ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 19, 2014

கொலை செய்யப்பட்ட ஆன்மா சாட்சி சொல்கின்றது

ஒரு சமயம், ஒரு கசாப்புக் கடைக்காரர் தன் பெண்ணை ஒருவன் கூட்டிக் கொண்டு ஓடிவிட்டான் என்று சொல்லிவிட்டு என்ன செய்தார்?

தெரியாமல் இரண்டு பேரையும் வரச் சொல்லி, வெட்டிக் கொலை செய்து ஆற்றில் போட்டுவிட்டார். அதை மறைப்பதற்கு ஒரு M L A வைத்து நிவர்த்தி செய்து அந்தப் பிரச்னையைச் சரிக்கட்டினார்கள்.

ஆனாலும், இறந்த அந்த ஆன்மா இன்னொரு உடலில் புகுந்து, இந்த மாதிரி என் அப்பா துண்டு துண்டாக எங்களை வெட்டி ஆற்றிலே போட்டார் என்று வந்து சாட்சி சொல்கிறது. இது நடந்த நிகழ்ச்சி. இதை அனுபவபூர்வமாக குருநாதர் எமக்குக் காட்டுகின்றார்.

அப்புறம் எப்படியோ அந்த விஷயத்தை பல நிலைகள் செய்து போலீசுக்கெல்லாம் போய் மடக்கிவிட்டார்கள்.