ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 31, 2020

மரணம் – உயிர் எதனால் உடலை விட்டுப் பிரிகின்றது…?


உதாரணமாக ரோட்டிலே நாம் போகும்போது அது கோள்களைப் போன்ற நிலை தான். அங்கே பிறிதொருவர் செய்யும் தவறைப் பார்க்க நேர்கின்றது. கூர்ந்து கவனித்தால் அதை நாம் எடுத்துச் சுவாசிக்கின்றோம்.
1.எந்தக் குணத்தில் எண்ணிச் சுவாசித்தோமோ அது நம் உடல் முழுவதும் பாய்கின்றது.
2.நம்மிடம் இருக்கக்கூடிய நல்ல குணம் கெட்ட குணம் எல்லாவற்றிலும் அது மோதும்.
3.அந்த உணர்வலைகளை நம் உடலுக்குள் முழுவதிற்கும் செலுத்தும்போது அந்த உணர்வின் துடிப்புகள் அதிகமாகின்றது
4.அப்பொழுது நம்மிடம் இருக்கக்கூடிய நல்ல குணங்களைப் பதறச் செய்து விடுகின்றது.

சந்தர்ப்பத்தில் நாம் சுவாசித்த அந்த உணர்வுகள் உள்ளே சென்றவுடன் உடலோடு அமைப்பாக இருக்கும் மற்ற அணுக்கள் ஒவ்வொன்றும் அதற்குத்தக்கவாறு நெளிந்து கொடுக்கின்றது.

அதாவது நாம் ரோட்டில் நடந்து போகின்றோம் பூமியில் பல சக்திகள் வருகின்றது. இந்த வேப்ப மரத்திலிருந்து கசப்புகள் வருகின்றது. அந்தப் பக்கம் குப்பையைக் கொட்டி வைக்கின்றார்கள். இன்னொரு பக்கம் ஒரு தொழிற்சாலையிலிருந்து விஷமான நிலைகள் வெளி வருகின்றது.

ஒரு காற்றடித்தால் இத்தனை விதமான மணங்களும் நமக்கு அடிக்கின்றது. நம் உடலுக்குள் மற்ற மற்ற அந்த அணுக்களின் தன்மை இருந்தாலும் ஒவ்வொரு தடவையும் நாம் சுவாசிப்பது உடல் முழுவதற்கும் எல்லா பாகத்திற்கும் போய்க் கொண்டுதான் வரும்.

நாம் எந்தெந்த குணங்களைச் சுவாசிக்கின்றோமோ அவை அனைத்தும் நம் உடலுக்குள் உறவாடுகின்றது.

ஆனால் தீமையாக இருக்கும் பட்சத்தில் நமக்குள் இருக்கக்கூடிய நல்ல குணங்களில் அது மோதும் போது அப்பொழுது நமக்குப் பதட்டமும் பயமும் ஏற்படுகின்றது.

இப்படி நாம் சுவாசிக்கக் கூடிய நிலைகளில் அடிக்கடி நாம் கெட்டதைச் சுவாசித்தால் என்ன ஆகின்றது…? உடலில் நோய் வருகின்றது…!

நாம் சலிப்பான நிலை கொண்டு “அசிங்கம்” என்ற நிலைகள் கொண்டு மனம் சோர்வடைந்து பேசுகின்றோம். ஒரு நெடியான வாசனைக் கண்டவுடனே உடலுக்குள் அந்த நெடியின் தன்மை வருகின்றது. இதைப் போல…
1.நாம் சுவாசிக்கக்கூடிய ஒவ்வொரு நிலையும்
2.நம் உடலுக்குள் இருக்கக்கூடிய நல்ல குணங்களுக்குள் அது இணைந்தவுடனே
3.அது நம் உடலுடன் சேர்த்து இயக்கப்படும்போது சிறுகச் சிறுக மாசுபடும் நிலையாக வருகின்றது.

இவ்வாறு… வாழ்க்கையிலே அடிக்கடி நாம் சேர்க்கும் இத்தகைய நிலைகளினால் அசுத்தமாகின்றது.

1.உதாரணமாக ஒரு சண்டை போடும் உணர்வைப் பார்க்கும் போது அடுத்து நாமும் சண்டை போடுவதற்குத் தயாராகி விடுவோம்.
2.அடிக்கடி பயத்தினுடைய நிலைகளில் இருப்பதைப் பார்த்தோம் என்றால் அந்த உணர்வுகள் நமக்குள் பய அலைகளைத் தோற்றுவித்துவிடும்.

இதைப் போன்ற உணர்வின் தன்மை அது வளர்ச்சியான பின் அந்த நிலைக்கே நம்மை அது “திசை திருப்பி விடுகின்றது…!” அதை அவ்வப்பொழுது சுத்தப்படுத்தவில்லை என்றால் நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்களின் தன்மை அனைத்தும் மாறிவிடும்.

ஒரு குழம்பு வைக்கின்றோம் என்றால் அதிலே உப்பை அதிகமாகப் போட்டு விட்டால் அந்தக் குழம்பை நாம் வெறுக்கின்றோம். அதே சமயம் காரம் அதிகமாகி விட்டாலோ நாம் வெறுக்கின்றோம்

அதைப் போல நாம் எடுத்துக் கொண்ட பல கோடி உணர்வுகள் நம் உடலுக்குள் இருந்தாலும் ஒவ்வொரு நிமிடமும் சலிப்போ சஞ்சலமோ கோபமோ ஆத்திரமோ இது எல்லாம் நாம் தவறு செய்யாமலே சேர்ந்து விடுகிறது.

ஏனென்றால் பிறர் செய்யும் தவறின் நிலைகளை நாம் பார்க்காமல் இருக்க முடியாது. நல்லது… கெட்டது… என்ற நிலைகளில் நாம் பார்த்தாலும் அந்த உணர்வுகள் நம் உடலில் வந்து சேர்ந்து விடுகின்றது.

1.அன்றைய தினத்தில் நாம் எதை எதையெல்லாம் பார்த்தோமோ அ
2.தற்குத் தகுந்த மாதிரிதான் அன்றைக்கு நமது செயல் எல்லாமே இருக்கும்.

இரண்டு பேர் சண்டை போட்டதைப் பார்த்தால் ஆத்திரமும் பயமும் நாம் எடுத்துக் கொண்ட நிலைகளுக்கொப்ப வேகமாக இந்த அலைகள் கொண்டு அன்றைய இரவில் காது சம்பந்தப்பட்ட வலியோ கண்ணிலே வலியோ ஏற்படும்.

ஏனென்றால் அந்த ஒளி… ஒலிகளை இழுத்துப் பேசும் அந்த மேக்னெட் பவரும் அதனுடைய வேகத் துடிப்பு அதிகமாகிவிடும் ஒரு மோட்டாரை இயக்கினாலும் அதிலே லோடு அதிகமாகி விட்டால் சுழன்றால் அது சூடாகிவிடுகின்றது.

அதைப் போல் சமமான அந்த உணர்வுகளை இழுக்கும்… ஒலியை நமக்கு ஊட்டக் கூடிய அந்த காதுகளில் காந்தம் தேய்மானமாகின்றது. சூடாகும்போது அதனுடைய காந்த சக்தி குறையும்.

பயமோ ஆத்திரமோ இவைகளை அதிகமாக எடுத்தால் நமது கண்ணில் இருக்கக்கூடிய கருமணிகள் பலவீனமாகிவிடும். இதைப்போல சோர்வு சஞ்சலம் அதிகமாக எடுத்தாலும் கரு விழியில் இருக்கக்கூடிய நிலைகள் அது இயக்கச்சக்தி என்ற நிலைகள் கம்மியாகும்.

சஞ்சலமும் சோர்வும் மற்ற உணர்வின் தன்மையும் அடிக்கடி எடுத்தால் செவியில் இருக்கக்கூடிய நாதங்களை இயக்கும் நிலைகள் மந்தமாகச் செய்து அதனுடைய நிலைகள் பதிவாகிவிடும்.

இப்படி கண் காது மூக்கு முதற் கொண்டு நம் உடலில் உள்ள எல்லாவ்ற்றிலுமே அது கலந்துவிடும். நாம் அடிக்கடி சுவாசிக்கும் இந்த உணர்வின் நிலைகள் எலும்புக்குள் இருக்கக்கூடிய உணர்வுகளிலும் அது படருகின்றது.

அந்த எலும்புகளில் இருக்கும் காந்த சக்தியினால் தான் நம் உயிருக்கே கரண்ட்டை உற்பத்தி செய்ய கூடிய காந்தம் உருவாகி அதன் மூலம் இந்த உடலை இயக்க முடிகின்றது.

1.அதாவது… உயிரின் துடிப்பு வரப்படும்போது காந்த அலைகள் உருவாக
2.அந்தக் காந்தம் இருந்தால்தான் (உடலிலே) உயிரே துடிக்கும்

இல்லை என்றால்… காந்த உற்பத்தி குறைவாகி விட்டால்…
1.உயிருக்குள் இருக்கக்கூடிய இந்த துடிப்பு கொண்டு
2.இந்த உடலில் இருக்கும் காந்தத்தை இழுக்காமல்
3.வெளியில் இருக்கக்கூடிய காந்தத்தில் இழுத்துவிடும்… ஈர்க்கப்பட்டு விடும்.

இந்த உடலில் விளைய வைத்ததின் நிலை இது தான் மரணம் என்பது…!

புவியின் ஈர்ப்பிற்குள்… அந்தத் துடிப்பின் நிலை “நம் காந்தம்…” என்றைக்குக் கம்மியாகின்றதோ அந்தச் சமயத்தில் இந்த உயிராத்மா வெளியே வந்துவிடும்.

இதை எல்லாம் ஏன் சொல்கிறோம் என்றால்… உயிருடன் ஒன்றி உணர்வுகளை ஒளியாக மாற்றிய… மகரிஷிகளின் எண்ண ஒளிகள் அனைத்தும் நமக்கு முன்னாடி இந்தக் காற்றிலே மிதந்து கொண்டு இருக்கின்றது.
1.அதை நீங்கள் பெறுவதற்குத்தான் யாம் (ஞானகுரு) கொடுக்கும் இந்த உபதேசமும்
2.அதன் வழி செயல்பட வேண்டிய தியானமும்.