ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 22, 2020

துருவ தியானத்தில் எடுக்க வேண்டிய சக்தி எது...?

அகஸ்தியன் காட்டில் விளையும் தாவர இனங்களை எல்லாம் நுகர்ந்தறிந்தான். அதன் இயக்கங்கள் எவ்வாறு...? என்று அவன் அறிந்த உணர்வைத்தான் நானும் நுகர்ந்து உனக்குள் சொல்ல முடிகின்றது என்றார் ஈஸ்வரபட்டர்.

அவன் முதலிலே துன்பப்பட்டான்... உணர்ந்தான்... அவனுக்குள் விளைந்தது. அதை எல்லாம்... எனது சந்தர்ப்பம் நுகரும் அறிவு வந்தது. அறிந்த உணர்வுகள் கொண்டு அது எனக்குள் வலுப்பெறும் தன்மையும் வந்தது.

அகஸ்தியன் துருவனாகும்போது வானை உற்று நோக்கி துருவத்தின் ஆற்றலை அறியத் தொடங்குகின்றான். 27 நட்சத்திரங்களின் ஒளிக்கற்றைகள் எப்படித் துருவத்தை நோக்கி வருகிறது...? என்று அதன் உணர்வின் அறிவாக அவன் அறிந்து கொள்கின்றான்.

திருமணம் செய்யும்போது அதை எல்லாம் தன் மனைவிக்குப் போதித்தான். அந்த உணர்வின் வலுவைவைத் தன் மனைவிக்கும் செருகேற்றி “இருவரும் சமம்” என்ற உணர்வுகள் பெற்றனர்.

அந்த நட்சத்திரங்களிலிருந்து வரும் உணர்வினை இருவருமே நுகர்ந்து இரு உயிரையும்... இரு உணர்வையும்... ஒன்றாக்கிக் கொண்டனர்.

1.நட்சத்திரங்களின் தாக்குதலால் உயிரணு தோன்றியது போன்று
2.பல பல நட்சத்திரங்கள் வெளிப்படும் உணர்வினை இருவருமே உற்று நோக்கி
3.அந்த ஒளிக் கற்றைகளைக் கணவன் பெற வேண்டுமென்று மனைவியும்...
4.மனைவி பெற வேண்டுமென்று கணவனும்... இருவருமே எண்ணுகின்றனர்.

இப்படி அந்த நட்சத்திரங்களிலிருந்து வரும் விஷத் தன்மைகளை அடக்கிப் பழகிய
1.அவர்கள் இருவர் உணர்வுகளும் ஒன்றாக்கப் படும்போது
2.அத்தகைய அணுத்தன்மை உருவாகும் கருவாக அவர்களுக்குள் உருவாகி
3.அந்த உணர்வுகள் இருவர் உடல்களிலும் அணுக்களாக விளைகின்றது.

அத்தகைய அணுக்கள் உருவான பின் அந்த நட்சத்திரங்களிலிருந்து வரும் சிதைவுகளை உற்று நோக்கினால் அந்த ஒளி அலைகளைக் கவர்ந்து அதை உணவாக எடுத்துக் கொள்ளும் நிலை அகஸ்தியனுக்கும் அவர் மனைவிக்கும் வருகின்றது.

நட்சத்திரங்களின் சக்தியால் உயிர் துடிப்பின் நிலை பெற்றது. அதே உயிரின் தன்மை கொண்டு... 27 நட்சத்திரங்களின் சக்திகளைச் சமப்படுத்தி ஒன்றென இணைத்துக் கொண்டனர்.

27 நட்சத்திரங்களின் ஒளிகளைச் சூரியன் தனக்குள் பாதரசங்களை எடுத்து உலகையே ஒளிக்கற்றையாகச் சூரியன் எப்படி மாற்றுகின்றதோ... இதைப் போன்று
1.27 நட்சத்திரங்களின் உணர்வின் அணு செல்கள் விளைந்து
2.உயிருடன் ஒன்றி ஒளியின் அணு தன்மையாகப் பெற்றது தான் இந்தத் துருவ நட்சத்திரம்.

அகண்ட அண்டமும் இந்தப் பிண்டத்திற்குள் எப்படி வந்தது...? என்று அந்த அகஸ்தியன் அறின்றான்...!

கடல் வாழ் நிலைகள் சனிக் கோளின் சக்தியால் புயலால் ஈர்க்கப்பட்டு அதன் உணர்வுகள் மேகங்களில் பரவப்பட்டுப் பரவிய பின் கடல் வாழ் உயிரினங்கள் தரை வாழ் உயிரினங்களின் நிலைகளாகச். சிறு சிறு சங்குகள் நத்தைகளை நீர் நிலைகளில் பார்க்கலாம். (புயல் காலங்களில் பெய்யும் மழை நீரில் நம் வீடுகளிலேயே பார்க்கலாம்)

கடல் வாழ் நத்தைகளைப் போன்று நிலங்களில் உள்ள மற்ற குளம் குட்டைகளிலும் பார்க்கலாம்.... நத்தைகளும் வருகின்றது தவளைகளும் வருகின்றது நீர்ப் பாம்புகளும் தரை வாழ் பாம்புகளும் நீரில் கலக்காத பாம்பினங்களும் உருவாகின்றது

அதனதன் உணர்வுக்கொப்ப அதனுடைய வாழ்க்கையின் தன்மை அமைகின்றது என்பதனை... “இவன் தன்னை அறிகின்றான் அந்த அகஸ்தியன்....!”

விஷத்தின் தன்மை ஒடுக்கியபின்...
வான் வீதியில் தோன்றிய உயிர் முதலில் கடல் வாழ் நிலைகள் பெற்று
2.பின் அதிலிருந்து சனிக்கோளால் கவரப்பட்டு
3.அதன் உணர்வின் தன்மை மேகங்களில் படரப்பட்டு
4.அதன் வழிகள் கொண்டு தரை வாழ் நிலைகளாகப் புழு பூச்சிகளிலிருந்து
5.தரை வாழ் மனிதனாக நாம் எப்படி விளைந்தோம்...? என்ற உண்மையினை உணர்ந்து
6.நட்சத்திரங்களின் உணர்வால் உயிர் எவ்வாறு ஆனது...? என்ற நிலையும் அகஸ்தியன் அறிந்துணருகின்றான்.

தன் உடலில் உள்ள அணுக்களில்...
1.நட்சத்திரத்தின் உணர்வுகள் அது ஒவ்வொன்றையும் மின் கற்றைகளைச் சேர்த்து... தனக்குள் இணைத்து...
2.உயிருடன் ஒன்றி... ஒரே ஒளித் தன்மையாக.. கணவனும் மனைவியும் இதைக் கருவுற்று
3.கருவின் நிலையாக அந்த ஒளியின் அணுவாக உருவாக்கி...
4.அவர்கள் இருவரும் எதை உற்று நோக்கினார்களோ
5.அந்தத் துருவப் பகுதியை எல்லையாக வைத்து அவர்கள் இரு உயிரும் ஒன்றி வாழுகின்றது.... துருவ நட்சத்திரமாக...!

அவன் பெற்ற ஒளி சக்தியை எடுப்பதே துருவ தியானத்தின் நோக்கம்..!