ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 28, 2015

உலகம் அழியக்கூடிய தருணத்திலிருக்கும் இவ்வேளையில் சப்தரிஷி மண்டலத்தை நம் இருப்பிடமாக்க வேண்டும்

குடும்பத்துக்குள் எத்தகைய சிக்கல் வந்தாலும்
அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும்.
எங்கள் குடும்பத்தில் மகரிஷிகளின் அருள் சக்தி படரவேண்டும்.
எங்களை அறியாத தீமைகள் அகல வேண்டும்
எங்களுக்குள் பொருள் கண்டுணரும் திறன் பெறவேண்டும்.
கணவன் மனைவி வசிஷ்டரும் அருந்ததி போன்று நாங்கள் வாழவேண்டும்
குடும்பத்தில் ஒன்று சேர்ந்து வாழ்ந்திடும் நிலைகள் வேண்டும்
என்று இப்படி எண்ணிப் பழகுங்கள்

ஆகையினால், நீங்கள் நேர்முகமாக இதைப் பெறவேண்டும் என்று ஏக்கத்துடன் ஆசிபெறுங்கள். எதையும் குறைகளைச் சொல்லிக் கேட்காதீர்கள். குறை உங்களுக்கே தெரியும்.
என் குடும்பத்தில் சிரமங்கள் நீங்க வேண்டும்.
மகரிஷிகளின் அருள் ஒளி பெற வேண்டும்.
எங்கள் குடும்பம் நலம் பெற வேண்டும்.
என் நோய் நீங்க வேண்டும்
மகரிஷிகளின் அருள் சக்தியால் நான் உடல் நலம் பெற வேண்டும்.
என் குழந்தைக்கு உடல் நலம் பெறவேண்டும்.
கல்வியில் அருள் ஞானம் பெற வேண்டும்.
அதற்கு உங்கள் ஆசி வேண்டும் என்று கேளுங்கள்.

தலைவலி என்றால் தலைவலி நீங்க வேண்டும் மகரிஷிகளின் அருள் சக்தியால் எனக்கு உடல் நலம் பெறவேண்டும். என் உடல் உறுப்புகளில் உள்ள கோளாறுகள் நீங்க வேண்டும். எனக்கு உடல் நலம் வேண்டும் என்ற எண்ணங்களில் நீங்கள் இதைக் கேளுங்கள்.

அப்படிக் கேட்டால், இதை மீட்கும் உணர்வுகள் உங்களில் பதிவாகும். யாம் கொடுக்கும் வாக்கின் தன்மை உங்ளுக்குள் விளையும்.

ஆனால், அங்கிருந்து வந்தவுடனே சாமியைப் பாரத்தவுடன் பெரிய கடவுள் என்று எண்ணிக் கொண்டு வருகின்றார்கள். ஐயோ, எனக்கு இப்படியெல்லாம் கஷ்டம் என்று எண்ணிக் கொண்டு
சரணாகதி தத்துவத்தில் உங்கள் கஷ்டத்தைச் சொன்னால்
நான் எவ்வளவு பெரிய சக்தி கொடுத்தாலும் தடைப்படும்.

அதனால் அதையெல்லாம் விட்டுட்டு நீங்கள் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று எண்ணி எங்கள் குடும்பங்கள் நலம் பெறவேண்டும். தொழில் வளம் பெறவேண்டும் எங்கள் வாடிக்கையாளர் நலம் பெறவேண்டும் என்று ஏங்கியிருக்க வேண்டும்.

அப்படி ஏங்கியிருந்தால் இந்த உணர்வின் தன்மை கொடுக்கும் வாக்கு வலுப்பெற்று எப்படி ஒரு செடிக்கு உரம் ஏற்றுகிறோமோ இதுபோல உங்கள் எண்ணத்திற்கு மகரிஷிகளின் உணர்வுகளை ஒன்று சேர்க்கும்போது
இந்த எண்ணம் வலு பெற்று
உங்களைக் காக்க உங்கள் எண்ணம் உதவும்.

சாமியார் செய்வார் ஜாதகம் செய்யும் ஜோசியம் செய்யும் யாகம் செய்யும் அது செய்யும் இது செய்யும் என்பது எல்லாம் பழமை.

ஆனால், பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் ஞானிகள் காட்டிய அந்த அருள் சக்திகளை நீங்கள் பெற முடியும். இந்த நம்பிக்கையுடன் உங்கள் வாழ்க்கைப் பயணத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.
அந்த சப்தரிஷி மண்டலமே
உங்களது வாழ்க்கையின கடைசி எல்லை.

ஆகவே நாம் இனி அழியா ஒளிச் சரீரம் பெறவேண்டும். இனி ஒரு பிறவிக்கு நாம் வந்தால் நரகலோகம் தான் நமக்குக் கிடைக்கும். மீண்டும் நாம் மனிதனாக வருவதற்கு முன் இந்த உலகம் இருக்குமா..,? என்று சொல்லவும் முடியாது.

அந்த அளவுக்கு இன்றைய நிலைகள் அணுகுண்டும் ஹைட்ரஜன் குண்டும் பூமி தனக்குள் இழுக்கப்பட்டு நடு மையம் வெப்பத்தின் தனல் கூடிக்கொண்டே வருகிறது.
பூமியில்  நில நடுக்கங்கள் அதிகமாக நடக்கின்றது.
வெப்பத்தின் தணலால் துருவத்திலுள்ள பனிப்பாறைகள் கறைகின்றது.
கடலில் நீர் பெருகப் போகின்றது.
நிலங்கள் குறையப் போகின்றது.

இப்பொழுது ஏற்கெனவே தொழில்கள் பெருகி விஞ்ஞானத்தின் வளர்ச்சியினால் விளையும் நிலங்கள் எல்லாம் குறைந்து கொண்டே வருகின்றது. அந்த நீர் வளம் பெருகி விட்டால் நம்முடைய நிலைகள் எல்லாம் மாறிவிடும். .

ஆகவே, விஞ்ஞான அறிவால் உலகம் அழியும் தருணத்திலிருக்கும் இவ்வேளையில் நாம் மகரிஷிகள் காட்டிய அருள் வழியில் பேரானந்த பெருநிலையான அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து அழியா ஒளிச் சரீரமாக நம் இருப்பிடத்தைத் தேடிக்கொள்ள வேண்டும்.

நாம் ஞானிகள் காட்டிய வழிகளில் சென்றால் நம்மைத் தீமைகள் அண்டாது.

அருள் ஞானியின் உணர்வுகளைப் பற்றுடன் பற்றி அதை எல்லையாக வைத்து இந்த மனித வாழ்க்கையில் வரும் இருளை மாய்த்து மெய்ஞான உணர்வுடன் நீங்கள் வாழ்ந்து வளர்ந்து உங்கள் வாழ்க்கையில் என்றும் மன மகிழ்ச்சியுடன் வாழ்ந்திட எல்லா மகரிஷிகளின் அருள் சக்தியும் நீங்கள் பெறவேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன். எமது அருளாசிகள்.