ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 7, 2014

நம்முடைய அலைவரிசை மகரிஷிகளின் அருள் உணர்வுகளாக இருக்க வேண்டும்

TV நிகழ்ச்சிகள் அதற்குண்டான அலைவரிசைப்படி காட்சிகள் தென்படுகின்றதோ, அதே போன்று நம் உடலில் ஒவ்வொரு குணங்களையும் பதிவாக்கி இருக்கின்றோம்.

என்னைத் திட்டினான் என்று எண்ணியவுடன் அந்த அலைவரிசை வந்தவுடன் கோபம் வரும். அந்தந்த உணர்ச்சிக்குத் தக்கவாறுதான் வேலை செய்ய ஆரம்பிக்கும்.

நாம் நுகர்ந்த உணர்வுகளை காந்தம் கவர்ந்து உயிரில் மோதும்போது வெப்பமாகி அந்த உணர்ச்சிகள் உடல் முழுவதற்கும் இயக்கச் செய்கின்றது.

சந்தோஷமான உணர்வை நுகர்ந்தோம் என்றால் நம் உடலை மகிழச் செய்கின்றது. இப்படி எத்தனை வகை குணங்களை நாம் நுகர்ந்தோமோ அத்தனையும் நம் இரத்தத்தில் உண்டு.

எந்தச் சுவையோ, அதற்குத்தக்கவாறு
உணர்ச்சிகள் எண்ணங்களாக வருவதும்
அந்த உணர்ச்சிக்கொப்ப அணுக்கள் மாறுவதும்
அந்த உணர்ச்சிக்கொப்ப செயல்கள் மாறுவதும்
அந்த உணர்ச்சிக்கொப்ப நம் எண்ணங்களும் மாறுகின்றது.

இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொண்டு, விண்ணிலிருந்து வரும் அந்த மகரிஷிகளின் அலைவரிசையைத் தொடர்பு கொள்ள வேண்டும். 

அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்தில் நாம் இணைந்து வாழ வேண்டும்.