ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 22, 2016

டி.வி., ரேடியோ, அலைவரிசை இயங்குவது போலத்தான் மனித உணர்வின் அலைவரிசையும் (சுவாசம்) இயங்குகிறது

இன்று விஞ்ஞான அறிவு கொண்டு காணுகின்றோம். எங்கேயோ ஒலி அலைகளை ஒலி பரப்புச் செய்வதை நாம் இங்கே வீட்டிலிருந்து டி.வி. மூலம் காணுகின்றோம்.

இதைப் போன்றுதான் நமக்குள் எத்தனையோ உணர்வுகள் உண்டு. அதில் நாம் எந்த ஸ்டேசனைத் திருப்புகின்றோமோ அந்த ஸ்டேசனை அந்த அலை வரிசையில் நாம் காணுகின்றோம்.

உலகில் நாம் யாரை யாரையெல்லாம் சந்திக்கின்றோமோ இந்த உணர்வுகள் அதைப் போல ஸ்டேசனாக அமைகின்றது. நாம் தீங்கு செய்வோரை எண்ணினால் அவர் உணர்வலைகள் இங்கே படர்ந்திருப்பதை நுகர்ந்து அவர் மேல் வெறுப்பையும் வேதனையும் கொள்கின்றோம்.

வேதனைப்பட்டோர் உணர்வை நாம் அறிந்து கொண்டால் அந்த உணர்வுகளைப் பதிவாக்கியபின் அதே ஸ்டேசனைத் திறந்து வைத்தால் அதே ஸ்டேசனின் உணர்வுகள் நமக்குள் வருகின்றது.

ஆக, விஞ்ஞான அறிவிற்கும் இதற்கும் நாம் நுகர்ந்து கொண்ட உணர்வுகள் அணுவாக விளைகின்றது. அந்த அணுவினைப் பெருக்கி விடுகின்றது. அதை அறிய முடிகின்றது. அதை இயக்கும் போது உணர முடிகின்றது. பின் அது அழிந்துவிடுகின்றது.

ஒலி பரப்பும் உணர்வுகள் வெளி வரப்படும் பொழுது இயந்திரத்தின் துணை கொண்டு இயந்திரத்தில் தான் இயக்குகின்றது. இயந்திரத்தில் உருவாக்கிய உணர்வின் தன்மை நாம் நுகர்ந்தறிந்து பதிவாக்கிவிட்டால் அது அணுவாக மாற்றிவிடுகின்றது.

அங்கே தீமைகள் நடக்கும் நிகழ்ச்சிகளை டி.வி. ல் ஒலி பரப்பாகிவிட்டால் அந்த உணர்வின் தன்மை கொண்டு தீமை என்ற உணர்வின் தன்மை எண்ணினாலும் நமக்குள் வேதனை என்ற உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது.

அந்த வேதனை என்ற உணர்ச்சிகளைத் தூண்டும் பொழுது வேதனையை உருவாக்கும் அணுவாகவே உருவாகிவிடுகின்றது. பின் அதனின் உணர்வை நமக்குள் வளர்க்க எதன் அலை வரிசையில் எதை வெளிப்படுத்தியதோ அதை மீண்டும் நாம் நுகர நேருகின்றது.

உதாரணமாக எங்கோ நடக்கும் அதிர்ச்சியான செய்திகளை படமாக்கி வெளியிடும் பொழுது அதே அதிர்ச்சியின் உணர்வைக் கண் கொண்டு பார்த்துப் பதிவாக்கும் பொழுது அது வெளிப்பட்ட அலைகளை நாம் நுகர முடிகின்றது.

அதே அதிர்ச்சியின் உணர்வுகள் நமக்குள் விளைகின்றது. அதிர்ச்சியின் உணர்வுகள் விளையும் பொழுது அழியும் சரீரங்களைப் பார்க்கும் பொழுது அது நம்மை அழித்திடும் அணுக்களாக விளைந்து டி.பி. போன்ற கொடூர நோய்கள் உருவாகின்றது.

அதே போன்று வைரஸ் போன்ற நிலைகளும் நமக்குள் ஊடுருவி மற்ற அணுக்களைச் செயலற்றதாக மாற்றும் தன்மை வருகின்றது.. டி.வி.யினால் விளையும் உணர்வுகள் இவ்வாறு வருகின்றது.

ஆக, விஞ்ஞான அறிவில் இதையெல்லாம் கண்டுணர்ந்தாலும் அலை வரிசைகளை வெளிப்படுத்தும் பொழுது நாம் நுகர்ந்த உணர்வுகளை நமக்குள் அணுவின் தன்மை அடையச் செய்து விடுகின்றது  நம் உயிர்.

ஆகவே, இன்று விஞ்ஞான அறிவால் வரும் தீமைகளிலிருந்து விடுபட மெய் ஞான அறிவு கொண்ட இதை வென்றிட்ட அருள் மகரிஷிகளின் உணர்வைப் பெறவேண்டும்.

காலை துருவ தியான நேரத்தில் கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் எடுத்துக் கொண்ட சக்தி கணவனுக்குக் கிடைக்க வேண்டும் என்று மனைவியும், மனைவிக்குக் கிடைக்க வேண்டும் என்று கணவனும் இணைத்துக் கொள்தல் வேண்டும்.

இவ்வாறு கூர்மையாக துருவ நட்சத்திரத்திலிருந்தும், சப்தரிஷி மண்டலத்திலிருந்தும் எடுக்கப்படும் பொழுது கூர்மை அவதாரமாக இந்த உடலை விட்டுச் சென்ற பின் ஒளியின் சரீரமாக பிறவியில்லா நிலை அடைய உதவும்.

ஆகவே, குரு வழியில் அருள் மகரிஷிகளின் அருள் சக்தியை நீங்கள் பெற்று இந்த வாழ்க்கையில் வரும் இருளை வென்று இருளை வென்றிடும் உணர்வுகள் நீங்கள் பெற்று என்றும் இருளை வென்றிடும் சக்தியாக உங்கள் உயிருடன் துணை கொண்ட சக்தியாக உணர்வுகள் என்றும் வளர்ந்திட எமது அருளாசிகள்.

நீங்கள் குரு அருள் பெறவும், மகரிஷிகளின் அருள் சக்தி பெறவும் எமது அருள் உறுதுணையாக இருந்து வாழ்க்கையில் வளர்ந்திட எமது அருளாசிகள் உறுதுணையாக இருந்திடப் பிரார்த்திக்கின்றேன்.