ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 9, 2014

நாம் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மையின் நிலைகள் - 1

பாசத்தால் எண்ணி "வேதனைப்பட்டால்" குடும்பத்தில் ஏற்படும் விளைவுகள்
பாசத்தால் பையன் லெட்டர் போடவில்லையே என்று
தாய் எண்ணி வேதனைப்பட்டால் போதும்.
அங்கு அவனுக்குப் புரையோடும்.

அவன் அந்த நேரத்தில் கணக்குப் போட்டால் அந்த வேதனை அவன் சிந்தனையைக் குறைத்து கணக்கு தப்பாகும்.

தாய் எண்ணியது என்று அவனுக்குத் தெரியாது. அதே சமயத்தில், ரோட்டில் நடந்து போகும்பொழுது தாய் இம்மாதிரி எண்ணினால் விபத்தில் கொண்டுபோய் விட்டுவிடும்.
வேக வைக்காமல் பச்சையாகச் சாப்பிட்டால் வரும் கேடு
வேக வைக்காமல் பச்சையாகச் சாப்பிட வேண்டுமென்று சிலர் சாமியார்கள் சொல்வார்கள். வேக வைக்காமல் சாப்பிட்டால் உடலில் குழை நாற்றம் வரும்.

அவர்கள் இறந்தார்கள் என்றால் ஆட்டுக்கோ மாட்டுக்கோ இழுத்துச் சென்றுவிடும். பிறகு அதாகத் தான் பிறக்க வேண்டும்.
தீ வைத்து தற்கொலை செய்பவர்கள் எரி பூச்சியாகத்தான் பிறப்பார்கள்
மனிதனாக இருந்து தீ வைத்து தற்கொலை செய்து கொண்டவர்களின் உணர்வுகளெல்லாம் அவர்கள் உடல் கருகிய உயிரான்மா வெளியே வந்து எரி பூச்சியாகத் தான் பிறக்கும்.
மந்திரங்களின் உண்மை நிலைகள்

கோவிலில் மந்திரங்கள் சொல்வதெல்லாம் அதர்வண வேதத்தில் மனிதனை நெருப்பில் போட்டுக் கொளுத்தி அதற்குண்டான நிலைகளைச் செய்து உணர்வுகளை எடுத்துக் கொள்கின்றார்கள்.