ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 25, 2020

சாந்தம் கொண்டு செயல்படுவதன் ஆற்றல்களைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்


எத்தனையோ கோடி உணர்வுகள் சேர்த்துத் தான் ஒரு சொல்லின் உணர்வுகளே வருகின்றது…. தனித்து வராது..! அதாவது அதனுடைய சுருதிகள்…!

ஒருவர் சிலர் பேசுவதைப் பார்த்தால் ரொம்பவும் எளிமையாகப் பேசுவார்கள் அதே சமயத்தில் அவர்களிடம் சாந்த குணம் இருக்கும். 

சாந்த குணங்கள் இருக்கிறதென்றால்…
1.மனதில் அந்த உணர்வுகள் ஜாஸ்தி இருக்கும்…
2.எண்ணத்தால் பாய்ச்சுவார்கள்….!
3.இது அவர்கள் சேர்த்துக்கொண்ட உணர்வு.

சில பொருள்களை வெளியிலே பார்த்தால் ஒன்றும் செய்வதில்லை. எடுத்து உள்ளுக்குள் சாப்பிட்டவுடனே குடலுக்குள் போய் அரிப்பைக் கொடுக்கின்றது…. எதிர்மறையாகின்றது.

இதே மாதிரித் தான் ஒரு சிலரின் உணர்வுகள் அதாவது ரொம்ப சாந்தமாக இருப்பார்கள்.
1.சாந்தமாக இருக்கின்றார்கள் என்று நாம் நினைக்கின்றோம்
2.அங்கே அவர்களுக்குள் எண்ணங்கள் பல விதமாக ஓடும்.
3.ஆனால் அவனுடைய நினைவுகள் வெளிப்படும்… (சொல் வராது)
4.மற்றவரின் உணர்வுகள் அவர்களுக்குள் இது சேராது.
5.மற்றவர் உணர்வின் தன்மைகளைக் கெடுதலாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள்
6.ஆனால் இவர்களுடைய நினைவுகள் அதை அடக்கும்.

இப்படி இயற்கையிலே சிலருக்கு விளையும்.

ஆகையினாலே கோடி… கோடி… கோடி… என்பதே மிளகாய்க்குள் காரம் ஆகவேண்டுமென்றால் பல கோடி உணர்வுகள் சேர்த்துத்தான் அந்த ஒரு காரம் ஆகின்றது.

அதே போல் பல கோடி உணர்வுகள் சேர்த்துத்தான் மிளகு ஆகின்றது. ஆனால் அதனுடைய காரம் வேறு..!

எதனுடைய உணர்வு அதிகமாக கூடுகின்றதோ அதற்குத் தக்கவாறு சுவைகள் மாறும்… குணங்கள் மாறும்…. நிறங்கள் மாறும்…!
1;கோபமாகி… அடிக்கடி வேதனையில் இருந்து பாருங்கள்…. ஒரு விதமான நீல நிறமாக இருக்கும்.
2.அதிகமான நிலையில் ரொம்ப இருட்டடைந்த நிலையில் என்ன வாழ்க்கை என்று வெறுப்பான நிலையிலிருந்து பாருங்கள்.. முகம் கருக்கும்.

அதே சமயத்தில் கோபத்தின் உணர்வை அதிகமாக எடுத்துப் பாருங்கள். மற்றவர் உணர்வால் உணர்ச்சிகள் உந்தப்பட்டால் நரம்புகள் எல்லாம் ரொம்ப இறுக்கமாக (TIGHT) ஆகும்.

ஆகவே… எந்த காரணத்தைக் கொண்டும் வெறுப்பு வேதனை கோபம் குரோதம் இதெல்லாம் ஆழத்தில் கொண்டு போய் நம்மைத் தள்ளி விட்டு விடும். குரோதங்கள் வராது அவசியம் தடுக்க வேண்டும்.

கோபம் அதிகமானலும் கூட அடுத்து இந்தக் காரத்தை தணித்து விட்டால் சிந்திக்கும் திறன் வரும்.
1.ஆனால் இந்தக் குரோதம் இருக்கின்றது பாருங்கள்…!
2.எதைச் சொன்னாலும் கேட்காது…
3.தெரிந்து கொண்டேன்…! என்ற நிலையில் நல்லதை யார் சொன்னாலும் எடுக்காது.

ஆகவே… அனைத்தையும் தெரிந்து கொண்டோம் என்ற இந்த நிலைகள் நமக்கு வேண்டாம். தெரிந்து கொண்டே இருக்கின்றோம் என்ற நிலையில்…
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்.
2.பொருளுக்குள் பொருள்… மூலத்திற்குள் மூலம்… ஓமுக்குள் ஓ…ம்…!