ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 16, 2020

கல்கி

கல்கி பிறந்து விட்டார் என்று தப்பான வழிகளில் சொல்லி வருகிறார்கள். ஆனால், விண்ணில் சென்றவன் கல்கியாகிறான்.

1.இந்த உயிரின் தன்மையில் உணர்வின் தன்மையாகும்போது தான்
2.விண்ணுலக ஆற்றலால்
3.மண்ணுலகில் வாளால் வீசி
4.குதிரையில் பறக்கிறான்.
5.ஏனென்றால்.., மேல் நோக்கிச் செல்கிறான்.

வாளைக் கையில் வைத்தான் என்று கல்கியைக் காட்டுகிறார்கள் ஞானிகள்.

இந்த புவியின் ஈர்ப்பை வீழ்த்திவிட்டு அந்த உணர்வின் தன்மை கொண்டு அங்கே செல்கிறான் என்று உருவமாக்கிக் காட்டுகிறார்கள்.

1.நாம் எண்ணக் கூடியதை நமது உயிர் இயக்குகின்றது.
2.அப்பொழுது நாம் எதை எண்ண வேண்டும்?
3.இந்த புவியின் ஈர்ப்பைக் கடந்து சென்ற ஞானிகளின் உணர்வை
4.நமக்குள் இணைத்தல் வேண்டும் அதை நமக்குள் பெருக்க வேண்டும்.
5.இதைத்தான் கீதையில் நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய், என்று தெளிவாக்கப்பட்டுள்ளது.

இதை விட சாஸ்திரங்கள் உங்களுக்குக் கூறவேண்டும் என்று நினைக்கிறீர்களா?

அத்தனை தெளிவாகக் கொடுத்திருக்கின்றது நமது சாஸ்திரம்.

இது பொய்யல்ல, நாம் பொய்யாக்கி வைத்திருக்கிறோம். உண்மையை நாம் உணர முடியாது மறைக்கப்பட்டு.., இன்று மறைந்தே போய்விட்டது.

நமக்குள் அது தெளிவாக்கப்பட வேண்டும். இதை ஒவ்வொருவரும். நீங்கள் தெளிவுபடுத்த வேண்டும். இந்தத் தெளிவின் தன்மையில் நீங்கள் எல்லோரும் வளர வேண்டும்.

1.”நம் பார்வை இப்படித் தெளிவாக்க வேண்டும்.
2.”தெளிவாக்கும் உணர்வுகள் உங்களுக்குள் விளைய வேண்டும்.
3.உங்கள் பார்வை பிறரைத் தெளிவாக்கும் நிலையாக… தெளிந்த சிந்தனைகள் பெறும் சக்தியாக வரவேண்டும்

உங்களைப் பார்த்தாலே மற்றவர்கள் தெளிந்திடும் மனம் பெறவேண்டும். அந்தச் சக்தி பெறவேண்டும் என்று யாம் பிரார்த்திக்கின்றோம். எமது அருளாசிகள்.