ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 13, 2015

தர்மன் தன் நாய்க்குத்தான் முதலில் மோட்சம் கேட்டான் ஏன்...?

நாம் மனிதனின் உணர்வுகளில் அவன் இப்படிச் செய்கிறான் இவன் இப்படிச் செய்கிறான் என்ற நிலைகளைச் சொல்லி
தான் - நான் செய்தேன்,
நான் செய்து கொண்டிருக்கின்றேன்
என்னால் தான் முடியும்
இதை அனைத்தும் நான் செய்தேன்
பலருக்குப் பல உபகாரம் செய்தேன்
என்ற நிலைகளில் நாம் சொல்வோம்.

பல உபகாரம் செய்த உணர்வுகள் ”நான்” என்ற உணர்வு வரும்போது இங்கே கௌரவம் என்ற உணர்வாகின்றது. செய்தவர்களுடைய நிலைகள் நான் செய்தேன் பார் என்னை மதிக்கின்றார்களா? என்ற இந்தக் கௌரவப் போர் வருகின்றது.

தான் எண்ணியபடி செய்யவில்லை என்றால் உணர்வின் தன்மை நுகரப்படும்போது பார்த்தவுடன் குருக்ஷேத்திரப் போராக மாறுகின்றது. அதை மீறி நம் உடலுக்குள் போனவுடனே கௌரவப் போர்.

இந்தக் கௌரவர்களுக்கும் பஞ்ச பாண்டவர்களுக்கும் உணர்வின் தன்மை புலனறிவு ஐந்தாகச் சென்று உள்ளுக்குள் செல்லும்போது பஞ்ச பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் போராகின்றது.

ஆனால், போர் என்றால் அதே சமயத்தில் அந்த நிலை உடலிலே வரும்போது நமக்குள் இருக்கக்கூடிய பல அணுக்கள் ஆக மகாபாரதப் போராக மாறுகின்றது.

நம் உடலுக்குள் பல கலக்கமும் மற்ற நிலைகளும் இந்த இரத்தத்தில் வளர்க்கப்படும் போது “மகா” போராக இது நடக்கின்றது.

ஏனென்றால் உலகில் உள்ள அனைத்து மக்களுடைய உணர்வுகளை நாம் எடுத்துக் கொண்டுள்ளோம். ஒவ்வொருவிதமான வெறுப்பின் உணர்வுகளை எடுத்துக் கொண்டோம்.

நாம் நல்லது என்று எண்ணும்போது இந்தக் கௌரவர்கள் விடுவதில்லை. ஆகவே இதைப் போல நமக்குள் கௌரவப் போர்கள் எப்படி நடந்து கொண்டிருக்கின்றது?

உங்கள் பையன் மேல் சிறிது வெறுப்பு இருக்கும்,
ஆனால் இவன் சொல்வதைக் கேட்பதா?

மனைவி நல்லதைச் சொன்னால் போதும்,
மனைவி சொல்வதைக் கேட்பதா? என்று சொல்லிக்கொண்டு
மனைவி தப்பு சொல்லியது.., தப்பு என்று சொன்னால் அதைத் திருப்பிப் பேசுவார் என்று அந்தக் கௌரவத்தில் மறைக்கவும் செய்வார்கள்.

அதே மாதிரி அடுத்து என்ன செய்வார்கள்? குழந்தை ஒரு தப்புப் பண்ணியது என்றால் இல்லவே இல்லை என்று சொல்வார்கள்.

“தான் நல்லவன்” என்று பேர் எடுப்பதற்கு என்ன செய்வோம்?

நான் அறியாமல் தப்பு செய்திருப்பேன்
ஆனால், நான் இல்லவே இல்லை என்று சொல்வேன்.

ஆகவே தவறை மறைக்கும்போது என்ன நடக்கின்றது? இந்தக் கௌரவப் பிரச்சினை வருகின்றது. குற்றவாளியாக ஏற்றுக் கொண்டால் நமக்கு எப்படிச் சரியாகும் என்று
குற்றத்தை நாம் ஏற்றுக் கொள்ள மாட்டோம்.
குற்றத்தை மூடி மறைப்பதற்கு என்ன வேலையோ அதைத்தான் செய்வோம்.

இந்த உணர்வின் தன்மை நமக்குள் வருவது கடைசி நிலை வேதனை என்ற உணர்வு வந்து மனிதனாக உருவாக்கி இருளை நீக்கிய நல்ல உணர்வுகள் அனைத்தும் மறைகின்றது. வேதனை என்ற போர் முறையே வருகின்றது.

கடைசியில் நம் எண்ணங்கள் அடிக்கடி வேதனையை எண்ணும் போது கண்ணும் பார்வையிழக்கின்றது. நமக்குள் இருக்கும் வலுவான எண்ணம் பீமன் என்ற நிலையும் அழிகின்றது. அர்ச்சுனன் என்ற நிலைகள் குறி வைத்துத் தாக்கும் உணர்வுகள் சோர்வடைகின்றது, தாக்க முடிவதில்லை.

இதைத்தான் மகாபாரதப் போரில் கடைசியில் கண்கள் இழந்தபின் அர்ச்சுனனால் எதையும் செய்ய முடியவில்லை. அவன் முன்னாடியே திருடிக் கொண்டு போகின்றான். தனக்குள் நான் என்ற நிலையில் இருந்தது அவனால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்று கண்ணனைப் பற்றித் தெளிவாக்குகின்றனர்.

அர்ச்சுனன் அவன் எல்லாவற்றையும் செய்வேன் என்றான். கண்கள் இழந்தபின் கண்ணின் உணர்வுதான் தனக்குள் செயல்படுத்துகின்றது. ஆகவே கண்ணன் கண்கள் இழந்தபின் அவனால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

எல்லாவற்றையும் மீட்டிக் கொண்டு வந்தாலும் மோப்பத்தால் அறிந்து கொண்ட இந்த உணர்வுதான் எனக்கு வழி காட்டியது.
தீமை நன்மை என்ற எனக்குள் அறிந்து
தீமையிலிருந்து விடுபடும் தன்மையை
நான் எடுத்தேன் என்று தர்மன் சொல்கிறான்.

தர்மன் யாருக்கு மோட்சம் கேட்டான்? (மகாபாரதக் காவியத்தைப் படித்துப் பாருங்கள் உள் பொருள் விளங்கும்)

முதலில் தன் நாய்க்கு மோட்சத்தைக் கொடு என்று கேட்டான்.

நாம் சுவாசித்த உணர்வின் தன்மை தான் நமக்குள் வழிகாட்டியாக இருந்தது. தீமையை நீக்கும் உணர்வுதான் எனக்குள் வழிகாட்டியாக இருந்தது. ஆகவே,
நாம் நுகர்ந்த உணர்வின் தன்மைகள்
அதுவே நான் ஒளியாகும் நிலை வேண்டுமென்று அந்த மகாபாரதப் போரில் இவ்வளவு தெளிவாகக் கொடுக்கின்றனர்.

யாராவது நாம் கொஞ்சம் சிந்திக்கின்றோமா? நன்றாக யோசனை செய்து பாருங்கள். காவியத்தை எப்படிக் கொடுத்துள்ளார் வியாசர்.

அந்த ஞானி சொன்னதை யாராவது சற்றுச் சிந்திக்கின்றோமா என்றால் இல்லையே. எவ்வளவு பெரிய பேருண்மையைக் காட்டியுள்ளார் அவர்.

நமக்குள் குருக்ஷேத்திரப் போர் நடப்பதும் கௌரவப் போர் உள்ளுக்குள் நடப்பதும் மேல் வலிக்கின்றது தலை வலிக்கின்றது என்று உடலுக்குள் நடக்கின்றது என்றெல்லாம் சொல்லுகிறோம்.

கௌரவப் போர் நடக்கும் போது எல்லாம் உள்ளுக்குள் ஒன்றுக்கொன்று மகாபாரதப் போர் ஆகின்றது. அப்பொழுது இதிலே
எதை எண்ணுகின்றோமோ
அதற்குத்தக்க கண்ணன் உள்ளுக்குள் நுகர்கின்றான்.
அது உணர்வின் தன்மை வழியாகி அதற்குத்தக்க
ஒருவருக்கொருவர் எதை எண்ணுகின்றோமோ
அந்த வலுக் கொண்டுதான் அங்கே வீழ்த்துகின்றான்.

நம் கண்கள் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை எண்ணங்கள் உருவாகின்றது. எண்ணத்திற்குத்தக்க உணர்வால் ஏற்படும் உணர்ச்சிகள் நமக்குள் போர் முறைகளாக எப்படி வருகின்றது?

எந்த உணர்வின் தன்மை
அது இயக்கம் எந்த நிலையில் இருக்கின்றது
என்பதனை மகாபாரதப் போர் நம் உடலுக்குள் எப்படி நடக்கின்றது?
என்ற நிலைகளை மகாபாரதப் போரைச் சித்தரித்துக் காட்டியுள்ளார் வியாசக பகவான்.