ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 6, 2014

நமக்குள் மகரிஷிகளின் அருள் சக்திகளைச் சேர்க்க வேண்டும்

சில பேர் பிறந்ததிலிருந்து நன்றாக இருப்பார்கள். ஆனால், சலிப்பு சஞ்சலம் வெறுப்பு வேதனை போன்ற உணர்வுகளை எடுத்து அதனின் உணர்வுகள் உடலில் முதிர்ந்துவிட்டால் உடலில் மூச்சுத் திணறல் வந்துவிடுகின்றது.

அப்பொழுது, எத்தனைவிதமான வேதனைகளைச் சுவாசிக்கின்றோம்? எத்தனைவிதமான அணுக்களை வளர்க்கின்றோம்?

நாம் எண்ணியது எதுவோ
அதை நமது உயிர் நம்முள் உருவாக்கியே தீரும்.

நீங்கள் எந்த ஆலயத்திற்குச் சென்று ஆண்டவனை வணங்கினாலும், உங்களிடத்திலுள்ள தீமைகளை அகற்றி அருள் மகரிஷிகளின் உணர்வுகளை உங்களிடத்தில் சேர்க்காது எந்த ஒரு வேண்டுதலும் பலனளிக்காது.