ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 18, 2015

மனிதராகப் பிறந்தபின் கணவன் மனைவி ஒன்று சேர்ந்து வாழ்வதே நல்லது

மனிதனாகப் பிறப்பது ரொம்ப அபூர்வம். பிறந்தபின் கணவன் மனைவி ஒன்று சேர்ந்து வாழ்வதே நல்லது. இரண்டு பேருடைய உணர்வுகளும் ஒன்றாக வேண்டும்.

என் கணவருக்கு அந்த உயர்ந்த நிலைகள் பெறவேண்டும் என்று மனைவி எண்ணினால் கணவனுக்கு அந்தப் பாதுகாப்பு கிடைக்கும்.

அதே போன்று என் மனைவி உயர வேண்டும் என்று கணவன் எண்ணினால் மனைவிக்குப் பாதுகாப்பு கிடைக்கின்றது. அப்பொழுது இரண்டு உணர்வும் ஒன்றாகின்றது.

இந்த உணர்வின் வலு கொண்டு வரப்படும் போது எத்தகையை தீமைகளையும் நீக்கும் அந்தச் சக்தி பெறுகின்றது.
இதை எதிர்த்து எந்தச் சக்தி வந்தாலும்
ஒரு மந்திரமே செய்தாலும் செயலிழந்துவிடும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும் எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் என் கணவருக்குப்/மனைவிக்குப் பெறவேண்டும் என்ற உணர்வைக் கூட்டிக் கொண்டால் எவ்வளவு பெரிய தந்திரமானாலும் நீக்கிவிடும்.

அதே சமயத்தில் உங்களை ரிமோட் (REMOTE) செய்து கொண்டேயிருக்கும்.

வெளியில் சென்றீர்கள் என்றால்
எங்கே கண் கொண்டு எதிர் நிலைகளைப் பார்க்கின்றீர்களோ
அவ்வளவு தூரத்திற்கு எதிர் நிலையான அலைகள் வரும் என்றால்
உதாரணமாக அங்கே விபத்து உண்டாக்கும் என்றால்
எலெக்ட்ரிக், எலெக்ட்ரானிக் போன்று இயங்கி உணர்த்தும்.

வான் வீதியில் பல நிலைகள் இருந்தாலும் ராக்கெட்டை அனுப்பப்படும் போது, அங்கே எதிர் நிலை இருக்கும் நிலைகளில் மோதிவிட்டால் திசை திருப்பிவிடும்.

இதற்காக விஞ்ஞானிகள் அதன் உணர்வுகளை அங்கே கம்ப்யூட்டரில் உருவாக்கப்பட்டு எந்தக் கோளோ (எங்கே செல்லவேண்டுமோ)
அதை அதிகமாகப் பதித்து
மற்றவைகள் அதனின் ஈர்ப்புக்குச் செல்லாது
பாதையை அமைத்துக் கொடுக்கின்றான்.

இதைப் போலத்தான் கணவருடைய நிலைகளை நீங்கள் வலுவான எண்ணங்களை எடுத்துக் கொண்டு
அவர் எங்கே சென்றாலும் பாதுகாப்பாகச் செல்ல வேண்டும்
மகரிஷிகளின் அருள் சக்தி அவர் பெறவேண்டும்
என்ற உணர்வை எடுத்தால் ஒரு விபத்தாகும் என்றால்
அந்த பஸ்ஸில் ஏறவிடாது தடுத்துவிடும்.

அதே சமயத்தில் ஒரு வியாபாரத்திற்குச் சென்றால் நஷ்டமாகும் பொருளை வாங்க விடாது. ஆகவே, மனைவிக்கு எவ்வளவு பெரிய சக்தி என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ளுங்கள்.

கணவன் மனைவி நீங்கள் இதே போல் எடுத்து வந்தால் உங்கள் குடும்பத்தில் அமைதி என்ற நிலைகள் உருவாகும். உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்.

பெண்கள் என்ற நிலைகளில் அவர்களை எவ்வளவு உயர்த்துகின்றோமோ அவர்கள் அருள் பெறவேண்டும் என்று எண்ணுகின்றோமோ, அருள் உணர்வு பெறவேண்டும் என்று பெண்கள் அக மகிழ்ந்தால் அந்தக் கணவனுக்கும் அந்தக் குடும்பத்திற்கும் நல்லது.

எந்தக் குடும்பத்தில் பெண்களை அழுக வைத்தால் அங்கே இருள் சூழும் நிலை வரும். யாருக்கும் நிம்மதி இல்லை என்ற நிலைகள் வரும். இதைப் போன்ற நிலைகள் ஏற்பட்டால் ஒவ்வொரு நொடியிலும் என்ன செய்யவேண்டும்?

பெண்கள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும்,
அது அவர்கள் உடல் முழுவதும் படரவேண்டும்
எங்கள் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும்,
எங்களை அறியாது சேர்ந்த இருள்கள் நீங்க வேண்டும்
பொருளறிந்து செயல்படும் சக்தி எங்கள் குடும்பத்தில் வளரவேண்டும்.
பெண்கள் மகாலட்சுமியாக இருக்க வேண்டும் என்று இந்த உணர்வுகளைப் பாய்ச்சிப் பழகுதல் வேண்டும்.