ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 27, 2015

உதிரப் போக்கு

எனக்கு (ஞானகுரு) மூல நோய் இருந்தது. அதே சமயத்தில் என்னுடைய நண்பர் தன் மனைவிக்கு உதிரப் போக்கு என்ற நிலைகள் வரப்படும்போது என்னிடம் சொல்லி குருநாதரிடம் கேட்டு மருந்து வாங்கிக் கொடுங்கள்...! என்றார்.

அப்பொழுதெல்லாம் விநாயகர் சிலை ஒன்றை வைத்து குருநாதர் (மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்) சொன்னபடி அதை உற்றுப் பார்த்தால் காட்சிகள் கிடைக்கும். அந்தக் காட்சியின் தன்மை கொண்டு தெரிந்து சிலருக்குச் செய்வது உண்டு.

என்னுடைய சிறிய குழந்தை மீரா என்ற பெண்ணுக்குக் காட்சியாகக் கிடைக்கும். அது எல்லா விபரத்தையும் சொல்லும்.

இந்த மாதிரி நேரத்தில் என் நண்பர் வந்து தன் மனைவியின் உதிரப் போக்கை நீக்குவதற்கு குருநாதரிடம் மருந்து கேட்கச் சொல்கிறார்.

வீட்டில் கண் தெரியாத குழந்தை ஒன்று இருக்கின்றது, அது போக 4 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்த உதிரப் போக்கு நிற்கவே இல்லை. டாக்டர்களால் ஆபரேஷன் செய்தும் முடியவில்லை. எனக்கு என்ன செய்வது...? என்று தோன்றவில்லை.

இன்றோ நாளையோ என்ற நிலையில் என் மனைவி உள்ளது. இரத்தக் கசிவு அதிகமாகி அதனால் சேதமாகி இந்த உடலை விட்டு மனைவியின் உயிர் பிரிந்துவிடும் போலிருக்கின்றது...! என்று என்னிடத்தில் சொல்கின்றார்.

சரி.. சாமியிடம் கேட்கலாம்...! என்று நான் சொல்லிக் கொண்டிருக்கின்றேன்.

அப்படி நான் சொல்லிக் கொண்டிருக்கும்போது.... குருநாதர் ரோட்டிலிருந்து சப்தம் போடுகின்றார்....! இங்கே நாங்கள் பேசிக் கொண்டிருக்கின்றோம். ரோட்டிலிருந்து சப்தம் போடுகின்றார்....!

“டேய்..! ஓமப் பொடியை வாங்கிக் கொடுக்கச் சொல்லுடா.. உதிரப் போக்கு சரியாகப் போய்விடும் என்று சொல்லுடா...!" என்கிறார். எனக்குத்தான் தெரியும் நண்பருக்குத் தெரியாது.

ரோட்டில் இருக்கும் எலக்ட்ரிக் போஸ்டில் கல்லைக் கொண்டு “தட்டோ.., தட்டு...!” என்று தட்டிக் காது கேட்க வைத்து “ஓமப் பொடியை வாங்கி வரச் சொல்லுடா..! சரியாப் போகும் என்று சொல்லுடா...!” என்கிறார் குருநாதர்.

நண்பர் சொல்கிறார் இங்கே இத்தனை மருந்து கொடுத்து ஒன்றும் ஆகவில்லை. அது என்னங்க..! ஓமப் பொடியை வாங்கிக் கொடுக்கச் சொல்கிறீர்கள்...? இப்படிச் சொல்லிவிட்டு வாங்கப் போய்விட்டார்.

அதைச் சொன்னவுடன் என்ன செய்தார் குருநாதர்....?

எனக்கு (ஞானகுருவிற்கு) ஆனி மூலம் இருந்தது என்னால் ரொம்ப நேரம் உட்கார முடியாது.

1.உனக்கே மூல நோய் இருக்கின்றது,
2.நீ அவர்களுக்கு வைத்தியம் பார்க்கப் போகின்றாயா...? என்கிறார் குருநாதர்.

கொஞ்ச நேரத்தில் பார்த்தால் “படீர்..!” என்று வெளியில் தள்ளிவிடுகிற மாதிரி அந்த ஆனி வெளியில் வந்துவிட்டது. என் வேஷ்டியெல்லாம் இரத்தமாகிவிட்டது. வேறு வேஷ்டியை மாற்றிவிட்டு வந்தேன்.

ஓமப் பொடியை வாங்கிக் கொண்டு வந்து என் கையில் கொடுத்தார்  நண்பர். அவரிடம் சொல்லிக் கொடுத்து உங்கள் மனைவியைச் சாப்பிடச் சொல்லுங்கள் என்றேன்.

சாப்பிட்டவுடன்... “பிரேக்..,” போட்ட மாதிரி ஆகிவிட்டது. ஏனென்றாlல்...
1.குருநாதருடைய அருள் வாக்கு,
2.பார்ப்பது ஓமப் பொடி...!
3.குரு அருள் அங்கே இருக்கின்றது... அதன் வழி அங்கே நன்றாகிவிட்டது.

நண்பர் ஓடி வருகின்றார். நிற்காது போய்க் கொண்டிருந்த உதிரப் போக்கு அது பிரேக் ஆனது மாதிரி ஆகிவிட்டது.

நாளைக்கு வரையிலும் பார்க்கலாம் என்றார். இப்பொழுது நின்று விட்டது. நாளைக்குப் பார்த்தால் நாளைக்கும் இல்லை...! நன்றாகிவிட்டது....!

இதே போல குருநாதர் அவருடைய உணர்வின் ஆற்றல் மிக சக்திவாய்ந்த நிலைகளில் இருப்பதால்
1.நாம் இங்கே பேசினாலும்
2.அவருடைய உணர்வுகள் நமக்குள் இயக்கப்பட்டு
3.சொல்லாகச் சொல்லச் சொல்லி
4.இந்த ஓமப் பொடிக்குள் வார்த்தையை விட்டு
5.நோய் சரியாகப் போகும் என்று சொல்லி அது கொடுக்கும்போது
6.இப்படித்தான் குருநாதர் அனுபவத்தில் கொண்டு வருகின்றார்.