ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 7, 2020

கவலை எல்லாம் மறந்து... நான் மகிழ்ச்சியாக இருப்பதற்காகக் குடிக்கின்றேன்...! என்றாலும் உடலுக்குப் பின் நரகம் தான்...!


குடிப் பழக்கம் உள்ளவரை நீங்கள் அணுகி அவரிடம் இரண்டு மூன்று தடவை பேசிப் பாருங்கள். அந்த உணர்வின் அணுக்கள் ஆகிவிடும். அப்புறம் அந்த நினைவு நமக்குள் வரும்.

அந்த நினைவு வந்தபின் கொஞ்சம் குடித்துப் பாரப்பா…! என்று அவர் சொன்னால் அந்தப் பழக்கம் நமக்கும் வந்துவிடும்.
1.அப்புறம் ஒரு தரம் குடித்து விட்டால் அந்த அணுக்களுக்கு அது குடித்துத் தான் ஆக வேண்டும்.
2.குடிக்கவில்லை என்றால் இது விடாது…. அங்கே இழுத்துக் கொண்டே போகும்.

அப்புறம் என்ன செய்யும்…?

அந்த உணர்வின் தன்மை ஆனபின் நாம் சிந்திக்கும் நிலையே மறக்கும். இதனின் உணர்வு பட்டபின் இதைப் போல குடித்துக் கொண்டிருந்தால்
1.கடைசியில் நாம் இறந்துவிட்டால்
2.ஆன்மா அந்தக் குடியின் மணத்துடன் இருப்போர் உடலுக்குள் தான் போகும்.

குடிப்போர் உடலுக்குள் புகுந்து விட்டால்… குடிக்காமல் இருக்க வேண்டும் என்று அவர் எவ்வளவு தான் எண்ணினாலும் இது விடாது. அது குடிக்க வைத்துக் கொண்டே இருக்கும்.
1.ஏனென்றால் அதற்கு உணவு தேவை
2.அப்புறம் குடித்துக் கொண்டே இருக்கச் சொல்லும்.

அதர்வண வேதத்தில் இந்தப் போதை மருந்தைக் கொடுத்துதான்  மாமிசத்தையும் கொடுத்து… இந்த உணர்வின் தன்மை நினைவிழக்கச் செய்வார்கள். பின் தீயில் இட்டுப் பொசுக்கி அதிலே எடுக்கும் மந்திரத்தைச் சொல்லி இந்த உணர்வினைக் கவர்ந்து இழுப்பார்கள்.

அதாவது அந்த அதர்வண வேதப்படி… மனிதன் உணர்வுக்குள் மந்திரங்களை ஓதி அதனின் தன்மை கொண்டு உருவாக்கி அவனின் நினைவை இழக்கச் செய்து இந்த மதுவை அவருக்குள் கொடுத்து இது சிறுகச் சிறுக இந்த எண்ணத்தை அங்கே அது பதியச் செய்வார்கள்.

மது குடித்தவர்களைப் பாருங்கள்… அது எதாவது யார் மேலயாவது கோபம் வந்தால் சரி. அதிலேயே தான் நிற்கும்.
1.யாரை நினைத்துக் குடித்தார்களோ…
2.இன்றைக்கு அவரை இரண்டில் ஒன்று பார்க்க வேண்டும் என்று சொன்னால்
3.அந்த இரண்டில் ஒன்று பார்க்கச் சொல்லும்.

அப்புறம் அந்தச் சண்டையில் சமரசத்திற்கு ஆயிரம் பேர் சொன்னாலும் கேட்காது.

இதைப்போல அன்று மந்திரத்தில் இந்த மதுவினைச் செருகி மந்திரத்தை ஏற்று… இந்த உணர்வின் தன்மை செருகாக்கிய பின் அது கேட்டுணர்ந்தபின்
1.இந்த மனிதன் இறந்தான் என்றால்
2அதே மந்திரத்தைச் சொல்லி மதுவையும் வைத்தால் அந்த ஆன்மா இவர் கைவல்யம் ஆகும்.

இப்படி அந்த மது அருந்ததுவோரின் உணர்வுகள் எல்லாம் மந்திரக்காரன் கையில் சிக்கி அது என்னென்ன எண்ணங்களுக்குப் பயன்படுத்துகின்றாரோ அதற்குப் பயன்படும்.

நாம் சாதாரணமாக நினைக்கின்றோம். ஆனால் இந்த மதுவின் வேலைகள்… அந்த அதர்வண வேதத்தில் இது அதிகமாகப் பயன்படுத்தியது.

ஏனென்றால் அதர்வண என்ற நிலைகளில்
1.தீமையை விளைவிக்கும் விஷத்தின் தன்மை கொண்டு
2.ஒரு மனிதனுக்குள் இருந்து எடுத்து
3.அந்த நல்ல குணத்தை அழித்துவிட்டுத் தன் எண்ணத்தைப் புகுத்தி
4.அதனின் உணர்வின் தன்மை கொண்டு அந்த மனிதன் இறந்தபின்
5.இந்த மந்திரத்தைச் சொன்னான் என்றால் இந்த ஆன்மா அங்கே கைவல்யம்.

மதுவின் தன்மை வைத்து அந்த உணர்வின் தன்மை கவரப்படும்போது தன் இச்சைக்கு அது வரும்.

அந்த அதர்வண வேதத்தில் இந்த மந்திரம் ஓதுவோர் அனைவரும் மதுவை வைத்திருப்பார்கள்… மாமிசத்தை வைத்திருப்பார்கள்.

அதை வைத்துத்தான் இந்த மந்திரங்கள் ஓதி மற்ற ஆவிகளை அவர்கள் கைப்பிடிப்பார்கள். இத்தகைய நிலையை மனிதனைக் கைவல்யப்படுத்தி விட்டால் அவன் ஆட்டிப் படைக்கும் படைப்பாகப் போய்விடும்.

ஆகவே உங்களை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்...! என்பதற்கே இதைச் சொல்கின்றேன்.

இந்த வாழ்க்கையில் எங்கே போகப் போகின்றோம்…? என்ற எண்ணத்தில்
1.இருக்கும்வரை... “தன்னை மறந்து கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு...”
2.அவர்கள் செய்தார்கள்… இவர்கள் தப்பு செய்தார்கள்...! என்று எண்ணத்தில் குடித்தால்  
3.இந்த உடலை விட்டுச் சென்றபின் அடுத்த கணம் மந்திரவாதி கையில் நேரடியாகப் போய்ச் சேரும்.

இல்லையென்றால் இன்னொரு உடலுக்குள் சென்று அந்தக் குடிப் பழக்கம் உள்ளவர் உடலில் சென்று இன்னும் கொஞ்சம் குடிக்கச் செய்யும். அந்த இரண்டும் ஒன்றாகி விட்டால் இந்த உடலைவிட்டுச் சென்றபின் மீண்டும் அதே மந்திரவாதி கையில் சிக்கும்.

ஒன்றை ஆயிரமாகப் பெருக்கி அந்த உணர்வின் எண்ணத்தைப் பெருக்கிவிட்டால் அது அதர்வண என்று பொருள்

ஆகவே எதனின் மதுவை வைத்து இதை செய்கின்றார்களோ இன்னொரு ஆன்மாவைக் கைவல்யப்படுத்துகின்றான்.

ஆகவே இது போன்ற நிலைகளில் சிக்குண்டு தவிப்பதிலிருந்து நாம் மாறுதல் வேண்டும்.