ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 28, 2014

லாட்ஜுகளில் CAMP போட்டு ஜாதகம் சொல்பவர்களின் உண்மை நிலை

1. செய்வினையை நீக்க யாகம் செய்ய வேண்டும் என்பார்கள்
அதாவது என்ன செய்வார்கள் என்றால், லாட்ஜுகளில் தங்கிக் கொள்வார்கள். லாட்ஜில் தங்கிக் கொண்டு என்ன செய்வார்கள் என்று சொன்னால், இந்தக் கருவித்தையை வாங்கி வைத்திருப்பார்கள்.

இவர்களைப் பார்க்க ஜாதகத்தைக் கொண்டு வருவார்கள்.

பார்த்தவுடனே உங்க வீட்டில் இன்னென்ன நிலைகள் எல்லாம் நடந்தது. இந்த மாதிரி நடந்தது. ஆக, இதற்கு 200 ரூபாய் பீஸ் (FEES) வாங்கிக் கொள்வார்கள். க்யூ வரிசையில் நிறுத்தி இந்த வேலைகளைச் செய்து கொண்டிருப்பார்கள்.

இங்கே செய்வினையைச் செய்தவுடனே, உங்கள் வீட்டில் இப்படி இருக்கிறது, அப்படி இருக்கிறது, அதற்கு இப்படி யாகத்தைச் செய்யவேண்டும் என்று சொல்வார்கள். சொல்லிவிட்டு
அந்த யாகத்தைச் செய்து தருவதற்கு
இரண்டு பேரைத் தயார் செய்து வைத்திருப்பார்கள்.
2. யாகம் செய்வதாகச் சொல்லி (ஏஜெண்டை வைத்து நடத்தி) பணம் சம்பாதிக்கின்றனர்
அப்புறம் அந்த யாகத்தைச் செய்வதற்கு நாலாயிரம், ஐந்தாயிரம் கொடுங்கள் என்று பாவத்தைப் போக்குவதற்கு யாகத்தைச் செய்யச் சொல்வார்கள். ஜாதகக் குறிப்பை வைத்து அதற்கென்று ஏஜெண்டை வைத்துச் செய்கின்றார்கள்.

நான் சொல்லவில்லை. உங்கள் ஜாதகத்தில் நடப்பது இப்படி எல்லாம் இருக்கிறது.

ஆகவே, நல்ல வித்தைகளைத் தெரிந்தவரை வைத்துச் செய்யுங்கள் என்று சொல்கிற மாதிரி சொல்லி, அந்த ஏஜெண்டை வைத்துக் கொண்டே “தெரிந்தவர்கள் இருந்தால் சொல்லுங்கள்”

இப்படிச் சொல்லி, அவர்களை வைத்து அதிலே செய்து பணத்தைப் பங்கு போட்டுக் கொள்வது. இப்படித்தான் சில நிலைகள் இந்த மாதிரித்தான் இன்றும் நடக்கின்றது.

ஏனென்றால், இந்த உலகில் எப்படி எல்லாம் மனிதன் ஏமாற்றப்படுகின்றான்? எப்படி எல்லாம் மனிதர்கள் ஏமாற்றிக் கொண்டிருக்கின்றார்கள் நாம் ஏமாந்து கொண்டிருக்கின்றோம் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்

மனிதன் தான் வாழ்க்கையில் கஷ்டப்படும் பொழுதெல்லாம் நம்மையறியாமல் இந்த சூழ்நிலைகள் எல்லாமே வருகின்றது. இதிலிருந்தெல்லாம் நாம் மாறவேண்டும்.

இதே மாதிரி எத்தனையோ இடங்களில் நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எம்மைப் போகச் சொல்லுவார். அங்கே தவறு நடக்கும் பொழுது, அங்கே போய் யாம் அவர் சொன்ன நிலைகளைச் செய்வது.