ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 29, 2014

தீமைகளை நீக்க நாம் பழகிக் கொள்வோம் - 2

நமக்குள் எத்தனை குணங்கள் இருந்தாலும்
அதில் நாம் எதை நினைவுபடுத்துகின்றோமோ
அந்த குணத்தின் அடிப்படையில்தான் நாம் பேசுகின்றோம்.
அந்த நினைவுதான் நமக்கு ஞானம்.

நாம் கோபமாக அல்லது வெறுப்பாக இருக்கின்றோமென்றால் அந்த குணத்திற்குத்தகுந்தவாறுதான் ஞானம் வரும்.

இவைகளுக்கிடையில் மகரிஷிகளின் அருள் சக்திகளை உங்களுக்குள் பெறச் செய்வதற்குத்தான் இந்த தியானப் பயிற்சியைக் கொடுக்கின்றோம்.

இந்த முறைப்படி நீங்கள் தியானித்து ஓம் ஈஸ்வரா குருதேவா என்று புருவமத்தியில் உங்கள் உயிரான ஈசனிடம் கண்ணின் நினைவைச் செலுத்தி மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று ஏங்கவேண்டும்.

இவ்வாறு ஏங்கிவிட்டு மகரிஷிகளின் அருள்சக்தி எங்கள் உடலில் உள்ள இரத்தங்கள் முழுவதும் படர்ந்து, அதிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் அந்த சக்தி பெறவேண்டும் என்று உடலுக்குள் தியானமிருக்கும் பொழுது காற்றிலிருந்து மகரிஷிகளின் அருள் சக்தி உங்களுக்குக் கிடைக்கும்.

உங்கள் உடலில் எங்கெங்கெல்லாம் வலி வருகின்றதோ
அங்கெல்லாம் மகரிஷிகளில் அருள் சக்தி படரவேண்டும்,
உடலிலுள்ள நோய்கள் நீங்கவேண்டும்
என்ற இந்த உணர்வை எடுத்து
நீங்கள் தியானமாக வைத்துக் கொள்ளலாம்.

அப்பொழுது, அந்த மகரிஷிகளின் அருள் சக்தியால் உங்கள் துன்பங்கள் அனைத்தும் போகும், பிணிகள் நீங்கும்.

ஆக, மகரிஷிகளின் அருள் சக்தியை நீங்கள் எண்ணி எடுத்தால்தான் அந்த சக்தி உங்களுக்குக் கிடைக்கும்.

இந்த ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தை பயன்படுத்திப் பழகிக் கொள்ள வேண்டும்.