ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 10, 2014

இல்லங்களில் கணவனும் மனைவியும் எப்படி தியானிக்க வேண்டும்?

கணவன் தன் மனைவி மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று எண்ண வேண்டும்.

மனைவி தன் கணவன் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று எண்ண வேண்டும்.

எங்களுடைய இரு மனமும் ஒரு மனமாக ஒரு மனமாக ஒன்றுபட்டு வாழும் நிலை பெறவேண்டும். எங்களை அறியாத இருள்கள் நீங்கவேண்டும் என்று எண்ணி தியானிக்க வேண்டும்.

கணவன் மனைவி இருவரும் மகரிஷிகளின் அருள்சக்தியை தங்களுக்குள் பெருக்கியபின் தங்கள் குழந்தைகளை எண்ணி
மகரிஷிகளின் அருள்சக்தி அவன் பெறவேண்டும்.
அவனிடத்தில் அருள்ஞானம் பெருகவேண்டும்.
அவன் அருள்வழியில் செயல்படவேண்டும். என்றும்
தவத்தின் உணர்வை எடுத்து அவனை உருவாக்க வேண்டும்.

இந்த உணர்வின் தன்மையை வலிமையாக்கி நினைவினைச் செலுத்தினால் அவன் நிச்சயம் நல்லவன் ஆகின்றான்.