ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 30, 2025

எமது உபதேசங்களைக் கூர்மையாகக் கேட்டுப் பதிவாக்கிக் கொள்ளுங்கள்

எமது உபதேசங்களைக் கூர்மையாகக் கேட்டுப் பதிவாக்கிக் கொள்ளுங்கள்


உங்களுடைய துன்பங்கள் நீங்க அந்த மகரிஷிகளின் அருள் ஒளி நீங்கள் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இப்பொழுது உபதேசித்துக் கொண்டிருக்கின்றேன்.
 
என்னை உங்களுடைய கண் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றது. பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது
1.சாமி சொன்ன நிலைகளை நாம் சரியாகக் கேட்க வேண்டும்
2.அதை அறிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன் கேட்டுக் கொண்டிருந்தால் தான் இது கூர்மையாகின்றது…”
3.இந்த உணர்வின் சக்தி உங்களுக்குள் ஜீவன் பெறுகின்றது.
 
ஏனென்றால்
1.துன்பத்தை நீக்கும் உணர்வுகளைப் பெற்றவர்கள் மகா ஞானிகள்.
2.துன்பங்களின் இயக்கத்தின் தன்மையை அறிந்துணர்ந்தவர்கள் அந்த மகா ஞானிகள்.
 
அந்தத் துன்பத்தின் விஷத்தின் தன்மை நீக்கி தன் உணர்வினை ஒளியாக மாற்றி இந்த உடலையே ஒளிச் சரீரமாக மாற்றி இன்றும் விண்ணுலகில் துருவ நட்சத்திரமாகவும் சப்தரிஷி மண்டலங்களாகவும் இருக்கின்றார்கள்.
 
அவருடைய வாழ்க்கையில் வந்த இன்னல்களை எப்படி நீக்கினார்கள்…? அவர்கள் வாழ்க்கையில் இன்னல்கள் எப்படி வந்து சேர்ந்தது…? என்பதை அறிந்தார்கள்.
 
அவ்வாறு அறிந்த உண்மையைத்தான் அவர்கள் வெளிப்படுத்தினார்கள். அந்த உண்மையின் சக்தியைத் தான் யாம் இப்பொழுது உங்களுக்குச் சொல்வது.
 
நன்மையின் தன்மை கொண்டு நாம் காரியங்களை எண்ணிச் செய்தாலும் நாம் தவறு செய்யாமலேயே பிறருடைய துன்ப உணர்வுகள் நமக்குள் எப்படி வந்து சேருகிறது…? என்ற நிலையை அந்த ஞானிகள் சொன்ன வழிப்படி உங்களுக்குள் சொல்லும் பொழுது இது பதிவாகின்றது.
 
பாலுக்குள் காரம் பட்டபின் அந்தக் காரத்தின் உணர்ச்சியின் நிலைகளை நாம் உணர முடிகின்றது. ஆனால் அந்தச் சுவையை உணர முடியாத நிலை ஆகிவிட்டால் அதை நாம் எண்ணிக் கூடப் பார்க்க முடியாது…”
 
ஒரு விஷத்தின் தன்மையைக் குடிக்கப்படும் பொழுது அதனால் சிந்திக்கும் செயல் இழந்து விடுகின்றோம் அறிய முடிவதில்லை. செயலற்ற நிலை ஆகிவிடுகின்றோம். அது போல்
1.நாம் தவறு செய்யாமலேயே குறைகள் எனக்குள் வருகின்றதா…?” என்ற மனம்
2.அது எண்ணமாக உங்களுக்குள் தூண்டச் செய்யும் நிலையே சந்தர்ப்பங்களில் மறைந்து விடுகிறது.
 
ஆனால் அந்த மகா ஞானிகள் அதிலிருந்தெல்லாம் விடுபட்டுப் பழகியவர்கள்.
1.சக்திவாய்ந்த ஆற்றலைத் தனக்குள் கூட்டி தீமையைக் குறைத்து அந்த உணர்வின் ஆற்றலால்
2.உயிர் எப்படி ஒவ்வொரு குணத்தையும் அது உணரச் செய்துஅறியச் செய்து அந்த இயக்கத்தை இயக்கச் செய்வது போல
3.கெட்டதை நீக்கி நல் உணர்வின் தன்மையை உயிருடன் ஒன்றச் செய்து
4.ஒளியாக மாறும் உணர்வினைத் தனக்குள் வளர்த்து அழியா ஒளிச் சரீரம் பெற்றவர்கள்.
 
அவர்கள் வெளிப்படுத்திய சொல்களை அவர்களை எண்ணும் பொழுது அந்த மணம் எனக்குள் உணர்வின் செயலாக சொல்லாக அது இயங்குகின்றது. அந்த மணத்தின் தன்மை உடலுக்குள் கிரியை ஆகி என்னை இயக்குகின்றது.
 
சிவகாமி…! அந்த ஞானியின் அருள் சக்திகளைப் பெற வேண்டும் என்று கவர்ந்த சக்தி உடலுக்குள் சென்று சிவம் தான் கவர்ந்து கொண்ட சக்தி எனக்குள் கிரியையாகி அதனின் சொல்லாக (உபதேசமாக) வருகின்றது…”
 
1.இதையெல்லாம் நீங்கள் கூர்மையாகக் கவனிக்கும் பொழுது இந்த உணர்வின் சக்தி உங்களுக்குள் பதிவாகும்.
2.பதிவானதை மீண்டும் எண்ணத்தால் எப்படி எடுக்க வேண்டும்…? என்று நினைவூட்டும் சக்தியாகவும் இது செயல்படும்.
3.அதற்குத்தான் வேறு நினைவுகள் இல்லாதபடி உங்களைக் கூர்ந்து கவனித்து இதைப் பதிவாக்கும்படி சொல்வது.

September 29, 2025

சுழி முனை - எண்ணம் தோன்றும் இடம்

சுழி முனை - எண்ணம் தோன்றும் இடம்


ஒரு மத்தின் தன்மை அணுவிற்குள் சேர்க்கப்படும் பொழுது சீதா என்ற சுவையானாலும் ந்த உணர்வின் தன்மை அது எண்ணமாக எப்படி இயங்குகின்றது…? என்ற நிலையை நாம் கண்டுணர்வதற்கு அந்த ஞானிகள் சுழிமுனை என்று காட்டினார்கள்.
 
1.இந்த உயிர் தனக்குள் அதை (சீதா) எடுத்து
2.இந்த உணர்வின் தன்மையைத் தான் பிரித்து
3.அந்தச் சத்தின் உமிழ் நீராக உடலுக்குள் இணைத்து விட்டு உணர்வின் அலைகளை அதற்குள் இயக்கச் செய்கிறது.
 
இது தான் சுழிமுனை என்று சொல்வது. எதை நாம் எண்ணுகின்றோமோ சுழி முனை அதை இயக்கும். தியானம் செய்கின்றோம் என்கிற போது சுழி முனை வழியாக உணர்வுகளை எடுக்கப்படும் பொழுது எண்ணங்கள் என்ன செய்கின்றது…?
 
எவ்வளவு தான் நல்லதை எண்ணினாலும் முடிவதில்லை. ஏன்…?
 
மற்றவர்களின் வெறுப்பான உணர்வுகளை உடலுக்குள் இருந்தால் இந்த உணர்வுகள் ஆங்கே பாயும்.
 
உங்களை யாராவது திட்டி இருந்தார்கள் என்றால் அல்லது ஒரு பையனை வேலைக்குச் சொல்லி இருந்தோம் நேரத்திலே அந்த வேலையை அவன் செய்து முடிக்கவில்லை என்றால் அந்த உணர்வு அழுத்தமா ஓங்கி ந்து விடும்.
 
1.அந்த அலைகள் எல்லாம் முன்னாடி இருக்கும் அப்பொழுது
2.சுழி முனையை நீங்கள் நினைத்துக் கட்டாயப்படுத்தி எண்ணினால் என்ன ஆகும்…?
3.ஒருநிலைப்படுத்த முடிவதில்லை…!
 
சுழி முனையில் நிலை நிறுத்துவதற்காக என்ன செய்கின்றார்கள்…? பிராணயாமம் வாசியோகம்…” என்று மூச்சை இப்படி இழுத்து இப்படி விட்டீர்கள் என்றால் சுழி முனையில் நிறுத்தலாம் என்கிறார்கள்.
 
அடுத்தாற்போல்… தொட்டுக் காண்பித்தல் என்றும் சொல்வார்கள் ஒருவருடைய எண்ணத்தை மூலாதாரத்தைத் தட்டி எழுப்புகிறோம் என்று முதுகுத் தண்டிலே தட்டி எழுப்பி அவருடைய எண்ணத்தைச் செலுத்தப்படும் பொழுது அந்த உடலிலிருந்து வரும் உணர்வுகளை நாம் சுவாசித்து ஏதோ குறுகுறு என்று ஏறுகின்றது. ஏதோ சக்தி கொடுக்கின்றார் என்ற நினைவு வரும்.
 
யாராக இருந்தாலும் தொட்டுக் கொடுத்துவிட்டு மூலாதாரத்தை நான் தட்டி எழுப்புகின்றேன் நுகர்ந்து பாருங்கள் என்று சொன்னால் அந்த எண்ணத்திற்கு வரும் பொழுது அவருடைய எண்ணங்களை நுகரப்படும் பொழுது அவர் சொன்ன வழியிலேயே அது இயக்கும்.
 
1.மூலம் என்பது நமது உயிர்
2.ஆதாரம் என்பது நமது ஆன்மா.
3.அதனால்தான் ஆதிமூலம் என்று விநாயகருக்குப் பெயர் வைக்கிறார்கள்.
 
ஆரம்பத்தில் புழுவாக உடல் பெறும் பொழுது ஒரு செடியின் சத்தைத் தான் முதலில் அது எடுத்தது.
 
அதாவது… சூரியனிலிருந்து வெளிவந்த வெப்ப காந்தம் ந்தச் செடியின் சத்தைக் கவர்ந்து. சூரியனிலிருந்து வந்த வெப்ப காந்தம் இந்தச் செடியின் சத்தினைக் கவர்ந்து சீதா லட்சுமி ஆக மாறி அது அந்தப் புழுவிற்குள் வரும் போது சீதாராமனாக மாறுகின்றது.
 
1.புழுவாக உடல் பெற்ற நிலையில் தாவர இனச் சத்தை நுகர்ந்தால் சீதாராமனாக மாறுகின்றது எண்ணங்கள் தோன்றுகின்றது
2.அந்தச் சுவையின் சத்தாக அதிலிருந்து வெளிப்படும் மம் எண்ணமாக
3.அந்த எண்ணம் உணர்ச்சிகளைத் தூண்டி அம்புகளாகப் பாய்ந்து இயக்கச் சக்தியாக மாறுகிறது சீதாராமா…!
 
ஆகவே ராமஜென்ம பூமி எங்கே உருவாகின்றது…? ஒருவர் என்னைத் திட்டுகின்றார் என்கிற பொழுது அந்த உணர்வைச் சுவாசிக்கின்றேன். அதைச் சுவாசித்தால் சுவை சீதா.
 
அந்த உணர்வின் தன்மை எனக்குள் வந்து அந்த உணர்வான சத்தை உடலுடன் சக்தியாகச் சேர்ந்து கொள்கின்றது. அதிலிருந்து சொல்லாக வரும் பொழுது சீதாராமன் ஆகின்றது.
 
அந்தச் சொல்லின் நிலைகள் ராமன் அம்பை எய்கின்றான்.
1.ராமன் எங்கே பிறக்கின்றான்…? ராமஜென்ம பூமி எது?
2.நம் உடல் தான்.
 
சீதா லட்சுமி ஆக வந்து உடலுக்குள் வரும் பொழுது சீதா ராமனாகப் பிறக்கின்றான் ராமா சீதா என்று சொல்கின்றார்களா…? சீதாராமா என்று சொல்கின்றார்களா…?
 
சீதாராமா என்று வரிசைப்படுத்தித் தானே சொல்கின்றார்கள்.
 
நாம் அணுவின் தன்மையாக உருப்பெற்றதிலிருந்து ஒவ்வொரு சரீரத்தையும் பெற்று வளர்ச்சியில் மனிதனாக எப்படி வந்தோம்…? என்பதை உணர்த்துவதற்குத் தான் இந்த இயற்கையின் சக்தியைக் கண்டுணர்ந்த ஞானிகள் விநாயகரை ஆதிமூலம் என்று காண்பிக்கின்றார்கள்.
 
1.முன் சேர்த்துக் கொண்ட வினைகளுக்கு நாயகனாக இன்று மனிதனாகப் பிறந்திருக்கின்றோம் என்று
2.யானைத் தலையை மனித உடலில் இணைத்து விநாயகா என்று மனித உடலைக் காட்டுகின்றார்கள்.

September 28, 2025

மனிதனின் சுவாச நிலை

மனிதனின் சுவாச நிலை


உடலுக்கு நம் கண் ஆண்டென்னாவாக இருக்கிறது. எப்படி…?
 
ஒருவர் ஒன்றைச் சொல்லும் பொழுது நாம் அவரை உற்று நோக்குகிறோம்அவரைப் படமாக்குகின்றோம்பதிவாக்குகின்றோம்.
 
அதே சமயம் அவர் உடலில் இருந்து வெளிப்படும் உணர்வலைகளைச் சூரியனின் காந்த சக்திகள் கவர்ந்து வைத்திருக்கின்றது. சுவாசித்த பின் அந்த உணர்வுகள் நமக்குள் பதிவாகிறது.
 
அது எங்கே…? எப்படிப் பதிவாகின்றது…?
 
1.உடலில் இருப்பது காந்தம் எலும்பு
2.நாம் எண்ணிய சத்துக்கள் அனைத்தும் நம் உடலில் வடித்து எதையும் கிரகிக்கக் கூடிய சக்தியாக
3.”ஊழ்வினை” - நம் எலும்புக்குள் ஊனாக இருக்கிறதுஉடல் அனைத்திலுமே இந்த ஊன் இருக்கும்.
 
காந்தம்உடலில் இப்படி இருக்கும் போது எதையாவது நாம் உற்றுப் பார்க்கிறோம் என்றால்அந்த உணர்வை எடுத்து ரெக்கார்ட் செய்து விடுகின்றது….!”
1.மற்றவர்கள் சொல்வது போன்று மூளையில் பதிவாக்குவதில்லை
2.உடலில் தான் பதிவாக்குகின்றது…!
 
ஒரு மைக்கை வைத்து நாம் பேசுகிறோம் என்றால் ஒரு டேப் (TAPE) அதைப் பதிவாக்குகிறது. அந்த நாடாவிலே தான் அது பதிவாகின்றது.
 
மைக்கில் பேசுகிறோம்இருந்தாலும் அதற்கு முன்னாடி ட்ரான்சாக்ஷன் செய்யக்கூடிய வயர் வழியாகப் பிரித்து (AMPLIFIER)… ஒலி பெருக்கிக்குக் கொண்டு செல்கின்றது. அப்பொழுது பேச்சை நாம் கேட்க முடிகின்றது.
 
உதாரணமாக நீங்கள் என்னைத் திட்டுகின்றீர்கள் என்று வைத்துக் கொண்டால்… “உடனேநான் உங்களைக் கூர்ந்து கவனிக்கின்றேன்.
 
அப்பொழுது உங்கள் உடலில் இருந்து எது வெளிப்படுகிறதோ… வெளிப்படும் அந்த எண்ணங்களை சூரியனுடைய காந்த சக்தி கவர்கின்றது. என் கண்ணுக்குள் இருக்கும் கருவிழி ருக்மணிஉங்களுடைய உருவத்தை எனக்குள் படமாக்குகின்றது.
 
உங்கள் உடலிலிருந்து வெளிப்பட்ட எண்ண அலைகளைச் சூரியனின் காந்த அலைகள் கவர்ந்து கொள்கின்றது. அப்பொழுது அவரைப் பார்க்கப்படும் பொழுது எதைக் கண் படம் எடுத்ததோ அதை இழுக்கப்படும் போது சத்தியபாமா…! என்னைத் திட்டுகின்றீர்கள் என்ற உண்மையை உணர்த்துகிறது.
 
இப்படிப் படம் எடுக்கப்படும் பொழுது உடலில் இருக்கக்கூடிய செல்கள் அதைப் பதிவாக்குகின்றது. அதாவது ஒரு நாடாவிலே பதிவாக்குவது போல்
1.ஊழ்வினை என்று உடலில் உள்ள எலும்புக்குள் பதிவாக்கி (டேப்பில் பதிவு செய்வது போல்) விடுகிறது.
2.இப்படி ஆயிரக்கணக்கானவரை நாம் பார்த்துப் பதிவாக்குகின்றோம்.
 
இதிலே கவனங்கள் எப்படி இருக்கிறதோ… ஒருவர் திட்டுகிறார் என்றால் கூர்மையாக அதை உற்று நோக்கிய பின் இரு நான் பார்க்கிறேன்…!” என்றால் அதை மறக்க முடியாது.
 
ஆனால் சாதாரணமாக சந்தர்ப்பத்திலே பேசிக் கொண்டிருக்கும் பொழுது நாளைக்கு இந்த இடத்திற்கு வாருங்கள்இன்னதைத் தருகிறேன்…” என்று சொன்னால்
1.அது நமக்குத் தேவைப்பட்ட முக்கியமான பொருளாக இருந்தால்
2.”அவரிடம் போய் வாங்க வேண்டும்என்ற எண்ணம் இருக்கும்.
 
அப்படி இல்லாது இருந்தால்நாளைக்குப் பார்க்கலாம் வாருங்கள் என்று சொன்னாலும் அது நமக்குள் சரியாகப் பதிவாகாதுநினைவும் சரியாக வராது. இரண்டு நாட்கள் கழித்து “என்னங்க…? நான் வரச் சொன்னேன்வரவில்லையே…” என்று அவர்கள் கேட்பார்கள்.
 
ஆனால் இந்தப் பக்கம் வந்தால் உன்னை உதைத்து விடுவேன்…! என்று சொன்னால்
1.அது சுருக்…” என்று பட்டு விடுகின்றதுஆழமாகப் பதிவாகி விடுகிறது
2.இப்படிப் பதிவான பிற்பாடு அவரை நினைத்தவுடனேயே அந்த ஆத்திரமும் வெறுப்பும் வருகிறது
 
இந்த இடத்திற்கு வா பார்க்கலாம்என்று சொன்ன பிற்பாடு
1.அங்கே போன பின் உணர்ச்சி வேகம் குப்..குப்.. என்று வரும்.
2.ஆனால் போக்கிரியாக இருக்கிறான் என்றால் நம் மனது பட..பட..பட.. என்று அடிக்கும்.
 
போக்கிரி இல்லாதபடி நம்மைப் போன்று சமமானவர்களாக இருந்தால் அவர் பேசிய பேச்சுக்கு (அவரின் உணர்வு தாக்கியவுடன்) நம்முடைய வலு கொண்டு “அவன் என்ன செய்வான்…? பார்க்கலாம்…!” என்ற நினைவு தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும்மீண்டும் மீண்டும் வந்து கொண்டே இருக்கும்.
 
1.அவர்களை எண்ணும் பொழுது அந்த எண்ணம் நினைத்த உடனே அதைக் குவிக்கும்
2.டிவி.க்களிலே படம் எப்படித் தெரிகின்றதோ அதே மாதிரி அந்த நினைவலைகளை இழுத்து உருவமாகக் காட்டும்உடனே அது தெரியும்
3.பரவலாக இருக்கக்கூடிய அலைகளை இழுத்துக் கண்ணுக்கு முன்னாடி புலனறிவுக்குள் அதைக் காட்டிக் கொண்டே இருக்கும்...
 
அதே உணர்வின் செயல் உயிருக்குள் பட்டு அதனுடன் தொடர் கொண்ட சிறு மூளைக்குள் சென்றவுடன்
1.ட்ரான்சாக்ஷன் ஆகிஎந்த உணர்வோநமக்குள் பதிவானது அந்த செல்களில் எடுத்துஅது இயங்க ஆரம்பிக்கும்.
2.அதே அலைகளை எடுத்து எடுத்துநாம் பேசும் பொழுது தொடர்ச்சியாக வேலை செய்ய ஆரம்பிக்கும்.
 
நாம் எடுக்கக்கூடிய வார்த்தை நம் சிறுமூளை உயிரிலே பட்டு…
1.அந்தச் சுவாசத்தின் வழி எடுக்கக்கூடிய காற்றைகாந்தத்தைப் பிரித்துஉணர்வின் சத்தைப் பிரித்து
2.அந்த அலைகளை ட்ரான்சாக்சன் செய்து சிறுமூளை உடலுக்குள் உணர்வுகளைச் செயல்படுத்துகின்றது.
 
ஆனால் அதே சமயத்தில் நாம் எண்ணிய உணர்வுகளை உமிழ் நீராக மாற்றி விடுகின்றதுசாப்பிட்ட ஆகாரத்துடன் அது கலந்து விடுகிறது.
1.நம் கண்ணுக்கு நாம் எண்ணுவது தெரிவதில்லை…!”
2.நினைவுகள் எடுக்கும் பொழுது அது உமிழ் நீராக அது மாறுகின்றது.
 
எப்படி…?
 
வெயில் காலத்தில் மாங்காயையும் உப்பையும் தொட்டுச் சிலர் விரும்பிச் சாப்பிடுவார்கள். அந்தப் புளிப்பு அவர்களுக்கு மிகவும் ரசிப்பாக இருக்கின்றது. மாங்காய் புளிப்பு தான்ஆனாலும் அதை ரசிக்கின்றார்கள்.
 
அதைப் பற்றி நான் சொன்னாலும்மாங்காயையே இப்பொழுது நீங்கள் பார்க்கவில்லைஆனால் உமிழ் நீர் உங்களுக்குள் எப்படிச் சுரக்கின்றது…?
 
மாங்காய் என்று சொன்னவுடனே கப..கப.. என்று உமிழ் நீர் ஊறுகிறது அல்லவா…! அந்தப் புளிப்பின் நிலைகள் கொண்டு உங்களுக்குள் உணர்ச்சிகளைத் தூண்டுகின்றதுநினைவலைகளைத் தூண்டுகின்றது.
 
மாங்காயைப் பார்க்கவில்லை ஆனால் அந்தச் சுவையின் தன்மை கொண்டு உமிழ் நீரைக் குவிக்கின்றது.
 
இதற்கு முன்னாடி உமிழ் நீர் ஊறவில்லை..! ஆனால் சொன்னவுடனே எப்படி உமிழ் நீர் ஊறுகின்றதோ இதே மாதிரித் தான் எரிச்சலாக ஒருவர் பேசுகிறார் என்றால் அதைப் பார்த்து நுகர்ந்ததும் அதே எரிச்சலான உணர்வு நமக்குள் வருகிறது. சொல்கிறது அர்த்தமாகிறதல்லவா…!
 
எரிச்சலான உணர்வு கொண்டு பேசுகிறார்நாம் உற்றுப் பார்க்கின்றோம் அந்த எரிச்சலான உணர்வு நமக்குள் வருகின்றது
1.”சுழி முனைஎன்பதற்கு விளக்கம் சொல்கின்றேன்
2.சுவாசித்த உடனே அதை ட்ரான்சாக்ஷன் செய்கின்றது
3.கண்ணினுடைய நினைவுகள் வரப்படும் பொழுது மேக்னெட்அந்த சுவிட்சைக் கிளைத்து விடுகின்றது…”
4.நம் உடல் மொத்தமாக அதை இழுக்க ஆரம்பிக்கும்
5.எந்த குணத்தி(ன்)ல் சுவிட்சைப் போடுகின்றமோ அதை இழுக்கின்றது
 
ரேடியோ டிவி பெட்டிக்குள் பல ஸ்டேஷன்களைப் பதிவு செய்து வைத்திருக்கின்றனர். எந்த ஸ்டேஷனைஎந்த அலைவரிசயைத் திருப்பி வைக்கின்றோமோ அந்த அலையைக் காற்றிலிருந்து பிரித்து இங்கே எடுத்துக் கொண்டு வருகிறது.
 
இதே மாதிரி நம் உடலில் ஆயிரக்கணக்கான அலைவரிசை உண்டு. எந்த அலைவரிசையை இழுத்துப் பேசுகிறோமோஅந்த அலைவரிசை தன்னாலே பேசும்…”
 
எண்ணும்போது அந்த அலைகளை எடுத்து நம்மால் உணர முடிகின்றதுநுகர முடிகின்றதுசெயல்படுத்த முடிகின்றது.
1.அந்த உணர்வின் அலைகளைச் சுழி முனை சுழற்றி
2.சிறு மூளை ட்ரான்சாக்ஷன் செய்து பிரித்து அந்த உணர்ச்சிகளை உடல் முழுவதும் சுற்ற வைக்கின்றது.
 
அப்போது அதே உணர்வு தான் நமக்குள் வேலை செய்யும்…!
 
ஆகவே… நாம் எண்ணக் கூடியதை எல்லாம் எலும்பிற்குள் அந்த மேக்னெட்டில் பதிவு செய்து விடுகின்றது. மீண்டும் நினைத்தவுடன்
1.அந்த எண்ணங்கள் வீரியமடைந்து கண்ணின் நினைவுகளுக்கு வருகின்றது
2.காற்றில் இருப்பதை இழுக்கிறது இழுத்தவுடனே சுவாசத்திற்குள் கொண்டு வருகின்றது
3.சுவாசிக்கும் பொழுது எதை எதை நாம் பதிவு செய்திருக்கின்றோமா
4.நம் உடலில் இருக்கக்கூடிய செல்கள் மொத்தமாக இழுத்துப் பிரித்து ஆத்மாவாகக் கொண்டு வருகின்றது.
5.அதைத்தான் நாம் சுவாசிக்கின்றோம் அதுதான் நம்மை ஒவ்வொரு நொடியிலும் இயக்குகின்றது.

September 27, 2025

ஆதியிலே அகஸ்திய மாமகரிஷியாகத் தோன்றியது எமது குருநாதர் தான்…!

ஆதியிலே அகஸ்திய மாமகரிஷியாகத் தோன்றியது எமது குருநாதர் தான்…!


மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர் எனக்கு உபதேசித்ததை உங்களுக்கும் உபதேசிக்கின்றேன்.
1.மாமகரிஷி ஈஸ்வரபட்டா எமது குருநாதர் - ஆதியிலே அகஸ்திய மாரிஷியாகத் தோன்றிய அவர்…”
2.தனக்குள் கற்றுணர்ந்த நிலைகள் கொண்டு விண்ணுலக ஆற்றலை
3.துருவப் பகுதியின் ஆற்றலை நுகர்ந்து உணர்வுகளை ஒளியாக மாற்றி விண்ணுலகம் சென்றார்
 
அவர் எவ்வாறெல்லாம் சக்தி பெற்றார்…? என்ற நிலையை எனக்கு உபதேசித்தார் உபதேசித்தது மட்டுமல்ல…!
1.அந்த அகஸ்திய மாமகரிஷி கடந்த காலங்களில் எங்கே தோன்றினார்…?
2.ஆற்றல் மிக்க சக்திகளை அவர் எவ்வாறு பெற்றார்…? என்பதை எல்லாம்
3.அகஸ்தியர் சுழன்ற அந்தந்த இடங்களுக்குக் குருநாதர் என்னை அழைத்துச் சென்று காட்டினார்.
 
இன்று நாம் கதைகளில் படிக்கக்கூடிய அகஸ்தியர் அல்ல அன்று பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் தோன்றியவர் அவர்.
 
ஒன்றுமறியாத காட்டுவாசியாக இருந்தாலும் அவர் எவ்வாறு சக்திகள் பெற்றார்…? என்பதை
1.அவர் சக்தி பெற்ற ஒவ்வொரு இடத்திற்கும் என்னை அழைத்துச் சென்று நேரடியாகக் காட்டி
2.அந்த உண்மைகளை எல்லாம் அறியும்படி செய்தார்.
 
அன்று அகஸ்தியர் பெற்ற அத்தகைய சக்திகளை உங்களுக்குள் பெறச் செய்வதற்குத் தான் இதைத் தெளிவாக்கிக் கொண்டு வருகின்றேன்.
1.27 நட்சத்திரங்களின் சக்திகளையும் நவக் கோள்களின் சக்திகளையும்
2.சப்தரிஷி மண்டலங்களின் ஆற்றல்களையும் சப்தரிஷிகளின் அருள் சக்திகளையும் உங்களைப் பெறும்படி செய்கின்றேன்.
3.இதை அலட்சியமாக எண்ண வேண்டாம்.
 
27 நட்சத்திரம் என்பது இந்தப் பிரபஞ்சத்திற்குள் “27 விதமான உணர்ச்சிகளைத் தூண்டும்நிலைகள் பெற்றது. பேரண்டத்தில் இருந்து வரும் மற்ற சத்துக்களை இந்த 27 நட்சத்திரங்களும் ஊடுருவிஅதனுடைய செயலாக்கத்தைத் தணியச் செய்துநம் பிரபஞ்சத்திற்கு ஒத்ததாக மாற்றி அனுப்புகின்றது.
 
எந்தெந்த நட்சத்திரம் அந்தச் சக்திகளை வீழ்த்தி அந்த அலைகளைப் பரப்புகின்றதோஅதற்கடுத்து இருக்கக்கூடிய கோள்கள் அதைக் கவர்ந்து தன் உணர்வின் சத்தாக அதை வளர்த்துக் கொள்கின்றது.
 
அதனின்று உமிழ்த்தி வெளி வரும் உணர்வின் சத்தைச் சூரியன் தனக்குள் கவர்ந்து அதில் கலந்துள்ள நஞ்சைப் பிரித்துவிட்டு வெப்ப காந்த அலைகளாகஉலகைச் திருஷ்டிக்கும் நிலையாக மாற்றுகின்றது.
 
அதனின்று இந்தப் பிரபஞ்சத்திற்குள் பூமி தோன்றி
1.பூமிக்குள் கல் மண் உருவானாலும் அதிலே தாவர இனங்கள் உருவாகி
2.அந்த உணர்வின் சத்தை உயிரணுக்கள் பருகி உடல்கள் பெற்றுப் பரிணாம வளர்ச்சியில் மனிதனாகி
3.சூரியனைப் போன்று மனிதனும் தன் உணர்வின் தன்மை கொண்டு
4.எண்ணங்களால் (முகப்பில் உள்ளது) கெட்டதைத் தனக்குள் வராது தடுக்கும் ஆற்றல் பெறுகின்றான்.
 
தன் எண்ணத்தின் முகப்பு என்றால்உதாரணமாக கோபம் என்றால் அந்தக் கோபத்தை வைத்துச் சமப்படுத்தும் நிலையாக உடலுக்குள் அணுமதிக்கின்றது.
 
அதே போன்று இந்த எண்ணங்கள் என்பது நட்சத்திரங்கள். நாம் எந்தெந்த எண்ணங்களை எண்ணுகின்றோமோ அந்த எண்ணத்தின் உணர்வுகள் உயிருடன் படும்பொழுது அது ஜீவன் பெற்றுத் தசைகளாக (கோள்கள்) மாறுகின்றது.
 
எண்ணத்தின் உணர்வலைகள் தசைகளுக்குள் விளைந்துஅதிலே விளைந்தது உயிருடன் சேர்க்கப்படும் பொழுது உடலுக்குள் உயிர் சூரியனாகின்றது.
 
எடுத்துக் கொண்ட உணர்வின் சக்தி அதற்குள் விளைந்து மாற்று உடலை அமைக்கும் திறன் அது பெறுகின்றது. இவ்வாறு மனித நிலைகள் பெற்று வந்தாலும்
1.மனித உடலுக்குப் பின் மாற்று உடல் பெறாதுஉணர்வின் தன்மை ஒளியாக மாற்றியவர்கள்
2.சப்தரிஷி மண்டலங்களாக இன்றும் வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.
 
அந்தச் சப்தரிஷி மண்டலங்களிலிருந்து வரக்கூடியதை எண்ணத்தால் இயக்கி… ஆற்றல்மிக்க அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைக் கவர்ந்து… 27 நட்சத்திரங்களுடைய சக்திகளையும் கோள்களின் சக்தியையும் இணைத்து சூரியனின் காந்த சக்தியாக இருக்கும் நெருப்புக்குள் இணைக்கச் செய்வதே தியானத்தின் முக்கியப் பொருள்.
 
என்ன…? பெரியதாக 27 நட்சத்திரங்கள் சக்தியைப் பெறச் சொல்கிறார்…? என்று எண்ண வேண்டியதில்லை. ஏனென்றால் 27 நட்சத்திரங்களுடைய சக்தியைப் பருகும் சக்தியைக் குருநாதர் எனக்குக் கொடுத்ததால்
1.எந்த வழியில் அதனைக் கவர வேண்டும்…?
2.அந்த நினைவலைகளை எப்படி எடுக்க வேண்டும்…?
3.சப்தரிஷி மண்டலத்தின் சக்திகளை அதிலே எந்த அளவுகோல் கொண்டு கலக்க வேண்டும்…?
4.மற்ற கோள்களின் சக்திகளை எந்த அளவிற்கு நினைவு கொண்டு வர வேண்டும்…? என்ற எண்ணத்தைப் பரப்பி
5.அந்த உணர்வின் நினைவலைகளை ஓர் எண்ண வலுவாகக் கூட்டச் செய்து
6.அதனை உங்கள் உணர்வுக்குள் பாய்ச்சச் செய்து அந்தச் சக்தியை நீங்கள் பருக வேண்டும் என்றும்
7.பிரபஞ்சத்தில் விளைந்ததை ஒளியாக மாற்றிய அருள் ஞானிகளின் உணர்வுகளை இதற்குள் கலந்து
8.ஞானிகள் மனித வாழ்க்கையில் வந்த இருளை நீக்கிப் பெற்ற ஆற்றலையும்
9.ஒளிச் சரீரமாக மாறி விண் சென்ற அந்த உணர்வுகளையும் உங்களுக்குள் இணைக்கச் செய்கின்றோம்.
 
குருநாதர் உபதேசித்த அந்த அருள் வழிப்படி…
1.எதனை எதனின் அளவுகோல் எடுத்துக் கொள்ள வேண்டும்…?
2.எதை உபதேசிக்க வேண்டும்…? எப்படி உபதேசிக்க வேண்டும்…? என்று
3.அவர் சொன்ன வழி முறைப்படி உங்களுக்கு உபதேசித்து வருகின்றேன்.
4.உங்களை அறியாது வரும் தீமைகளை மாற்றவல்ல சக்தியாகக் கொடுத்துக் கொண்டு வருகின்றேன்.
 
எப்படிப் பிறர் செய்யும் தீங்கான உணர்வுகள் தீய வினைகளாகி உடலில் நோயாக வருகின்றதோ இதைப் போல் “அந்த நோயை மாற்றவல்ல” அந்த அருள் ஞானிகளின் உணர்வுகளை “உங்களை அறியாமலே அந்த நல்வினைகளை ஓங்கச் செய்கின்றேன்…”
 
அதை நினைவு கொண்டு நீங்கள் எடுக்கும் போது இருள் நீக்கிப் பொருள் காணும் உணர்வாக உங்களுக்குள் விளைந்து… பொருள் கண்டுணர்ந்த அந்த அருள் ஞானிகளின் அருள் வட்டத்திற்குள் நீங்கள் சென்று… பெருவீடு பெரு நிலை என்ற நிலையாக “ஒளிச் சரீரம் நீங்கள் பெற வேண்டும்” என்ற இச்சையில் தான் இதை உபதேசிக்கின்றேன்.
 
கீதையிலே சொல்வது போன்று நீ எதை நினைக்கின்றாயோ அதுவாகின்றாய்…! நீங்கள் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் உங்களை அறியாத இருள்கள் நீங்க வேண்டும் மெய்ப்பொருள் காணும் திறன் உங்களுக்குள் பெருக வேண்டும் என்ற இந்த உணவின் நோக்கம் கொண்டு தான் இதை வெளிப்படுத்துகின்றேன்.
 
இதைக் கேட்டுணர்ந்த நீங்களும் இதையே பின்பற்றினால் அதன் வழி கொண்டு
1.பிறர் வாழ வேண்டும் என்று நீங்கள் எண்ணும் பொழுது
2.அந்த வாழ வேண்டும் என்ற உணர்வு உங்களுக்குள் வாழும் சக்தியாக வளர்ந்து
3.உங்களுக்குள் இருக்கும் தீமையை விளைவிக்கும் சக்திகள் அது ஒடுங்கி
4.மெய் உணர்வைக் காணும் சக்தியாக உங்கள் பேச்சு மூச்சும் வெளிப்பட்டு
6.விஞ்ஞான உலகால் ஏற்படுத்தப்பட்ட நஞ்சினை வென்று
6.இந்தப் பூமியிலிருந்து நஞ்சினை அகற்றிடும் ஆற்றலாக நீங்கள் ஒவ்வொருவரும் பெற வேண்டும்.
 
அத்தகைய ஆற்றலை இந்தப் பூமிக்குள் ருப் பெற்ற ஒவ்வொரு மனிதனும் பெற வேண்டும். அத்தகைய மூச்சலைகளாக உங்கள் மூச்சு வெளிப்பட வேண்டும்.
 
அந்த நிலை பெற வேண்டும் என்றால் அந்த அருள் ஞானிகள் உணர்வைப் பெற்றால் ஒழிய இனி வரக்கூடிய தீமையான விளைவுகள் இருந்து தப்பிப்பது மிகவும் கடினம்.
 
ஆகவே இனி வரும் நிலையில்
1.இந்த உலகிற்கு அருள் வழி காட்டக்கூடிய அரும் பெரும் சக்திகளாக
2.நீங்கள் ஒவ்வொருவரும் வளர வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.

September 26, 2025

கண்ணுக்குத் தெரியாதபடி… “அந்தக் கண்ணின் நினைவு இல்லாதபடி” யாரும் எதையும் செயல்படுத்த முடியாது

கண்ணுக்குத் தெரியாதபடி… “அந்தக் கண்ணின் நினைவு இல்லாதபடி” யாரும் எதையும் செயல்படுத்த முடியாது


உதாரணமாக சோர்வான எண்ணத்தை நாம் எடுக்கிறோம் என்றால் இந்த உணர்வின் தன்மை கண்ணுக்குள் பாய்ச்சப்படும் பொழுது… “ஹூம் என் உடலுக்கே முடியவில்லை…” என்று வந்து விடுகிறது.
1.சோர்வை வலுவாந பின் உடலுக்கு முடியாது போய் விடுகின்றது.
2.மீண்டும் அதிகமான நிலைகளில் வேதனையை ஊட்டும்
 
அந்தச் சோர்வின் வலிமை வரும் பொழுது அது அர்ஜுனன். அந்த உணர்வினைக் கண்களுக்குக் கொண்டு வரப்படும் பொழுது
1.அங்கே அந்த வேலைக்குப் போமுடியாது…! சரி நீ இரு…! என்று
2.இந்த உணர்வினை உபதேசித்து அதாவது இந்த உடலுக்கு தக்கவாறு அந்த அர்ஜுனனுக்குக் கண்ணன் உபதேசிக்கின்றார்.
 
நாம் எடுத்துக் கொண்ட நினைவின் அலைகள் எதுவோ அதிலே எதிர் நிலைகள் தாக்கப்படும் பொழுது அந்த நிலை வந்து விடுகின்றது.
 
அதே சமயத்தில் மகிழ்ச்சியாக இருந்து ஒரு காரியத்தைச் செயல்படப் போகும் போது “ஒரு வேண்டாத எதிரி அங்கே வருவான்…” என்றால் அவர் உடலில் இருந்து வரக்கூடிய உணர்வு
1.மகிழ்ச்சியான உணர்வுடன் மோதப்படும் பொழுது ஆத்திரத்தைத் தூண்டுகின்றது.
2.என் வலுவான எண்ணங்கள் கொண்டு அயோக்கியன் போகின்றான் பார்…” என்ற எண்ணத்தை எனக்குள் உணர்த்தி உபதேசிக்கின்றது.
3.அவரிடம் போனால் ஏதாவது செய்துவிடுவான் அதனால் நீ இப்படித் தப்பிச் சென்று விடு…! என்று வழிகாட்டுகின்றது.
 
ஒருவன் பால் எதிரியாக இருக்கிறோம் என்றால் அவன் எடுத்துக் கொண்ட உணர்வின் அலையைப் பார்த்த பின் எதிரி போகின்றான் என்ற நிலையும் தனக்குள் வலுவான தன்னைக் காக்கும் எண்ணங்களைக் கண்கள் ஊடுருவி நீ இப்படிக் காத்துக் கொள்…” என்ற நிலையை இந்த ஞானத்தைப் போதித்து இந்த உணர்வின் தன்மை இயக்குகின்றான்.
 
இது தான் கீதா உபதேசம் என்று சொல்வது.
 
1.நமக்குள் எடுத்துக் கொண்ட ஒவ்வொரு உணர்வும் அர்ஜுனன்…! அவன் சகலகலா வல்லமை பெற்றவன்…! என்று
2.உடலுக்குள் இருக்கக்கூடிய ஒவ்வொன்றும் அதிலே எதை எண்ணுகின்றோமோ அதனதன் வல்லமையை அது காட்டும்.
 
அந்த வல்லமைக்குத் தக்கவாறு எண்ணிய நினைவில் இந்தக் கண்ணன் வழிகாட்டி அதனுடைய நிலைகள் எப்படிச் செயல்படுகிறது…? என்பதைக் கண்ணின் இயல்பான நிலையும் நம் உடலுக்குள் அது இயக்குவதையும் வியாசக பகவான் காட்டுகின்றார்.
 
நம் உடலின் உறுப்புகளில் கண்ணின் நிலைகள் புழுவிலிருந்து வரப்படும் பொழுது அந்த உணர்வின் எண்ணத்தை எடுத்து அதை வளர்த்து அந்த உணர்வின் தசையாக நமக்குள் உருவாகி அந்த மணத்தின் தன்மை கொண்டு நாம் எப்படிச் செயல்படுகின்றோம்…? என்ற நிலை தான் கீதா உபதேசத்தின் தெளிவான நிலைகள்.
 
கண்ணன் மகா ஞானி என்று சொல்கின்றோமே தவிர இந்தக் கண்ணன் யார்…? நமக்குள் சாரதியாக இருப்பது யார்…?
 
ரோட்டிலே சென்றாலும் நம் கண்கள் தான் சாரதியாக இருந்து வழி காட்டுகிறது.
1.இது மேடு இது பள்ளம்…!
2.இங்கே வேகமாக வண்டி வருகின்றது… அங்கே மாடு மிரண்டு வருகின்றது… ஆகவே இந்தப் பாதையில் நீ செல்
3.இங்கே உன்னுடைய எதிரி வருகின்றான் ங்கே உன் நண்பன் வருகின்றான் அவனிடம் நீ அணுகு
4.அவருடைய உதவி உனக்கு கிடைக்கும் என்றெல்லாம் சொல்வது யார்…?
5.நம்முடைய கண்ணான கண்கள் தான் ஒவ்வொரு நொடியிலும் அதை உபதேசிக்கின்றான்.
 
நமக்குள் இருக்கக்கூடிய குணம் கொண்டு கண்ணால் நாம் பார்க்கப்படும் பொழுது எதிரியின் வேகமான உணர்வுகளைக் கண் இழுத்தாலும் நமக்குள் இருக்கும் வலுவான எண்ணங்களுக்குள் அதைச் சமப்படுத்தும் பொழுது
1.அந்த உணர்வின் நினைவைத் தூண்டி வலுவான எண்ணங்களைக் கூட்டி
2.அதனுடன் இயக்கச் செய்யும் இந்த ஞானத்தை ஊட்டுகின்றது நமது கண் தான்.
 
அதைத்தான் கண்ணன் கீதா உபதேசம் செய்தான் என்று அவன் ஒரு பெரிய மண்டலத்தையே நமக்குள் அமைத்திருக்கின்றான். புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் பேரண்டத்தின் நிலைகள் இங்கே செயல்படுகின்றது என்று காட்டினார்கள்.
 
அதனால் தான் கண்ணன் சொல்கின்றான்…! என்னை அறியாது…” எச்செயலும் யாரும் செயல்படுத்த முடியாது என்று…!
 
நம் கண்ணுக்குத் தெரியாதபடி அந்தக் கண்ணின் நினைவு இல்லாதபடி யாரும் எதையும் செயல்படுத்த முடியாது.
1.எதைக் கூர்ந்து கவனித்தோமோ அந்த உணர்வின் சக்தியைப் படமாக்கி
2.அந்த உணர்வின் சக்தியை உடலாக்கி
3.அந்த உணர்வின் எண்ணங்களை உருவாக்கி வைப்பது இந்தக் கண்கள் தான்.
 
ஆகவே தான் கண்கள் தோன்றிய பின் ஒவ்வொன்றையும் கண் கொண்டு பார்க்கப்படும் பொழுது அதைப் படம் எடுத்து அந்த உணர்வின் சக்தி தனக்குள் வலுக் கூடி கூர்மை அவதாரமாக நாம் எண்ணிய நிலைகள்… அந்த உணர்வின் தன்மை கொண்டு நமக்குள் உருமாற்றிக் கொண்டு வந்தது.
 
ஆகவே ஞானிகள் காட்டிய அருள் வழிப்படி நம்முடைய கூர்மை அவதாரம் எதில் இருக்க வேண்டும் என்பதைத்தான் மாமகரிஷி ஈஸ்வரபட்டர் எனக்கு உபதேசித்து உணர்த்தினார்.
 
கீதாச்சாரம் என்ற நிலையில் அன்று வியாசக பகவான் எதை உணர்த்தினாரோ
1.அந்த உணர்வலைகள் நமக்கு முன் சுழன்று கொண்டிருக்கின்றது.
2.அவர்கள் உடலிலே வளர்த்துக் கொண்ட அந்த உயர்ந்த சக்திகள் அனைத்தையும் நாம் பெற முடியும்.

September 25, 2025

ஒளியின் சரீரத்தை நமக்குள் “விடாப்பிடியாக உருவாக்கச் செய்யும் சக்தி”

ஒளியின் சரீரத்தை நமக்குள் “விடாப்பிடியாக உருவாக்கச் செய்யும் சக்தி”


முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்கள் என்பது இந்த மனித உடலை உருவாக்கிய சக்திகள் தான். இந்த உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றி உயிருடன் ஒன்றிய ஒளியாகச் சேர்த்து
1.முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்கள் என்பது விண்ணுலகம் சென்ற அந்த மெய்ஞானிகள் நிலையை
2அவர்கள் கண்டுணர்ந்த அந்தச் சக்தியைத் தான் நாம் இன்று தியானத்திலே எடுப்பது.
 
தாவர இனச் சத்தில் விளைந்ததை நாம் புசிக்கின்றோம். அதனின் சத்தை ஆவியாக மாற்றிப் பாலாக எடுத்து இந்த உணர்வின் சத்தை வடிகட்டி ஒவ்வொரு நிலைகளிலும் பார்க்கின்றோம்.
 
பாலை வைத்து இறக்கி தாவர ச்த்தின் நிலைகள் அது ஒரு நிறமாக இருந்தாலும் அதை நீக்கிவிட்டு அதற்குள் வெள்ளையான ரசத்தை எடுத்து அதை நுகரப்படும் பொழுது அந்த உணர்வின் தன்மை இயக்குகின்றது.
 
இதைப் போன்று தான் தாவர இனத்திலே விளைந்த சத்துகள் மனித உடலானாலும் இந்த உடலுக்குள் நின்று மெய்ஞானிகள் காட்டிய அருள் வழிப்படி அந்த உணர்வின் தன்மையை
1.ரசத்தை எப்படி இறக்குகின்றார்களோ இதைப் போன்று மனித உடலில் இருந்து மெய் ஞானிகளின் அருள் வித்தின் நிலைகளைக் காட்டி
2.உடலில் இந்தத் தாவர இனச் சத்தின் தசைகளை நீக்கி அந்த தசைக்குள் விளைந்த உணர்வின் சக்தியை ஒளியாக மாற்றி
3.உயிருடன் ஒன்றிய ஒளியாக அன்று உருவாகியது சப்தரிஷி.
 
ஆறாவது அறிவு சரணபவா குகா நாம் உணவாக உட்கொள்ளும் நிலைகளில் மறைந்திருந்த விஷத்தை மலமாக மாற்றிவிட்டு நல்ல சத்தினையும் நல்ல குணத்தினையும் நமக்குள் எண்ணமாகக் கொண்டு நல்லதை உருவாக்கும் ஆற்றல் பெற்று
1.அதனின் நிலைகள் நல்லதைச் செய்யும் நிலைகள் யாம் எழுப்பும்லியின் நிலை சப்தம்
2.உங்களுக்குள் சொல்லும் உணர்வுகள் அந்த மகிழ்ச்சியூட்டும் நிலைகளில் அதை உருவாக்கச் செய்து
3.அந்த மகிழ்ச்சியைத் தோன்றச் செய்வது தான்… ஆக அது சப்தரிஷி…!
 
ஒளியின் தன்மை பெற வேண்டும் என்று அந்த ஒலியின் நாதத்தால் ஏழாவது அறிவைக் கொண்டு இயக்குவது தான் சப்தம் நாதமும்… ஏழாவது நிலையும் இரண்டற ஒருக்கிணைந்து சப்தரிஷிகள் என்பது.
 
மனித உடலில் மெய் ஒளியாகச் சிருஷ்டித்தவர்கள் தான் சப்தரிஷி என்பது. சப்தரிஷி மண்டலம் என்பது ஏழு அல்ல. எண்ணிலடங்காத நிலைகள் கொண்டு மனிதனிலிருந்து உருப்பெற்றது தான்.
 
மனித வாழ்க்கையில் எண்ணிலடங்காத குணங்கள் இருந்தாலும் ஏழாவது அறிவின் தன்மை கொண்டு தான் நாம் தெளிவாக உணர முடிகின்றது அதைச் செயல்படுத்த முடிகின்றது. அதற்குத்தான் அப்படிப் பெயரை வைக்கின்றார்கள் ஞானிகள்.
 
உணர்வினை ஒளியாக மாற்றிய தன்மையைத் தான் ரிஷியின் மகன் நாரதன் என்று சொல்வது. நாரதனோ அவன் ஒரு முனிவன். அவன் கலகப்பிரியன்.
 
மனித வாழ்க்கையில் வந்த தீமைகளை வென்று உணர்வின் சத்தை ஒளியாக மாற்றித் துருவம் சென்றடைந்து அதன் பின் அதிலிருந்து விளைந்து சப்தரிஷி மண்டலங்களாக உருபெற்றது.
1.ஒளியின் தன்மையாகப் பேரண்டத்தின் உண்மைகளை அறிந்து
2.தீயதை நீக்கி மெய் ஒளியைத் தனக்குள் எடுத்து ஒளியின் சரீரமாகப் பெற்று
3.விண்ணிலே வரக்கூடிய விஷத்தின் தன்மையை அந்தச் சப்தரிஷி மண்டலங்கள் நுகர்ந்து அதை ஒடுக்கி ஒளியாக மாற்றினார்கள்.
 
வைரம் விஷத்தைத் தனக்குள் ஒடுக்கி ஒளியின் தன்மையாக என்றும் நிலையாகப் பிரகாசிக்கின்றது. இதைப்போல இந்த மனித உயிராத்மா ஒளியின் சரீரம் பெற்று விஷத்தை உள்ளடக்கிய பின் அந்த விஷமே ஒளியாக மாறுகின்றது.
 
அந்தச் சப்தரிஷி மண்டலத்தின் உணர்வுகள் ஊடுருவி வரப்படும் பொழுது
1.அதை நம் ண்ணத்தால் நுகர்ந்து உடலுக்குள் சேர்க்கப்படும் பொழுது
2.இந்தப் புவியிலிருந்த ஆசைகளைக்லகமாகக் கலக்கிவிட்டு அந்த மெய் ஞானிகள் பெற்றது போல நாமும் ஆற்ரலைப் பெற முடியும்.
 
அதாவது… நாம் பாலைக் கடையும் போது வெண்ணை திரண்டு வருகிறது. அதை உருக்கப்படும் பொழுது அதனுடைய சக்தி நெய்யாக வடிவது போல
1.அந்த ஞானிகளின் அருள் சக்திகளை நாம் நுகரப்படும் போது மனித வாழ்க்கையில் வந்த விஷமான பிடிப்புகள் அகன்று
2.அந்த விஷத்தின் தன்மையே சத்தான நிலைகள் வடித்து மெய் ஞானிகள் ஒளியாக ஆனது போல நாமும் பெற முடியும்.
 
ஆனால் நாரதன் கலகப் பிரியன்லகமோ நன்மையில் முடியும் அவன் ஒரு முனிவன்.
1.தான் பெற்ற ஒளியின் சரீரத்தை விடாப்பிடியாக அவன் நமக்குள்ளும் சிருஷ்டித்து விடுவான்து தான் முனி என்பது
2.அந்த உணர்வான சக்தியை நமக்குள் சேர்த்து அந்த வலுவான நிலைகளை உருவாக்கச் செய்வது தான் முனி என்பது.
 
ஆகவே மெய் ஞானிகள் உணர்வை எடுக்கப்படும் பொழுது வாழ்க்கையில் நம்மை அறியாயது வரும் தீமைகளைச் சுட்டுப் பொசுக்கிவிட்டு அவன் ஒளிகளிலேயே நாமும் விண் செல்வது.