ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 16, 2014

கடவுளும் இல்லை... பூதமும் இல்லை...! என்று சொன்னவர் குழந்தைக்கு நடந்தது...!

இப்பொழுது இறந்த பிற்பாடு நாம் என்ன செய்யப்போகின்றோம்? பேய் ஆடுகிறதா? பேய் ஆடுமோ? எப்படி அது வந்துவிடும் பார்க்கலாம், என்றெல்லாம் சொல்வார்கள். பிறகு அவர்களுக்குள் புகுந்தால்தான் தெரியும்.

இப்படித்தான் ஒருவர் சாமியே இல்லை, பூதமே இல்லை என்று எம்மிடம் சொல்லிக் கொண்டிருந்தார். அவர்கள் குடும்பத்திற்குள்ளே என்ன ஆகியது? இதே மாதிரி இறந்த ஒரு ஆன்மா அவர் குடும்பத்திற்குள் அவருடைய பிள்ளை மேல் ஆவி வந்து பிடித்துக்கொண்டது.

வந்தவுடனே, என்னமோ கதையெல்லாம் சொல்ல ஆரம்பிக்கின்றது, என்று சொல்லிக் கொண்டு என்னிடம் அவர் ஓடி வந்தார்.

என்னிடம் கடவுளே இல்லையென்று நீ சொன்னாய் அல்லவா என்றேன்.

அடக் கடவுளே..! என் பிள்ளை அதற்குத் தெரியாத வார்த்தையெல்லாம் பேசுகின்றது. எப்படி என்று தெரியவில்லை என்கிறார்.

அடுத்து அந்தக் குழந்தை தலையிலிருந்து குங்குமம் வருகின்றது. அந்தக் குழந்தைக்கு ஒன்றுமே தெரியாது. ஆனால், தலையிலிருந்து அந்த குங்குமம் வருகின்றது. ஏதாவது, பேசினால், நல்ல நறுமணங்கள் வருகின்றது.

இது என்னப்பா..,? விசித்திரமாக இருக்கின்றது என்கிறார்.

நீ தான் பேயும் இல்லை, பூதமும் இல்லை என்று சொல்கின்றாய். சாமியே இல்லை என்கிறபோது இது எப்படி இருக்கிறது என்று பார்.

ஒரு மனித உடலை இழந்த பின், அந்த ஆன்மா இன்னொரு உடலுக்குள் போனால் என்ன செய்கின்றது? என்பதை நீ தெரிந்து கொள் என்று அவரிடம் சொன்னேன்.

அப்புறம் தன்னுடைய நாஸ்தீகத்தை எல்லாம் விட்டுவிட்டார்.

நீ மந்திரவாதிகளிடம் எல்லாம் போக வேண்டாம். நீ நான் சொல்லும் வழிகளில் இந்த மாதிரி மகரிஷிகளை எண்ணி தியானம் செய். தியானம் செய்து
மகரிஷிகளின் அருள் சக்தி
என் குழந்தை பெறவேண்டும் என்று பாய்ச்சு.

அந்த குழந்தையின் தன்மைக்குள் செயல்படும் ஆவியின் தன்மைகளை நீ நிறுத்த முடியும் என்று நான் சொன்னேன்.

அப்புறம் நான் சொன்ன பிரகாரம் அவர் தன் குழந்தைக்குச் செயல்படுத்தினார். அது சரியாகியது.