ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 5, 2014

"நோயாளிகளைக் காக்க வேண்டும்...!" என்று ஆண்டவனுக்கு லெட்டர் எழுதிப் போடச் சொன்னார் குருநாதர்

1. டாக்டரிடம் சீட்டைக் கொடுக்கச் சொன்னார் குருநாதர்
ஒரு சமயம் குருநாதர் பழனியில் ஆஸ்பத்திரியில் இருக்கும் பொழுது என்ன செய்தார் தெரியுமா?

டாக்டரிடம் போய், “நோயாளிகள் எல்லோரும் குணமாக வேண்டும், இல்லையென்றால் சொர்க்கத்துக்கு அனுப்பிவிடுவேன்” என்று சொல்லி சீட்டு எழுதிக் கொடுத்துவிட்டு வாடா.., என்று என்னிடம் சொல்கிறார் குருநாதர்.

நான் போய்விட்டு வந்தேன். என்னை “உள்ளே வராதே என்று டாக்டர் சொல்லிவிட்டார் என்றேன்.

குருநாதர் என்ன சொல்கிறார். “ஏண்டா., நீ அங்கே போகவே இல்லை, என்னிடம் பொய் சொல்கிறாய். போய் நிஜமாகவே கொடுத்துவிட்டு வா என்கிறார்.

இவர் சொல்கிற வார்த்தையெல்லாம் அங்கே சொன்னால் என்ன செய்வார்கள்?

“நான் எல்லா சக்தியையும் பெற்றிருக்கின்றேன்” என்று டாக்டரிடம் போய் சொல்லுடா என்கிறார் குருநாதர்.

ஐயோ, அவர் பண்ணின கூத்து கொஞ்ச நஞ்சமல்ல. இப்படியெல்லாம் சொல்லி அடுத்து என்ன செய்தார்?
2. லெட்டரில் விலாசம் “ஆண்டவன்” என்று எழுதச் சொல்கிறார் குருநாதர்
நீ போய் அவனுக்கு லெட்டர் எழுதிப் போடுடா. லெட்டர் எழுதிப் போட்டு போஸ்ட் ஆபீசில் கொண்டு போய் போடு. உடனே எல்லோருக்கும் நோய் நீங்கவேண்டும் என்று சொல்லி ஆண்டவனுக்கு எழுதிப் போடுடா என்\கிறார்.

சாமி, விலாசம் என்ன என்று கேட்டேன்?

எழுதுடா., ஆண்டவன்” என்று எழுதிக் கொண்டு போய் போடு! என்று என்னை எழுதச் சொல்லிப் போடச் சொல்கிறார் குருநாதர்.

இந்த மாதிரி பெரிய கூத்தெல்லாம் பண்ணுவார் நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர். அப்புறம் விளக்கமெல்லாம் கொடுப்பார். 

இப்பொழுது, இதனுடைய உண்மையின் இயக்கங்களை, எண்ணங்களை இயக்கி உன்னை ஆள்பவன் யார்?

உன் உயிர் தான்.

“அவனிடத்தில் நீ சொல்லுடா..,” அந்த அருள் ஒளி பெறவேண்டும் என்று நீ எண்ணு, உன் இருள் போகவேண்டும் என்று இந்த உணர்வின் தன்மையை நீ நினைத்து எழுது.

அப்பொழுது எழுதுவது நீ. அங்கே எண்ணித்தான் நீ எழுதுகிறாய். இந்த லெட்டர் என்ன செய்யும்? நீ போடு.

ஆக, உனக்குள் அந்த அருள் சக்தி வருகின்றது. அதே சமயத்தில், அவர்களும் அங்கே அந்த அருள் சக்தி பெறுகின்றார்கள்.

இப்படியெல்லாம் சுருக்கமாக
அந்த இயற்கையின் நிலைகளை,
உயிரின் இயக்க நிலைகளை
எனக்குப் புரியும்படி செய்தார் நமது குருநாதர்.

ஆக, வேறு ஒன்றும் வேண்டியதில்லை. அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும். எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் என் உடல் நன்றாக ஆக வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தாலே போதும். இந்த உணர்வுகள் அங்கே பாயும்.
3. மகரிஷிகளின் அருள்சக்தி பெற நீங்களும் எழுதுங்கள்
மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று, உடல் நன்றாக வேண்டும் என்று இப்படி எழுதிக் கொண்டேயிருங்கள்.

அப்பொழுது இங்கே என்ன செய்யும்?

அங்கே பாஸாகிப் போய்விடும். உங்கள் எண்ணமே அந்த உணர்வாகும், எண்ணங்கள் கலங்குவதில்லை.

என் உடல் நன்றாக வேண்டும். இந்த நோய் நீங்க வேண்டும் என்று சொல்லி நீங்கள் லெட்டர் எழுதுங்கள். அப்படி லெட்டர் எழுதும் பொழுது, ஆண்டவனை இங்கே (உங்கள் உயிருக்குள்) போய்ச் சேருகின்றது.

அந்த உணர்வை அங்கே சிந்தித்துத்தான் நீங்கள் எழுதுகின்றீர்கள்.
அந்த எழுத்து எல்லாம் இங்கே வருகின்றது.
இதையெல்லாம் அங்கே காட்டுவதற்காக
குருநாதர் எமக்கு ஒரு வழியைக் காட்டினார்.

ஏனென்றால், இன்றிருக்கக்கூடிய விஷ உலகில் உங்களைக் காக்க அந்த அருள்ஞானத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். உங்களுக்குள் தீமைகள் புகாது தடுத்துக் கொள்ளுங்கள். எமது அருளாசிகள்.