ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 12, 2015

இந்தச் சூரியக் குடும்பம் அழிந்தால் நாம் எங்கே செல்லவேண்டும்...?

அகண்ட அண்டத்தில் எத்தனை பிரபஞ்சங்கள் இருக்கின்றதோ அத்தனை பிரபஞ்சங்களிலிருந்து உயிரணுக்கள் வளர்கின்றது. உயிரான உணர்வுகள் அங்கே ஒன்றாகச் சேர்கின்றது.

ஆனால் இப்பொழுது இருக்கக்கூடிய பிரபஞ்சம் எல்லாம் அழியும். பத்துப் பதினைந்து ஒரு இருபது வருடங்களுக்கு முன்பு இதேபோல் ஒரு அகண்ட அண்டத்தில் வேறொரு சூரியக் குடும்பம் அழிந்துவிட்டது.

இப்பொழுது நமது சூரியக் குடும்பத்தில் அழிவு மிகப்பக்கத்தில் உள்ளது. ஏனென்றால், இங்கே அணுக்கதிரியக்கங்கள் அதிகமாகிவிட்டதால் பூமியில் எப்படி நில நடுக்கம் கொதிப்பாக உள்ளதோ இதே மாதிரி வரும்பொழுது ந்தச் சூரியக் குடும்பம் சிதையலாம்.

சிதைந்துவிட்டால் அதன் ஈர்ப்புவட்டத்தில் உள்ள கோள்களெல்லாம் எங்கோ சென்றுவிடுகின்றது. அப்பொழுது இவ்வாறு அழிய ஆரம்பித்தவுடன் சூரியன் என்ன செய்யும்? மிக வேகமாகச் சுற்ற ஆரம்பித்துவிடும். இதில் இருப்பது எல்லாம் அது இழுக்க ஆரம்பித்துவிடும்; அப்புறம் ஆவியாக மாற்றும்.

இந்த 27 நட்சத்திரங்களும் சூரியனுக்கு உதவி செய்கின்றது. கரைந்தவுடன் இதிலிருந்து எடுத்துக் கொண்ட உணர்வுகள் எல்லாம் அந்த 27 நட்சத்திரங்களும் 27 சூரியக் குடும்பமாக மாறிவிடுகின்றது.

அப்பொழுது சூரியன் முழுவதும் கரைந்துவிடும். இந்த சூரியக்குடும்பத்தில் பெற்ற உயிர்கள் என்ன செய்யும்? அனாதையாகிவிடும். வேறொரு பிரபஞ்சத்தில் சிக்கி மனித உருவை உருவாக்கும் கோளுக்குள் சென்றால் உடல் பெறலாம். அதுவரை வேதனைப்பட்டுக் கொண்டுதான் இருக்கவேண்டும்.

ஆரம்பத்தில் உயிரணு தோன்றி மிதந்து வரும் வேளையில் எந்தக் கோளின் ஈர்ப்புக்கு வந்ததோ அங்கே உடல் பெறும். இப்பொழுது நாம் (நம் உயிரணு) இந்த பூமிக்கு வராமல் செவ்வாய் கோளுக்குப் போயிருந்தால் விஷக் கிருமியாகத்தான் இருப்போம்.

மற்ற அதிலுள்ள உபகோளுக்குச் சென்றாலும் கிருமியாகத்தான் இருப்போம். இந்த விஷத்திற்குத்தக்க வேதனையைப்பட்டுக் கொண்டு தான் இருப்போம். இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்துகொள்ள வேண்டும்.

நமது குருநாதர் மாமகரிஷி காட்டிய பேருண்மைகள் இவை. இந்த உடலுக்குப் பின் ஒவ்வொருவரும் எங்கே செல்ல வேண்டும் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

பாசத்துடன் இன்றைக்கு எல்லோருக்கும் உதவி செய்தேன். எனக்குத் துரோகம் செய்தான் என்றால் இந்த உணர்வு விளைந்துவிட்டால் உடலைவிட்டு வன் உடலுக்குள் தான் செல்லும்.

மீண்டும் பிறவிக்கு வந்துவிடுகின்றோம்.

பிறவிக்கு வந்து விட்டால் மறுபடியும் பல கஷ்டங்களை அனுபவித்துத் தான் வரவேண்டும். நான் இப்பொழுது சாகாவரம் பெறுகின்றோம். மறுபடியும் உடலை உருவாக்கும் உணர்வுகளை எடுத்து சாகாக்கலையாக மீண்டும் மீண்டும் பல உடல்களைப் பெறச் செய்யும்

ஆனால், நாம் வேகா நிலை பெறவேண்டும் என்று ஞானிகள் காட்டியுள்ளார்கள். வேகா நிலை பெற்றதுதான் துருவ நட்சத்திரம், உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரம் பெற்றது. இந்த பிரபஞ்சத்தில் எத்தகைய விஷம் வந்தாலும் இது வேகாது ஒளியாக இருக்கும்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வு நமக்குள் அதிகமானால் இந்த உடலை விட்டு உயிர் பிரிந்து தான் ஆக வேண்டும்.

ஏனென்றால் இத்தனை தியானம் இருந்தார்கள், "இவர் இறந்து போய் விட்டார்" என்று சொன்னால் என்ன ஆகும்? நாம் எடுக்கும் கணக்குகள் எது அதிகமோ அதற்குத் தக்கவாறு கொண்டு போய்விடும்.

துருவ தியானத்தில் அதிகமாக துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்தோம் என்றால் நாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்குத் தான் செல்கின்றோம்.


அப்பொழுது இதில் இருப்பதைக் கரைத்துவிடுகின்றது. சப்தரிஷி மண்டலத்துடன் இணந்து நாம் அழியா ஒளியின் சரீரம் பெறுகின்றோம்.