உணர்வு இதற்குள் பதிந்து
சில தத்துவங்களைக் கொண்டு வருகிறது.
கம்யூட்டருக்குள் இருக்கும் எலக்ட்ரானிக் - பதிவான அந்தக் கெமிக்கல்

நம் உடலுக்குள் பல கோடி உணர்வுகளைச் சேர்த்துக் கொண்டபின்  நமக்குள் ஊழ்வினை என்ற இந்தக் கெமிக்கல் உண்டு.

ஆக, உற்றுப் பார்த்த உணர்வைப் பதிவாக்கி மீண்டும் உணர்வின் தன்மை எலக்ட்ரானிக்காக மாற்றி அதன் உணர்வின் இயக்கமாக நாம் அறிகின்றோம்.

அன்று புலஸ்தியர் புலன் இயக்கத்தை கண்டுணர்ந்த அந்த அருள் ஞானியின் உணர்வை நாம் பெறுவோம் என்று ஊழ்வினையாகப் (ஊழ்வினை என்ற கெமிக்கலுக்குள்) பதிவு செய்து செய்துகொள்ளுங்கள்.

உபதேச வாயிலாக
உங்களுக்குள் பதிவு செய் உணர்வு ஒவ்வொன்றிலும்
துருவ நட்சத்திரத்தின் உணர்வை இணைத்ததனால்
இதுவே உங்களுக்குள் தியானமாகின்றது.

உங்கள் வாழ்க்கையில் இதை நீங்கள் தெரிந்து ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தீமைகளிலிருந்து விடுபட்டு தெளிந்த நிலைகள் நடந்திட இது உதவும்.

விஞ்ஞானிகள் எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற நிலைகளை வைத்து எந்திரத்தை இன்று இயக்குகின்றார்கள்.

அதில் ஒன்று அழுத்தமாகும்போது,
ஒன்றின் அழுத்தம் அதிகமாகும் போது
அதனின் அழுத்தம் அதிகமாகி விட்டால்
அது உடனே மோதி மாற்றி விடுகின்றது.

இதைப் போலத்தான் எலக்ட்ரான் என்ற ஞானியின் உணர்வின் பரை உங்களுக்குள் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றோம்.

மற்றொரு தீமை உங்களைத் தாக்கப்படும் போது தை விலக்கி
ஆனால் சிந்தித்து உங்களைச் செயலாக்கும் தன்மைக்குத்தான்
இங்கே கொண்டு வருகின்றோம்.