ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 9, 2014

கர்ப்பமுற்ற தாய் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டியது

சாதாரணமாக ஒருவர் புற்று நோயால் வேதனைப்பட்டுக் கொண்டிருக்க்கின்றார். அதை கர்ப்பமான தாய் பார்த்து “அடப் பாவமே.., இப்படி இருக்கின்றாரே..,” என்று நினைத்தால் போதும்.

இந்த உணர்வு இரத்தத்தில் கலக்கின்றது. கருவிலிருக்கும் குழந்தைக்கு அந்த விஷத்தன்மை வரும்.

அந்தக் குழந்தை பிறந்ததிலிருந்தே “சில்லு.., சில்லு..,” என்று அழும். நாளடைவில் அந்த வயது வரும்போது அதற்கு புற்று நோய் வரும்.

கர்ப்பக் காலங்களில் சண்டை போடுகின்றவர்களைப் பார்த்தாலோ, அல்லது எதிர்வீட்டில் சண்டையோ அல்லது சண்டையைப் பற்றிக் கேட்டுக் கொண்டிருந்தாலோ இந்த உணர்வுகளை இரத்தத்தில் கலக்கும் கருவிலிருக்கும் குழந்தைக்கும் பரவிவிடும்.

அந்தக் குழந்தை பிறந்ததிலிருந்து அதற்குக் கோபம் அதிகம் வரும்.
அம்மாவை அடிப்பான்.
அப்பாவை அடிப்பான்.
யாரைப் பார்த்தாலும் அடிக்கும் நிலையில் இருப்பான்
அவன் தப்பு செய்யவில்லை.

தாய் நுகர்ந்த உணர்வு கருவிலிருக்கும் குழந்தைக்குப் பூர்வ புண்ணியமாக மாறுகின்றது. இதெல்லாம் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.