ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 24, 2015

ஜோதி தரிசனம் எங்கே செய்ய வேண்டும்...?

திருக்கார்த்திகை அன்று பார்த்தோம் என்றால் மக்கள் கூட்டத்தைத் திருவண்ணாமலையில் பார்க்கலாம்  பழநியிலும் பார்க்கலாம்.

ஐயப்பன் கோயிலுக்குப் போனால் அங்கேயும் ஜோதியைக் காட்டுவார்கள். இங்கிருந்து போய் அங்கே ஜோதியைத் தரிசனம் செய்தால் நமக்கு எல்லாம் கிடைக்கும் என்று செல்வார்கள்.

நமக்குள் ஜோதியை உருவாக்க வேண்டும் என்று சொன்னால்
நாம் இங்கிருந்து எங்கேயோ போய்க் கொண்டிருக்கின்றோம்.

நம் ஆசை இந்த உடலின் இச்சைக்குத்தான் செயல்படுகிறோமே தவிர  வேறு எதுவும் இல்லை.

அருள் ஒளியின் சுடராக நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த நன்னாளில் மகிழ்ச்சி பெறும் உணர்வைப் பெற்று, பகைமைகள் மறந்து ஒற்றுமை ஏற்படச் செய்யும் நிலைக்காக இருளை அகற்றும் நாள் என்று ஞானிகள் குறித்தார்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் அனைவரும் பெற அருள்வாய் ஈஸ்வரா. துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி அனவரது உடல்களிலும் படரவேண்டும். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி ஈசன் வீற்றிருக்கும் ஒவ்வொரு உடலிகளிலும் படரவேண்டும் என்று எண்ணும்படிச் செய்தார்கள்.

ஆக, இருள் அகற்றும் நிலைகளை நாம் ஒற்றுமையாக இருந்து தியானித்து  அனைவரும் நலம் பெற வேண்டும்.வளம் பெறவேண்டும் அவர்கள் உடலில் அறியாது சேர்ந்த இருள் நீங்க வேண்டும் அவர்கள் குடும்பங்கள் நலம் பெற வேண்டும் என்று எண்ணத்தினை எல்லோரும் சேர்ந்து எடுத்து பேரொளியாக உருவாக்கும் நிலைகளுக்குச் செய்தார்கள் ஞானிகள்.

இருண்ட உணர்வின் தன்மையை துருவ நட்சத்திரத்தின் அருள் ஒளி கொண்டு அனைவருடைய உணர்வுகளும் ஒளி பெறவேண்டும் என்று நாம் எண்ணும் போது
நமக்குள் ஒளி பெறுகின்றது.
ஒளியின் உணர்வின் அணுக்களாக மாற்றுகின்றது.
இருளை அகற்றிப் பொருளைக் காட்டுகின்றது.

நம் வாழ்க்கையில் அறியாது சேர்ந்த தீமைகளை நாம் மாற்றியமைக்கும் திறனும் பெறுகின்றோம். இதுதான் ஜோதி தரிசனம் (கார்த்திகை தீபம்) என்பது.

கார்த்திகை தீபம் நம் வீட்டு வாசற்படியில் வைப்பது போல நம் உணர்வின் தன்மையை ஆறாவது அறிவு கார்த்திகேயா என்று அந்த அருள் ஓளியின் உணர்வை  உங்களுக்குள் வளர்த்துக்கொண்டால் இந்த வாழ்க்கையில் வரும் இருளை அகற்றும் நன்னாளாக இது அமைகின்றது.